தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார் – டிடிவி தினகரன் அதிரடி


அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, நேற்று தமிழகம் திரும்பியுள்ளார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிடுவேன். சசிகலா தேர்தலில் களம் காணுவார்’ என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘அதிமுகவில் பொதுச் செயலாளருக்குத் தான் மொத்த அதிகாரமும் உள்ளது. எனவே பொதுச் செயலாளரான சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி போட்ட உத்தரவு எதுவும் செல்லாது. அதை மீட்பதற்கான சட்டப் போராட்டம் தொடரும்.
நாங்கள் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். திமுக தான் எங்கள் பொது எதிரி. அவர்களை வீழ்த்தி ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்பது தான் எங்கள் நோக்கம்.
சசிகலா மீண்டும் தமிழகத்துக்கு வந்த போது, கிட்டத்தட்ட 24 மணி நேரம் வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழக வரலாற்றிலேயே யாருக்கும் இப்படி ஒரு வரவேற்பு கொடுக்கப்பட்டதில்லை. இதன் மூலம் மக்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருக்கிறது என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியும்.
அமமுக ஆரம்பிக்கப்பட்டது அதிமுகவை மீட்ப்பதற்குத் தான். அது கண்டிப்பாக நடக்கும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். பலர் சசிகலாவின் உடல்நிலை குறித்து என்னிடம் போன் மூலம் அழைப்பு விடுத்து கேட்டறிந்தனர். நண்பர் ரஜினிகாந்த், என்னிடம் அது குறித்து கேட்டு நலம் விசாரித்தார். சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் என்னிடம் பேசியிருக்கலாம். அது குறித்துப் பொதுவெளியில் சொல்லத் தேவையில்லை.
அதிமுக – அமமுக இணைப்பு சாத்தியமே இல்லை என்று சொல்வதை நான் 100 சதவீதம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும் போது, அங்கு சசிகலா செல்வார். அதே போல அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் செல்வோம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன். ஒரு தொகுதி ஆர்.கே.நகராக இருக்கும். நான் எம்.பி-யாக இருந்த தொகுதியிலும் இந்த முறை போட்டியிடுவேன். சசிகலாவும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார். அதற்கான சட்ட வாய்ப்புகள் இருக்கின்றன.
அதிமுகவில் யாருக்கும் ஆளுமை இல்லை. ஆளுமை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கக் கூடியவர்கள் அவர்கள். ஒரு குறுட்டு அதிர்ஷ்டத்தில் அவர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மேலே இருப்பவனின் ஆதரவு இருந்தது. அவ்வளவுதான். சீக்கிரம் அனைத்தும் முடிவுக்கு வரும்’ என்று கூறினார்.
தமிழ்நாடு
ரூ.3408 கோடி மதிப்பில் இப்போது கட்டிடங்கள் கட்டும் பணி தேவையா? ராகுல்காந்தி சாட்டையடி கேள்வி


கொரோனா வைரஸால் இந்தியாவே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 3408 கோடி ரூபாய் மதிப்பில் 3 செயலகங்கள் கட்டும் பணி தேவையா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஏற்பாடு செய்தால், ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்குதல், கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாட்டை சரிசெய்தல் உள்பட பல்வேறு மக்கள் உயிரை காக்கும் பணிகள் இருக்கும் நிலையில் ரூபாய் 3408 கோடி மதிப்பில் மத்திய அரசு மூன்று தலைமை செயலகங்களை கட்டும் பணியில் தீவிரமாக உள்ளன.
தமிழ்நாடு
பெரியாரை பின்பற்றும் ஸ்டாலின், கமல் முட்டாள்கள் தான்: எச்.ராஜா விமர்சனம்


பெரியாரைப் பின்பற்றும் ஸ்டாலின், முட்டாள் தான் என அனைவருக்கும் தெரியும் அதேபோல் பெரியாரைப் பின்பற்றும் கமல்ஹாசனும் முட்டாள் தான் என செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக பிரமுகர் ஹெச் ராஜா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வாக்கு எண்ணும் மையம் அருகே மர்மமான சில விஷயங்கள் நடப்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையத்தில் கமலஹாசன் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய எச் ராஜா அவர்கள் ’கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமே பெரிய ஆள், வாக்கு எண்ணும் மையம் அருகே கண்டெய்னர், மொபைல் டாய்லெட் என எது இருந்தாலும் அவர் பயப்படுகிறார். இவரெல்லாம் ஒரு உலக நாயகனா?.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையான ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் இதற்கு எந்தவித ஆட்சேபனையும் செய்யக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு
மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது: முக ஸ்டாலின்


மே 2ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலையே தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மே 2ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என்று கூறியுள்ளார். அவர் தனது கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது, எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை
மேலும், “மே 2க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்”
இவ்வாறு முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!