தமிழ்நாடு
சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவது உறுதி..!- பரபரப்பான சூழலில் சூசகமாக பேசிய செல்லூர் ராஜூ


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு உடல்நிலை பாதிப்படைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார். அவர் வெளியே வந்த உடன் அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைகளில் சில, சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் தான்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான செல்லூர் ராஜூ, சசிகலா விசுவாசியாகவே இருந்து வருகிறார். சசிகலா குறித்து எப்போது கேள்வி எழுப்பினாலும், அவருக்கு எதிராக செல்லூர் ராஜூ கருத்து சொன்னதே இல்லை.
தற்போது சசிகலா விடுதலை ஆகி வெளியே வந்த பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைவார் என்று பேசப்பட்டு வருகிறது. அரசியல் விமர்சகர்கள், ‘அதிமுக – அமமுக இணைப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன’ என்றே தகவல் சொல்கிறார்கள்.
இப்படியான சூழலில் அதிமுகவுக்குள் சசிகலாவின் ரீ-என்ட்ரி குறித்துப் பேசியுள்ள செல்லூர் ராஜூ, ‘ஜெயலலிதா அம்மையார் இருந்த வரையில் அவர் பின்னால் சசிகலா இருந்தார். அப்போது சசிகலாவுடன் அனைவரும் உருவாகத்தான் இருந்தோம்.
இன்றைக்கு அதிமுக என்கிற பேரியக்கத்தை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அம்மாவுடைய ஆட்சித் தொடர வேண்டும். அம்மாவுடைய அரசு தொடர வேண்டும். அதற்கு ஏற்றது போல நிலைப்பாட்டைத் தான் நாங்கள் எடுப்போம்’ என்றார்.
இப்படியான கருத்து மூலம் மறைமுகமாக சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் ஐக்கியமாவார் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் செல்லூர் ராஜூ.
தமிழ்நாடு
வருங்காலத்தில் 200 தொகுதிகளில் போட்டியிடுவோம்: ஒப்பந்தத்திற்கு பின் கே.எஸ்.அழகிரி பேட்டி!


திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே செய்தி வந்த நிலையில் சற்று முன் இது குறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Uncategorized
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றிய கேள்வி; பதில் சொல்ல தெரியாமல் திணறிய எல்.முருகன்!


பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகளும், பல தரப்பினரும் மத்திய அரசைக் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான காரணம் பற்றி விளக்க தெரியாமல் திணறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக எரிபொருட்களின் விலையேற்றம் குறித்து முருகன், ‘பெட்ரோல், டீசல், கேஸ் ஆகிய விலைகளை 2013 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதையும், அப்போதிலிருந்து இப்போது வரை அதன் விலை எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நீங்கள் உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் அனைத்தின் விலையும் தொடர்ந்து குறைந்து கொண்டே தான் இருக்கின்றது.
ROFL 😂😂😂👌#BJPfails pic.twitter.com/sKPr1ccLrs
— #BJPfails (@BJPFails_) March 6, 2021
2013 ஆம் ஆண்டு கேஸ் விலை 1000 ரூபாய்க்கு மேல் இருந்தது. தற்போது 700 ரூபாய் தான் உள்ளது. உலகின் எல்லா பகுதிகளிலும் எண்ணெய் விலை என்பது சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து தான் இருக்கிறது. அதைப் போலவே இந்தியாவிலும் சர்வதேச சூழல்களைப் பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் பொருளாதார மந்த நிலை நிலவியது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு உள்ளது.
அதேபோல இன்றைக்கு இந்தியாவுக்கு எண்ணெய் வர வேண்டும் என்றால் கப்பல் மூலமாகத் தான் வர வேண்டும். அப்படி வருவதற்கு லேட்டாவதும் ஒரு காரணமாகத் தான் இருக்கிறது’ என்று வினோதமான விளக்கத்தைக் கொடுத்தார்.
தமிழ்நாடு
தேர்தலில் போட்டியிடுவது உறுதி- அறிவித்தார் வேல்முருகன்!


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. களத்தில் மோதிக் கொள்ளும் இரண்டு பிரதான கட்சிகளான திமுக – அதிமுக இடையேயான கூட்டணி காய் நகர்த்தல்களும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
குறிப்பாக இன்னும் ஓரிரு நாட்களில் இரு கட்சிகளும் தங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு இந்த முறை, 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட உள்ளார். இது குறித்து அவர், ‘தொகுதிகளை கொடுக்கும் இடத்தில் பெரிய கட்சியாக இருப்பது திமுக. எனவே அந்தக் கட்சி எங்களுக்கு எவ்வளவு தொகுதி கொடுக்கும் என்பது குறித்து விரைவில் தெரிவிப்பேன். நான் இந்த தேர்தலில் களமிறங்குவது உறுதி’ என்று கூறியுள்ளார்.
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – “இந்தியா ரொம்ப டஃப்புங்க..!”- புலம்பும் பென் ஸ்டோக்ஸ்
-
சினிமா செய்திகள்2 days ago
பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல் இன்று ரிலீஸ்: குவியும் வாழ்த்துக்கள்!
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்!
-
Uncategorized2 days ago
ஓட்டுநர் உரிமம் பெற இனி RTOஅலுவலகம் செல்லத் தேவையில்லை!