தொழில்நுட்பம்
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.444 ரீசார்ஜ் திட்டம் பற்றி தெரியுமா?


புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டதை அடுத்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 444 ரூபாய்க்கு ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர முடியும் என்று ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டு வருகிறது.
ரூ.444-க்கு ரீசார்ஜ் செய்தால், 56 நாட்களுக்கு, தினமும் 2 ஜிபி தரவு, என மொத்தமாக 112 ஜிபி தரவு 4ஜி தரவு கிடைக்கும். இந்த இணையதள தரவு முடிந்த உடன் இணைய வேகம் 64kbps ஆக குறையும்.
மேலும் வரம்பற்ற இன்கம்மிங், அவுட்கோயிங் அழைப்புகள், மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாகக் கிடைக்கும்.
ரூ.444 ரீசார்ஜ் திட்டங்கள் மட்டுமல்லாமல், ரூ.599, ரூ.2,399, ரூ.249க்கு தினமும் 2 ஜிபி தரவுடன் ரீசார்ஜ் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோவில் உள்ளன.
ரூ.2,399-க்கு ரீசார்ஜ் செய்தால், 365 நாட்களுக்குத் தினமும் 2 ஜிபி தரவு, 100 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்டவையும் கிடைக்கும். ரூ.2,599-க்கு ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
தொழில்நுட்பம்
‘எங்கள விட்டு போயிறாதீங்க..’ வாட்ஸ்அப் நிறுவனம் கதறல்



வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி பெரும்பாலானோர் சிக்னல் செயலியை நோக்கி படையெடுக்கும் நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் தனியுரிமைக் கொள்கை, நிபந்தனைகளைப் புதுப்பித்து, அதனை ஏற்றுக்கொள்வதற்கு பிப்ரவரி 8 ஆம் தேதி வரையில் காலஅவகாசம் வழங்கியது. அந்த பிரைவசி கொள்கைகள் அனைத்தும் பயனர்களின் தரவுகளுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக, பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் விதமாக இருந்ததாக புகார்கள் வந்தன.
இதனால் வாட்ஸ்அப்புக்கு மாற்றான செயலியை வாடிக்கையாளர்கள் தேடத்தொடங்கினர். இதனிடையே சிக்னல் செயலியைப் பயன்படுத்துமாறு எலான் மஸ்க் தெரிவித்தால், பெரும்பாலானோர் சிக்னல் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் சிக்னல் ஆப் நம்பர் ஒன் இடத்திற்கு வந்தது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளது. அதில், வாட்ஸ்அப் பிரைவசி குறித்து தவறான, குழப்பான தகவல்கள் பரபரப்பப்படுவதாகவும், அந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் நாங்கள் உங்கள் உதவுகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், பிரைவசி கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட கால அவகாசத்தை மே 15 வரை நீட்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம்
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து குறிப்பிட்ட செயலிகள் நீக்கம்.. காரணம் என்ன தெரியுமா?


கடன் வழங்கும் செயலிககளை கூகுள் நிறுவனம் தனது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
கூகுள் நிறுவனம் தனது கொள்கைக்கு முரணாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படும் செயல்களை அவ்வபோது களை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பயனர்களுக்கு கடன் வழங்கி, மிரட்டி லாபம் பெறும் சிறுசிறு செயலிகளை நீக்கியுள்ளது.
இந்த செயலிகள் குறிப்பிட்ட அளவு வரையிலான தொகையை மிகஎளிதாக வழங்கி விடும். கடன் வழங்கப்படும் போதே பயனர்களின் மொபைல் எண்,கேமரா, எஸ்எம்எஸ் என அனைத்தையும் அணுகுவதற்கான அனுமதியையும் பயனர்களிடத்தில் கேட்கும். அதை பெரிதுபடுத்தாத பயனர்களோ செயலி கேட்கும் அணுகல் அனைத்திற்கும் அனுமதி வழங்கி விடுவர்.
இதனையடுத்து கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்கு பல மிரட்டல்களையும், பயனர்களின் விவரங்களை வைத்து பொதுவெளியில் தரக்குறைவாக விளம்பரமும் செய்யும். இதனால் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் வெளிநாடுகளில் நடந்துள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் அதுபோல கிட்டத்தட்ட நூறு செயலிகள் இருப்பதாக தெரியவந்தது. இது கூகுளின் கவனத்திற்குச் செல்ல கடன் வழங்கும் குறிப்பிட்ட செயலிகளை அப்படியே நீக்கி விட்டது.
தொழில்நுட்பம்
WhatsApp-ல் இனி நமது பிரைவஸி அவ்ளோதானா..?- சில வதந்திகளும் விளக்கங்களும்



இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி வாட்ஸ்அப். அதன் பிரைவஸி கொள்கைகளில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அந்த தேதிக்குள் வாட்ஸ்அப்பின் மாற்றப்பட்ட பிரைவஸி கொள்கைகளுக்கு, அதைப் பயன்படுத்தும் நபர் அனுமதி கொடுக்கவில்லை என்றால், செயலியை பயன்படுத்த முடியாது என்று நோட்டிஃபிகேஷன் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த மாற்றப்பட்ட பிரைவஸி கொள்கை மூலம், இனி வாட்ஸ்அப்பில் நாம், நமது நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பேசும், பகிர்ந்து கொள்ளும் உரையாடல்கள், புகைப்படங்கள், காணொலிக் காட்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் பார்க்க முடியும் என்று பரவலாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த தகவல்களை மூன்றாம் தரப்பினரிடமும் வாட்ஸ்அப் விற்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
இப்படி பரவிய தகவல்களால் வாட்ஸ்அப்பை பலர், தங்கள் ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்கிவிட்டனர். பலர் ‘சிக்னல்’ மற்றும் ‘டெலிகிராம்’ போன்ற சாட்டிங் செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.
இந்நிலையில் இந்த ‘தகவல்களுக்கு’ முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வாட்ஸ்அப் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளது. அவை பின் வருமாறு:
1.உங்கள் தனிப்பட்ட மெஸேஜ்களையோ அல்லது அழைப்புகளை வாட்ஸ்அப்பால் பார்க்க முடியாது. ஃபேஸ்புக் நிறுவனமும் அதைப் பார்க்காது.
2.நீங்கள் மெஸேஜ் செய்யும் அல்லது அழைக்கும் நபர்களுடைய தரவுகளை வாட்ஸ்அப் சேமிக்காது.
3.நீங்கள் வாட்ஸ்அப் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் லொகேஷன்களை வாட்ஸ்அப் நிறுவனம் பார்க்காது. ஃபேஸ்புக்கும் பார்க்காது.
4.உங்கள் கான்டேக்ட்களை வாட்ஸ்அப் நிறுவனம், ஃபேஸ்புக்கிடம் பகிர்ந்து கொள்ளாது.
5.வாட்ஸ்அப் குழுக்கள் பிரைவஸியுடன் இயங்கும்.
6.நீங்கள், உங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் மெஸேஜ்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளலாம்.
7.நீங்கள் உங்கள் தரவுகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
பொதுவாக, ‘இனி வாட்ஸ்அப்பில் பகிரப்படும் எந்த தகவல்களுக்கும் உத்தரவாதம் கிடையாது’ என்று பலரும் தெரிவித்து வரும் நிலையில், இப்படியான விளக்கத்தை வாட்ஸ்அப் நிறுவனத் தரப்பு கூறியுள்ளது. இது எந்தளவுக்கு மக்களிடம் எடுபடும் என்று தெரியவில்லை.
கடந்த சில நாட்களில் வாட்ஸ்அப் குறித்து தொடர்ச்சியாக பரபரப்பட்ட இந்த மாதிரியான தகவல்களால், சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
டெலிகிராம் தரப்பும், வாட்ஸ்அப்பின் இந்த புதிய பிரைவஸி பாலிசியை கடுமையாக விமர்சித்து வருகிறது. ‘இது வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் பயனர்களை மதிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளது டெலிகிராம் நிறுவனத் தரப்பு.
We want to address some rumors and be 100% clear we continue to protect your private messages with end-to-end encryption. pic.twitter.com/6qDnzQ98MP
— WhatsApp (@WhatsApp) January 12, 2021