தமிழ்நாடு
குடும்பத் தலைவர் இயற்கையாக உயிரிழந்தால் ரூ.2 லட்சம்- தமிழக அரசு அறிவிப்பு!


தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம். இன்றைய பட்ஜெட்டில் குறிப்பிடத்தகும் வகையில், மாநிலத்தில் உள்ள குடும்பத் தலைவர் இயற்கையாக மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பன்னீர்செல்வம் அறிவிப்பில், ‘தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் இயற்கையாகவே உயிரிழந்தால் 2 லட்ச ரூபாய் காப்பீடு தொகை வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
பட்ஜெட்டில் வெளிவந்த முக்கிய அறிவிப்புகள்:
* நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* வேளாண்மைத் துறைக்கு 1,738 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* மீன்வளத் துறைக்கு 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* நீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* 1,580 கோடி ரூபாயில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்
* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* தீயணைப்பு துறைக்கு 436 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.5,000 கோடி ஒதுக்கீடு!
* 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம்!
* கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு
“நான் கருணாநிதியை கிண்டல் செய்யலைங்க!” – கமல் சொல்லும் புது விளக்கம்!


அரசியல் வாழ்க்கையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு மக்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் கமல் பேசியது, தமிழக முன்னாள் முதல்வரான கருணாநிதியைப் பற்றித் தான் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு புறம், அவர் மாற்றத் திறனாளிகளை கேலி செய்யும் வகையில் பேசியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘நான் சர்க்கர நாற்காலியில் அமரும் நேரம் வரும் போது மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’ எனப் பேசினார்.
உசுரோட இருக்கற வர ஒரு வார்த்தை பேச வக்கில்ல. நாட்ட விட்டு போறேன்னு மூக்க சிந்த வேண்டியது.
இப்ப இப்படி பேசறது @ikamalhaasan இந்த மானங்கெட்ட பொழப்பு தேவையா?
— நிதன் பொற்கொடி (@SriniLeaks) February 25, 2021
இந்நிலையில் இன்று தாம்பரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல், ‘முதுமையை கேலி செய்ய முடியாது. அது உங்களுக்கும் வரும் எனக்கும் வரும். அந்த வயதில் எதுவும் செய்ய முடியாது என்பது தான் என்னுடைய கணிப்பு. அதே நேரத்தில் என்னுடைய முதுமை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.
கருணாநிதியின் மேல் எனக்கு அதிக மரியாதை உண்டு. நான் என்னுடைய சக்கர நாற்காலியைப் பற்றியும், என்னுடைய முதுமையைப் பற்றியும் தான் மேடையில் பேசினேன்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு
ஆளுனர் தமிழிசை எடுத்த அதிரடி நடவடிக்கை: புதுவையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையும் உயர்ந்துள்ளதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ தொட்டுவிட்ட பெட்ரோல் டீசல் விலை விரைவில் தமிழகத்தில் 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வாட் வரி குறைப்பால் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.40 குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று தமிழகத்திலும் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு
பிரதமர் மோடிக்கு போட்டியாக திருக்குறள் படிக்கும் ராகுல்காந்தி!


தமிழகத்திற்கு வரும்போதும் சரி. தமிழகம் குறித்து பேசும் போதும் சரி திருக்குறளை அச்சுப் பிறழாமல் பேசி வருவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் கூறும் ஒவ்வொரு திருக்குறளிலும் அன்றைய நிகழ்ச்சியில் அவர் பேசுவதற்கு தகுந்த வகையில் பொருத்தமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் பிறந்து வளர்ந்து பல ஆண்டுகளாக அரசியல் செய்பவர்கள் கூட துண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு திக்கி திணறி படித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழே தெரியாத பிரதமர் மோடி தமிழில் திருக்குறளை எந்தவித துண்டுச் சீட்டும் இல்லாமல், பிசிறில்லாமல் பேசி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே இனிவரும் நாட்களில் ராகுல் காந்தியும் தனது மேடை பேச்சுகளில் திருக்குறளை உதாரணமாக கூறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
Have been reading "Tirukkural”. Am stunned by its depth.
Listening
Through your ears to hear, to listen and to understand.
Is to make gold of grain and golden grain of sand.
— Rahul Gandhi (@RahulGandhi) February 26, 2021
-
கிரிக்கெட்2 days ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!
-
டிவி2 days ago
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?