தமிழ்நாடு
ஒற்றைத் தலைமைதான் வேண்டும், அதுவும் சசிகலாதான்: அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி!


சில தினங்களுக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக தோல்விக்கு காரணம் ஒற்றைத் தலைமை இல்லாததே ஆகும். எனவே அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முதல் குரல் எழுப்பினார். இதனையடுத்து எம்எல்ஏ குன்னம் ராஜேந்திரனும் ஒற்றைத் தலைமை கோரிக்கையை முன்வைத்து குரல் கொடுத்தார்.
இந்த சூழ்நிலையில் ஜூன் 12-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். அதன்படி இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்துக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனையடுத்து பிரபல புலனாய்வு தமிழ் வார இதழின் இணையதளத்துக்கு பேட்டியளித்தார் எம்எல்ஏ பிரபு. அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த பிரபு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா இந்த கட்சியை வழி நடத்த வேண்டும் என்றும், அவரை பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று கெஞ்சியது, காலில் விழுந்தது இப்போதுள்ள முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் அனைவரும்தான்.
இன்று சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை வேடம் போடுகிறார்கள். இந்த ஆட்சியே இருக்கக்கூடாது என்று வாக்களித்தவர் ஒருங்கிணைப்பாளர், ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர் இணை ஒருங்கிணைப்பாளர். இவர்கள் இந்த கட்சியை எப்படி வழிநடத்துவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இவர்களது செயல்பாடுகளை பார்த்தால் ஜெயலலிதாவின் எண்ணங்களை குழித்தோண்டி புதைத்துவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.
ஒற்றைத் தலைமைதான் வேண்டும். அதுவும் சசிகலாதான். ஏனென்றால் ஜெயலலிதாவுடன் இருந்து செயல்பட்டவர். ஜெயலலிதா எப்படி ஒவ்வொருத்தரையும் பெயர் சொல்லி கூப்பிட்டார்களோ, அதைப்போலவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கட்சியினரையும் தெரிந்தவர் சசிகலா. மேலும் தமிழகத்தில் எங்கு கட்சி பலவீனமாக இருக்கிறது. பலமாக இருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதிமுக மீது உண்மையான அக்கறை கொண்டவர் சசிகலா மட்டுமே என்றார் அவர்.
தமிழ்நாடு
ரூ.3408 கோடி மதிப்பில் இப்போது கட்டிடங்கள் கட்டும் பணி தேவையா? ராகுல்காந்தி சாட்டையடி கேள்வி


கொரோனா வைரஸால் இந்தியாவே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 3408 கோடி ரூபாய் மதிப்பில் 3 செயலகங்கள் கட்டும் பணி தேவையா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஏற்பாடு செய்தால், ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்குதல், கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாட்டை சரிசெய்தல் உள்பட பல்வேறு மக்கள் உயிரை காக்கும் பணிகள் இருக்கும் நிலையில் ரூபாய் 3408 கோடி மதிப்பில் மத்திய அரசு மூன்று தலைமை செயலகங்களை கட்டும் பணியில் தீவிரமாக உள்ளன.
தமிழ்நாடு
பெரியாரை பின்பற்றும் ஸ்டாலின், கமல் முட்டாள்கள் தான்: எச்.ராஜா விமர்சனம்


பெரியாரைப் பின்பற்றும் ஸ்டாலின், முட்டாள் தான் என அனைவருக்கும் தெரியும் அதேபோல் பெரியாரைப் பின்பற்றும் கமல்ஹாசனும் முட்டாள் தான் என செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக பிரமுகர் ஹெச் ராஜா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வாக்கு எண்ணும் மையம் அருகே மர்மமான சில விஷயங்கள் நடப்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையத்தில் கமலஹாசன் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய எச் ராஜா அவர்கள் ’கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமே பெரிய ஆள், வாக்கு எண்ணும் மையம் அருகே கண்டெய்னர், மொபைல் டாய்லெட் என எது இருந்தாலும் அவர் பயப்படுகிறார். இவரெல்லாம் ஒரு உலக நாயகனா?.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையான ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் இதற்கு எந்தவித ஆட்சேபனையும் செய்யக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு
மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது: முக ஸ்டாலின்


மே 2ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலையே தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மே 2ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என்று கூறியுள்ளார். அவர் தனது கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது, எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை
மேலும், “மே 2க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்”
இவ்வாறு முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!