தமிழ்நாடு
அதிகாலை 6 மணிக்கே குவிந்த வாக்காளர்கள்: சில நிமிடங்களில் வாக்குப்பதிவு தொடக்கம்!


தமிழகம், கேரளா, புதுவை ஆகிய 3 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் அதிகாலை 6 மணி முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன் வரிசையில் நிற்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இன்று தமிழகம், புதுவை மற்றும் கேரள சட்டசபை தேர்தலுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் மற்றும் கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது
இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொருத்தவரை 234 தொகுதிகளில் மொத்தம் 3998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் 88 ஆயிரத்து 957 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் 140 தொகுதிகளில் 2,67,88,000 வாக்காளர்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர். புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் 1,558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பூத் சிலிப் கட்டாயம் தேவை இல்லை என்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் ஏதாவது ஒரு ஆவணத்தை கொண்டுவந்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் அச்சமின்றி பொது மக்கள் வாக்களிக்கலாம் என்றும் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும் எனவே எந்தவித பயமுமின்றி அனைவரும் வாக்களிக்கவேண்டும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய்விட்டது: நீதிமன்றத்தில் தமிழக அரசு


தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய் விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியது
ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பு இருப்பதாகவும் 40 வயதானவர்களும் விரும்பினால் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளித்துள்ளது. இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி சென்று விட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு
அரியர் தேர்வுகள் குறித்து அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு: சென்னை ஐகோர்ட்டில் தகவல்!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவிவருகிறது என்பதும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டாவது அலை பரவி வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு தவிர மற்ற அனைத்தும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பது தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் தேர்வு மாணவர்களும் ஆல்பாஸ் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த அறிவுரையை அடுத்து தற்போது அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்துக்கு இன்று பதிலளித்த தமிழக அரசு அரியர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் வரும் மே மாதம் முதல் அரியர் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதனை அடுத்து அரியர் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாடு
கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பதட்டம்!


ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் சித்திரை திருவிழா இன்னும் சில நாட்களுக்கு வெகு சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்றைய கொடியேற்ற விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொடியேற்று விழாவிற்கு தங்களையும் அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் போர்க்கொடி தூக்கியதால் மீனாட்சி அம்மன் கோயில் அருகே பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கோவில் நிர்வாகிகள் கொரோனா பரவலை காரணம் காட்டி பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
-
சினிமா செய்திகள்2 days ago
’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்
-
வேலைவாய்ப்பு2 days ago
விருதுநகர் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!
-
சினிமா செய்திகள்2 days ago
விஷ்ணுவிஷால்-ஜூவாலா கட்டா திருமண அழைப்பித இணையத்தில் வைரல்!