தமிழ்நாடு
போலீஸ் வலைவீசி தேடிய ரவுடி புதுவை பெண், புதுமைப்பெண் போல் பாஜகவில் இணைந்தார்!


புதுச்சேரியில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பெண் தாதா, பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசி. பிரபல தாதாவான இவர், பல தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிந்து வந்ததாக புகார்கள் உள்ளன. மேலும் கொலை மிரட்டல், மாமூல் வசூல் செய்தல், நில அபகரிப்பு, சொத்து அபகரிப்பு, ஆயுத பதுக்கல் உள்ளிட்ட வழக்குகள் இவர் மீது பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முன்னாள் சபாநாயகர் விஎம் சிவக்குமார் கொலை வழக்கிலும் தொடர்புடையராவர்.
இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த எழிலரசி, தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். அவரை புதுச்சேரி பாஜக தலைவர் சுவாமிநாதன், பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்பு, தனது ஆதரவாளர்களுக்கு இனிப்பு, விருந்து கொடுத்துள்ளார்.
ஏற்கெனவே தமிழகத்தில் ரவுடிகள், தாதாக்கள் அனைவரும் பாஜகவிலும், திமுக, அதிமுகவில் இணைந்து வருவதாக கூறப்படும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக எழிலரசியும் பாஜகவில் இணைந்துள்ளார். இதே போல், கொலை குற்ற வழக்கு பதியப்பட்டவர்களும் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு
தொகுதிகள் கேட்காமலேயே அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ள 13 கட்சிகள்!


வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர என்பதும் தேமுதிக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி உடன்பாடுகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு 13 கட்சிகள் எந்தவித தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் இன்றி நிபந்தனையின்றி ஆதரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து உள்ள கட்சிகளின் பெயர்கள் பின்வருமாறு:
நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி, ஏசி சண்முகம் அவர்களின் புதிய நீதிக்கட்சி, தனபாலன் அவர்களின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, சேதுராமன் அவர்களின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக கட்சி, ஜோதி முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பசும்பொன் தேசிய கழகம், முருகன் ஜி அவர்களின் பார்வார்டு பிளாக் கட்சி, வேட்டவலம் மணிகண்டன் அவர்களின் இந்திய உழைப்பாளர் உழைப்பாளர் கட்சி, ஷேக் அப்துல்லாவின் தமிழ் மாநில முஸ்லீம் லீக் மற்றும் அம்பேத்கர் பிரியன் அவர்களின் இந்திய தேசிய குடியுரிமை கட்சி ஆகிய கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
தமிழ்நாடு
வருங்காலத்தில் 200 தொகுதிகளில் போட்டியிடுவோம்: ஒப்பந்தத்திற்கு பின் கே.எஸ்.அழகிரி பேட்டி!


திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே செய்தி வந்த நிலையில் சற்று முன் இது குறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Uncategorized
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றிய கேள்வி; பதில் சொல்ல தெரியாமல் திணறிய எல்.முருகன்!


பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகளும், பல தரப்பினரும் மத்திய அரசைக் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான காரணம் பற்றி விளக்க தெரியாமல் திணறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக எரிபொருட்களின் விலையேற்றம் குறித்து முருகன், ‘பெட்ரோல், டீசல், கேஸ் ஆகிய விலைகளை 2013 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதையும், அப்போதிலிருந்து இப்போது வரை அதன் விலை எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நீங்கள் உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் அனைத்தின் விலையும் தொடர்ந்து குறைந்து கொண்டே தான் இருக்கின்றது.
ROFL 😂😂😂👌#BJPfails pic.twitter.com/sKPr1ccLrs
— #BJPfails (@BJPFails_) March 6, 2021
2013 ஆம் ஆண்டு கேஸ் விலை 1000 ரூபாய்க்கு மேல் இருந்தது. தற்போது 700 ரூபாய் தான் உள்ளது. உலகின் எல்லா பகுதிகளிலும் எண்ணெய் விலை என்பது சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து தான் இருக்கிறது. அதைப் போலவே இந்தியாவிலும் சர்வதேச சூழல்களைப் பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் பொருளாதார மந்த நிலை நிலவியது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு உள்ளது.
அதேபோல இன்றைக்கு இந்தியாவுக்கு எண்ணெய் வர வேண்டும் என்றால் கப்பல் மூலமாகத் தான் வர வேண்டும். அப்படி வருவதற்கு லேட்டாவதும் ஒரு காரணமாகத் தான் இருக்கிறது’ என்று வினோதமான விளக்கத்தைக் கொடுத்தார்.
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – “இந்தியா ரொம்ப டஃப்புங்க..!”- புலம்பும் பென் ஸ்டோக்ஸ்
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்!
-
Uncategorized2 days ago
ஓட்டுநர் உரிமம் பெற இனி RTOஅலுவலகம் செல்லத் தேவையில்லை!
-
கிரிக்கெட்2 days ago
INDvENG- நடுமைதானத்தில் ஸ்டோக்ஸுடன் கோலி சண்டையிட காரணம் என்ன..?- ரகசியம் உடைத்த சிராஜ்