உலகம்
உலகில் உள்ள மொத்த கொரோனா வைரஸ்களின் எடை இவ்வளவுதான்: கணிதவியல் வல்லுனர் தகவல்


கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உலக நாடுகளில் சீனாவில் உள்ள வூகான் என்ற பகுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. பிப்ரவரியில் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவியது என்பதும் அதன் பின்னர் மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பரவத் தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததே.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக இந்தியாவில் இருந்த நிலையில் செப்டம்பர் முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு தளர்வும் ஏற்பட்டது.
உலகம் முழுவதிலுமுள்ள கொரோனா வைரஸின் மொத்த எடையை சுமார் 500 கிராம் மட்டுமே இருக்கும் என்றும் அதனை ஒரு 300மில்லி லிட்டர் கூல்டிரிங்ஸில் டின்னில் அடைத்து விடலாம் என்று அவர் ஆராய்ச்சி மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டு தெரிவித்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
உலகம்
இந்தியா சென்றால் கொரோனா பரவும்: அமெரிக்க அரசு எச்சரிக்கை!


இந்தியா சென்றால் கொரோனா வைரஸ் பரவும் என்றும் அதனால் இந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா என்பதும் இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்கா இந்தியா செல்ல வேண்டாம் என தனது நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளது.
இதனால் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த பல அமெரிக்கர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம்
ஆப்பிள் பழம் ஆர்டர் செய்தவருக்கு ஆப்பிள் ஐபோன் கிடைத்த ஆச்சர்யம்..!


ஆப்பிள் பழம் ஆர்டர் செய்த நபருக்கு ஆப்பிள் ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ள ஆச்சர்யம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் 50 வயதான நிக் ஜேம்ஸ். இவர் டெஸ்கோ என்னும் சந்தையின் கீழ் சாப்பிடுவதற்கான ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், ஆர்டர் டெலிவரி வாங்கிய போது நிக் ஜேம்ஸ்-க்கு ஆச்சர்யம் காத்திருந்தது. காரணம், ஆப்பிள் பழங்களுக்குப் பதிலாக அவருக்கு ஆப்பிள் ஐபோன் எஸ்இ கிடைத்திருந்தது.
டெஸ்கோ என்னும் நிறுவனம் விளம்பரத்துக்காக குறிப்பிட்ட நபர்களுக்குப் பரிசாக எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுக்கப் போவதாக அறிவித்திருந்துள்ளது. இதன் காரணமாகவே நிக் ஜேம்ஸ்-க்கு அதிர்ஷ்டம் அடித்து அவருக்கு ஆப்பிள் ஐபோன் எஸ்இ கிடைத்துள்ளது. ஈஸ்டர் சமயத்தில் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ் இது என நிக் ஜேம்ஸ் ஐபோன் கிடைத்தது குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
A big thanks this week to @Tesco & @tescomobile. On Wednesday evening we went to pick up our click and collect order and had a little surprise in there – an Apple iPhone SE. Apparently we ordered apples and randomly got an apple iphone! Made my sons week! 😁 #tesco #substitute pic.twitter.com/Mo8rZoAUwD
— Nick James (@TreedomTW1) April 10, 2021
உலகம்
நஷ்ட ஈடு கொடுக்காத எவர்க்ரீன் கப்பலை பறிமுதல் செய்த எகிப்து: பெரும் பரபரப்பு


சமீபத்தில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிய நிலையில் அந்த கப்பல் ஒரு வாரத்திற்குப் பின்னர் தொழில்நுட்ப வல்லுனர்களால் மீட்கப்பட்டது. இந்த ஒரு வாரத்தில் சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் கப்பல்கள் காத்திருந்ததால் எகிப்தின் சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த இழப்பை சரிகட்டும் வகையில் ஒரு பில்லியன் டாலர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் சுயஸ் கால்வாய் நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால் எவர்க்ரீன் கப்பல் உரிமையாளர் இழப்பீடு தர முடியாது என்று கூறியதை அடுத்து சுயஸ் கால்வாய் நிர்வாகம் சார்பில் எகிப்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இழப்பீடு வழங்கும் வரை எவர்கிரீன் கப்பலை பறிமுதல் செய்ய எகிப்து அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
கிரிக்கெட்2 days ago
மொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே!!
-
வணிகம்2 days ago
நகை வாங்க சரியான நேரம் (20/04/2021)!
-
சினிமா செய்திகள்2 days ago
பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா?
-
சினிமா செய்திகள்2 days ago
படப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி!