உலகம்
அதிகமா டீ குடிப்பவரா நீங்கள்? நல்லா டீ செய்ய தெரியுமா? இந்த சர்வேயை பாருங்க !


லண்டன் : பிரிட்டனில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வே ஒன்றில் இங்கிலாந்தில் 2 சதவிகித மக்களுக்கு மட்டுமே சரியான முறையில் தேநீர் தயாரிக்க தெரிந்துள்ளதாக ஆச்சர்யம் கொடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் அதிகமாக தேநீர் குடிக்கும் மக்களை கொண்டுள்ள நாடுகளில் பிரிட்டனும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் டீக்கு எப்போதுமே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. குறிப்பாக மழை காலம் எல்லாம் வந்தால் போதும் அதிகம் டீ குடிக்காதவங்க கூட குடிக்க தொடங்கிவிடுவர். இந்தியாவின் பெரு நகரங்களில் பேச்சுலர் வாழ்க்கையை கழித்த பெரும்பாலானோருக்கு நிச்சயம் டீ பரிட்சயம் ஆகியிருக்கும். அந்த அளவிற்கு நம் மக்களுக்கு தேநீருடன் நெருங்கிய தொடர்பு உண்டு.
ஆனால் எவ்வளவு தான் டீயை ரசிச்சு குடிக்க தொடங்கியிருந்தாலும், எத்தனை பேர் அதை மிக சரியாக போடுவர்? இந்தியாவை பொறுத்தளவில் என்னதான் சமைக்க தெரியாவிட்டாலும், குறைந்த பட்சம் பிளாக் டீயோ அல்லது பால் டீயோ போட தெரிந்திருக்கும். உலகத்தின் பெரும்பான்மையான நகரங்களில் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளது. துருக்கி தான் உலகிலேயே அதிகப்படியான தேநீர் குடிக்கும் மக்களை கொண்டுள்ள நாடு. அங்கு சராசரியாக ஆண்டுக்கு ஒவ்வொரு நபரும் 6.96 lb அல்லது 3.16 கிலோ டீ குடிக்கின்றனர். அதே போல தான் பிரிட்டனிலும். அங்குள்ள மக்கள் சராசரியாக 4.28 lb அல்லது 1.94 கிலோ தேநீர் ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக்கொள்வதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது.
பிரிட்டிஷ் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தேநீர் தயாரிக்கும் விதம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் சமீபத்தில் அங்கு தேநீர் குடிப்பவர்கள் குறித்து எடுக்கப்பட்ட சர்வே ஒன்று ஆச்சர்யம் கொடுக்க கூடிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் 2000 பெரியவர்களிடம் டிக் வாட்ச் மேற்கொண்ட சர்வேயில் 2 சதவிகிதம் மக்கள் மட்டுமே தேநீரை சரியான வழிமுறையில் செய்யவது குறித்து தெரிந்து வைத்துள்ளனர்.
இங்கிலாந்தில் 50ல் ஒருவர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்கு தேநீர் காய்ச்சுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு சராசரியாக ஒரு நபர் டீபேக்கை வெறும் 1 நிமிடம் 10 வினாடிகளுக்கு கோப்பையில் விட்டுவிடுவார் என்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் எந்த மாவட்டத்தில் சிறந்த மற்றும் மோசமான தேநீரை உருவாக்குகின்றனர் என்றும் சர்வேயில் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 நிமிடம், 26 விநாடிகள் தேநீர் தயாரிக்கும் நேரத்துடன் மான்செஸ்டர் முதலிடத்தில் உள்ளது. பர்மிங்காம் 58 வினாடிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. சரி இப்போது சொல்லுங்க நீங்க எவ்வளவு நேரத்தில் எப்படி டீ போடுவீங்க ?
உலகம்
உலக போரை விட அதிகமான உயிரிழப்பு.. அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாகிய புதிய ஆய்வு முடிவுகள்!


நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 3 போர்களின் போது அமெரிக்காவில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகம் என்பது அதிர்ச்சியளிக்க கூடிய செய்தியாக உள்ளது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஒரு மர்ம வைரஸ் பரவி வருவதாக செய்தி வெளியான போது உலகின் ராஜாவாக இருக்கும் அமெரிக்கா தான் மோசமாக பாதிக்கப்பட உள்ளதை நிச்சயம் அறிந்திருக்காது. உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் தான் அதிகம். அதேபோல உயிரிழப்பும் அங்கு மிக அதிக அளவில் உள்ளது.
அங்கு இதுவரை 28 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இரண்டாம் உலக போரின் போதே அமெரிக்காவில் 405,000 பேர் தான் உயிரிழந்தனர், மற்றும் வியட்நாம் போரின் போது 58,000 பேரும், கொரிய போரின் போது 36,000 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கைகளை விட கொரோனாவில் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகமாகவே உள்ளது. இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
இந்த எண்ணிக்கை என்பது உலகம் முழுவதிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 20 சதவிகிதத்தை கொண்டுள்ளது. உலகம் முழுவதிலும் 25 லட்சம் பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
வேகமாக உயர்ந்த உயிரிழப்பு:
2020 ஜனவரி இறுதியில் அமெரிக்காவுக்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கியிருந்தாலும் பிப்ரவரியில் தான் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. அடுத்து 4 மாதங்களுக்கு பிறகு ஜூன் மாதத்தில் தான் உயிரிழப்புகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது. ஆனால் அதன் பின்னர் செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. பின்னர் டிசம்பரில் 3 லட்சமாக உயர்ந்த எண்ணிக்கை அடுத்த ஒரு மாதத்திலேயே 4 லட்சமாக அதிகரித்துள்ளது. ஐந்து லட்சமாக உயரவும் அடுத்த ஒரு மாத காலம் மட்டுமே எடுத்துக்கொண்டது.
Also Read: இந்தியாவில் புதிய ‘உருமாறிய கொரோனாவால்’ 7,000 பேர் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்!
இப்படி மிக வேகமாக அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. ஜனவரியில் ஒரு நாளைக்கு சராசரியாக 4000 என்கிற அளவில் இருந்த உயிரிழப்புகள் இப்போது 1900 ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை கூறிய காரணம் அமெரிக்காவில் அதிக அளவிலான தடுப்பூசிகள் போடுவது கிடையாது, மாறாக மக்கள் குளிர் காரணமாக வீடுகளிலேயே தங்கியிருப்பதும், முக கவசங்களை முறையாக அணிவதால் தான் என்கின்றனர் நிபுணர்கள்.
இருப்பினும் மாற்றமடையும் புதிய வகை கொரோனா வைரஸ்கள் இந்த எண்ணிக்கையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பனி, மற்றும் வானிலை தொடர்பான மின் தடைகள் காரணமாக சில பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் தெற்கு பகுதிக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதும் தடைபட்டுள்ளது.
இதுவரை 44 மில்லியன் அமெரிக்கர்கள் குறைந்த பட்சம் தங்களது முதல் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். கடந்த ஏழு நாட்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி ஒரு நாளைக்கு கூறிவந்த பட்சம் 1.6 மில்லியன் அமெரிக்கர்கள் கொரோனா தடுப்பூசிகளை பெறுகின்றனர்.
இதுவரை ஃபைசர் மற்றும் மாடெர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகளை அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இவற்றுடன் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டால் தடுப்பூசி வழங்கும் அளவு கணிசமாக உயரும் என்றும் ஜூன் இறுதிக்குள் 100 மில்லியன் தடுப்பூசி வழங்கப்பட்ட அளவை எட்ட வேண்டும் என்கிற அமெரிக்க அரசின் இலக்கை அடைய முடியும் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலகம்
வேற வழியே இல்லை.. கடைசியில் இந்தியாவிடமே உதவியை கேட்ட இலங்கை.. ஆதரவு கிடைக்குமா?


கொழும்பு: அடுத்த வாரம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கையில் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் சமயத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அதில் அரசின் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்பட உள்ள நிலையில் இதில் இந்தியாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
சமீப காலங்களில் இந்தியா – இலங்கை இடையேயான உறவு அவ்வளவு சுமூகமானதாக இல்லை. சீனாவின் கை அங்கு ஓங்கி வருவதால் இந்தியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ராஜபக்சே சகோதரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக இவர்கள் நடந்து கொண்டனர்.
பின்னர், இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் கச்சத்தீவு பகுதிகளில் மிகப்பெரிய காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கினர். இந்தியாவின் கேந்திர பாதுகாப்புக்கு இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என தெரிந்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து, திருகோணமலையில் இந்தியா வசம் இருந்த எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளையும் இப்போது இலங்கை திரும்பப் பெறுகிறது .
Also Read: எச்-1 பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. பைடன் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு!
இப்படி இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் உரசல் நீடித்துவரும் நிலையில் தான் அடுத்தவாரம் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் நடக்கும் விசாரணையில் இந்தியாவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த இலங்கை வெளியுறவு அமைச்சக நிரந்தர செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் இதனை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் இலங்கை ஆதரவுக்காக திரும்பிய முதல் நாடு இந்தியா. மாண்புமிகு இந்தியப் பிரதமரின் உதவியைக் கோரி நாங்கள் ஒரு சிறப்பு அறிக்கையை அனுப்பியுள்ளோம். பிராந்திய ஒற்றுமைக்காக இந்தியா இலங்கையை ஆதரிக்கும் என்றும் கொலம்பேஜ் உறுதிபட தெரிவித்தார்.
சில வலிமை வாய்ந்த நாடுகளின் தேவையற்ற தலையீடு இது. எங்கள் நாடு இப்போது அமைதியான ஜனநாயக தேசமாக இருக்கும்போது, முடிந்து போன போரின் காலத்தை பற்றி இன்னும் பேசிக்கொண்டு இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க அடுத்தவாரம் நடைபெறும் அமர்வில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என ஐநா மனித உரிமைகள் அமைப்பின் மைய குழு ஒரு அறிக்கையில் கூறியிருந்ததையடுத்து இப்போது இலங்கை ஆதரவை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தியாவை தவிர்த்து ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவையும் இலங்கை நாடியுள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் இந்தியா என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது உறுதியாகவில்லை. ஒருபக்கம் இந்தியாவுக்கு எதிரான வேளைகளில் ஈடுபட்டு மறுபக்கம் இந்தியாவின் ஆதரவை கோரும் இலங்கையின் முடிவுக்கு இந்தியா என்ன பதில் கொடுக்கும் என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.
உலகம்
எச்-1 பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. பைடன் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு!


பைடன் அரசாங்கத்தின் புதிய குடிவரவு மசோதாவின் விதிகளின்படி, எச் -1 பி விசா வகை போன்ற குடியேறாத தொழிலாளர்களின் துணைவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் வேலைவாய்ப்பு அங்கீகாரத் திட்டம் தொடர்பான தற்போதைய கட்டுப்பாட்டு நிபந்தனைகள் எதுவும் இதற்கு பொருந்தாது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2019 நிதியாண்டில் மட்டும் கால அவகாசம் நீட்டிப்பு உட்பட 3.89 லட்சம் எச் -1 பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட 72% அல்லது 2.78 லட்சம் இந்திய பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எச் -1 பி விசா வைத்திருப்பவர்களுக்கு க்ரீன் கார்டு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் அல்லது அதற்குரிய கால அளவான 6 ஆண்டுகள் என்பதை நீட்டிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் H-4 வகை விசா வைத்திருக்கும் அவர்களின் துணைவர்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Also Read: நாசாவின் திட்டத்திற்கு தலைமை தங்கிய இந்திய வம்சாவளி பெண்.. சாதனை படைத்த ஸ்வாதி மோகன்
இந்த நடவடிக்கை மூலம் சம்பந்தப்பட்டவர்கள் வேலை தேடவும், சுயதொழில் ஈடுபடவும் மட்டுமல்லாமல் வாகன ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது வங்கி கணக்கு திறக்கவோ கூட முடியும். சமீபத்திய ஆய்வின் படி கிட்டத்தட்ட 1 லட்சம் இந்தியர்கள் அதில் பெரும்பாலும் பெண்கள் வேலை செய்வதற்கான பணி அனுமதியை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் டிரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அங்கீகாரத் திட்டத்தை ரத்து செய்யும் சுற்றறிக்கையை ஜோ பைடன் நிர்வாகம் திரும்ப பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, எல் -1 விசா வைத்திருப்பவர்களின் துணைவர்கள் அங்கு வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இப்போது இதே நடைமுறை எச் -1 பி தொழிலாளர்களின் துணைவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிகிறது. அவர்களுக்கு வேலை செய்வதற்கான பணி அனுமதியும் வழங்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்ட எச்-1பி விசாக்களில் அதிகம் இடம் பிடித்த இந்தியர்களுக்கு முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது.
இப்போதைய நிலையில் எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் துணைவர்களுக்கான பணி அனுமதி என்பது எல்லா துறைக்கும் பரவலாக அனுமதிக்கப்படுமா அல்லது தேவை உள்ள சில துறைகளுக்கு மட்டுமா என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் இப்படி எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் துணைவர்களுக்கும் பணி அனுமதி வழங்கும் இந்த திட்டம் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை பறிப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் ஒருசாரார் கருதுகின்றனர்.
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!
-
டிவி2 days ago
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?
-
சினிமா செய்திகள்2 days ago
கே.ஜி.எஃப் படத்தை எல்லாம் மறந்துவிடுவீர்கள்… தளபதி 65 அப்டேட் கொடுத்த நெல்சன்!