தமிழ்நாடு
சுப.உதயகுமார் அதிரடி கைது: குமரியில் பரபரப்பு!


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப.உதயகுமார் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் அதிரடியாக தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவேந்தலில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி செல்ல முற்பட்டார் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப.உதயகுமார். அப்போது அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டம் கோடாரில் வைத்து கைது செய்துள்ளது காவல்துறை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு
காற்றில் பறக்கவிடப்பட்ட கொரோனா விதிமுறைகள்: பேருந்துகளில் அளவுக்கு மீறி கூட்டம்!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து சமீபத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு விதிகளில் ஒன்று பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை, மாஸ்க் இல்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இந்த விதிமுறைகள் உள்பட பல விதிமுறைகளை பொதுமக்கள் காற்றில் பறக்க விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி பேருந்துகளில் கூட்டம் அலை மோதுவதால் கொரோனா மேலும் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறப்பட்டு இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து சென்னை பேருந்துகளிலும் பல பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்து வருகின்றனர்
இதுபோல் அரசு விதித்த கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மக்களும் அரசு ஊழியர்களும் காற்றில் பறக்க விட்டு கொண்டிருப்பதால் தமிழகத்தில் மேலும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாடு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசார வாதம்!


ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாமா? என மக்களிடம் கருத்து கேட்டு நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என்றும் ஆக்சிஜனுக்காக திறக்கப்படும் ஸ்டெர்லைட் ஆலை அதன்பிறகு தாமிர உற்பத்திக்கும் வழி வகுத்து விடும் என்றும் அந்த ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்றும் போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று 13 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் அதிகம்!


தமிழகத்தில் நேற்று 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கு சற்றே குறைந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் 4 ஆயிரத்தை கிட்டத்தட்ட எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரத்தை தற்போது பார்ப்போம்
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 12,652
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,37,711
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,789
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 59
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13,317
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 7,526
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 934,966
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 113,144
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 212,79,542
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
சினிமா செய்திகள்2 days ago
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: விரைவில் ரிலீஸ்