தமிழ்நாடு
விஜய், அஜித் பற்றிய கேள்வி- உதயநிதி சொன்ன ‘நறுக்’ பதில்


இன்று தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் நேரில் வந்து தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். அவர்கள் இன்று வாக்குச் சாவடிக்கு வந்த விதம் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. முன்னதாக நடிகர் அஜித், தன் மனைவி ஷாலினியுடன் மக்களோடு மக்களாக நின்று ஓட்டு போட்டார். ஷாலினி வெள்ளை நிற மாஸ்க் அணிந்திருக்க, அஜித், சிவப்பு கறுப்பு நிறம் பொருந்திய மாஸ்க் அணிந்து ஓட்டு போட வந்திருந்தார்.
கோலிவுட் VS பாலிவுட் #தமிழ்நாடு ❤️ pic.twitter.com/yKqlQhGwvq
— Jothimani (@jothims) April 6, 2021
சிவப்பு மற்றும் கறுப்பு என்பது திமுகவின் கொடி நிறம். எனவே அஜித், திமுகவுக்கு தன் ஆதரவை சொல்லாமல் சொல்லி விட்டார் என்று யூகங்கள் சொல்லப்பட்டன. இதுவே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய், சிம்பிளாக சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். அவர் சைக்கிளில் வந்தது பெரிய விஷயம் அல்ல. அந்த சைக்கிளின் நிறமும் சிவப்பு மற்றும் கறுப்பு. இதனால் அவரும் திமுகவுக்கு ஆதரவாகத் தான் ஓட்டு போட வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
IT raid leads to Cycle raid..❣️ pic.twitter.com/MTtYGkfRTS
— James Stanly (@JamesStanly) April 6, 2021
இ்ந்த பரபரப்புகள் பற்றி திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், ‘அவர்கள் அப்படி வந்தது குறித்து எனக்குத் தெரியாது. செய்திகள் மூலமே அது குறித்து கேள்விப்படுகின்றேன். விஜய் பெட்ரோல் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தோ அல்லது உடற்பயிற்சிக்காகவோ சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்திருக்கலாம். இருவரும் ஏன் அப்படி வந்தார்கள் என்பது குறித்து அவர்கள் தான் விளக்க வேண்டும்’ என்று சூசகமான பதிலைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய்விட்டது: நீதிமன்றத்தில் தமிழக அரசு


தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய் விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியது
ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பு இருப்பதாகவும் 40 வயதானவர்களும் விரும்பினால் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளித்துள்ளது. இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி சென்று விட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு
அரியர் தேர்வுகள் குறித்து அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு: சென்னை ஐகோர்ட்டில் தகவல்!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவிவருகிறது என்பதும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டாவது அலை பரவி வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு தவிர மற்ற அனைத்தும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பது தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் தேர்வு மாணவர்களும் ஆல்பாஸ் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த அறிவுரையை அடுத்து தற்போது அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்துக்கு இன்று பதிலளித்த தமிழக அரசு அரியர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் வரும் மே மாதம் முதல் அரியர் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதனை அடுத்து அரியர் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாடு
கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பதட்டம்!


ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் சித்திரை திருவிழா இன்னும் சில நாட்களுக்கு வெகு சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்றைய கொடியேற்ற விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொடியேற்று விழாவிற்கு தங்களையும் அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் போர்க்கொடி தூக்கியதால் மீனாட்சி அம்மன் கோயில் அருகே பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கோவில் நிர்வாகிகள் கொரோனா பரவலை காரணம் காட்டி பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
-
சினிமா செய்திகள்2 days ago
’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்
-
வேலைவாய்ப்பு2 days ago
விருதுநகர் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!
-
கிரிக்கெட்2 days ago
IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!