தமிழ்நாடு
தோட்டத்தில் வைத்து மாணவியை நாசம் செய்த ஆசிரியர்!


வேலியே பயிரை மேய்ந்தது போல உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சேலம் வேத விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தார் பாலச்சந்திரன் என்ற 23 வயதே ஆன இளைஞர் ஒருவர். அந்த பள்ளியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவியின் மீது அந்த ஆசிரியர் ஆசை கொண்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லைதான் கொடுத்து வந்துள்ளார்.
மாணவி ரேகாவுக்கு பள்ளியில் படிக்கும் போது தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஆசிரியர் பாலச்சந்திரன். இந்நிலையில் அந்த மாணவி தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்துவிட்டார். ஆனாலும் மாணவியை விடாத அந்த ஆசிரியர் மாணவியின் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று மாணவியை சந்தித்து, மாணவியின் குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மாணவியுடன் தனிமையில் இருந்த ஆசிரியர் பாலச்சந்திரன் தனது காம லீலையை ஆரம்பித்துள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதை அறிந்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் பாலச்சந்திரன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழ்நாடு
ரூ.3408 கோடி மதிப்பில் இப்போது கட்டிடங்கள் கட்டும் பணி தேவையா? ராகுல்காந்தி சாட்டையடி கேள்வி


கொரோனா வைரஸால் இந்தியாவே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 3408 கோடி ரூபாய் மதிப்பில் 3 செயலகங்கள் கட்டும் பணி தேவையா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஏற்பாடு செய்தால், ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்குதல், கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாட்டை சரிசெய்தல் உள்பட பல்வேறு மக்கள் உயிரை காக்கும் பணிகள் இருக்கும் நிலையில் ரூபாய் 3408 கோடி மதிப்பில் மத்திய அரசு மூன்று தலைமை செயலகங்களை கட்டும் பணியில் தீவிரமாக உள்ளன.
தமிழ்நாடு
பெரியாரை பின்பற்றும் ஸ்டாலின், கமல் முட்டாள்கள் தான்: எச்.ராஜா விமர்சனம்


பெரியாரைப் பின்பற்றும் ஸ்டாலின், முட்டாள் தான் என அனைவருக்கும் தெரியும் அதேபோல் பெரியாரைப் பின்பற்றும் கமல்ஹாசனும் முட்டாள் தான் என செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக பிரமுகர் ஹெச் ராஜா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வாக்கு எண்ணும் மையம் அருகே மர்மமான சில விஷயங்கள் நடப்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையத்தில் கமலஹாசன் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய எச் ராஜா அவர்கள் ’கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமே பெரிய ஆள், வாக்கு எண்ணும் மையம் அருகே கண்டெய்னர், மொபைல் டாய்லெட் என எது இருந்தாலும் அவர் பயப்படுகிறார். இவரெல்லாம் ஒரு உலக நாயகனா?.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையான ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் இதற்கு எந்தவித ஆட்சேபனையும் செய்யக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு
மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது: முக ஸ்டாலின்


மே 2ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலையே தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மே 2ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என்று கூறியுள்ளார். அவர் தனது கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது, எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை
மேலும், “மே 2க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்”
இவ்வாறு முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!