தமிழ்நாடு
பிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62 ஆயிரம் கடன்- ‘இடைக்கால பட்ஜெட்டை’ வறுத்தெடுத்த ஸ்டாலின்!


தமிழக சட்டப்பேரவையில் இன்று, இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை திமுக புறக்கணித்துள்ளது. அதற்கான காரங்களைப் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
இது பற்றி அவர் அறிக்கை வாயிலாக கூறியிருப்பதாவது:-
நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடனைச் சுமத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2006 – 2011 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே! ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி!
இது இறுதிக் கணக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும், நிதி பற்றாக்குறையும் வரிந்து கட்டிக் கொண்டு உயர்ந்து நிற்கின்றன. தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாக குறைந்து விட்டது. அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக – 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டு விட்டது. கொரோனா பேரிடருக்கு முன்பே – அதாவது 2018-ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய் – நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டது.
2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகு தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. இதுவா வெற்றி நடை போடும் தமிழகம்? கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா!
தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து – அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதலமைச்சர். அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2011 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் நிதி நிலை மிக மோசமானதன் விளைவாக 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்து சரிந்து விட்டது என்று அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான மத்திய பா.ஜ.க. அரசின் 15-ஆவது நிதிக்குழுவின் அறிக்கையே சொல்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையால் கடன் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் – ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது.
தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கடனைச் சுமத்தி விட்டு – தி.மு.க. ஆட்சியில் இருந்ததை விட ஐந்து மடங்கு கடனை வாங்கி ஊழலில் திளைத்து சுகமான ஆட்சி நடத்தி – வெற்று அறிவிப்புகளைச் செய்தே காலம் கடத்தி, கடைசி நேரத்தில் காரியத்திற்கு ஆகாத கல்வெட்டுகளைத் திறந்து வைத்து, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்வோரின் கடைசி நிதி நிலை அறிக்கை (இடைக்கால நிதி நிலை அறிக்கை) உரையையும் – கூட்டத் தொடரையும் திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் ஸ்டாலின்.
தமிழ்நாடு
சட்டப்பேரவையில் வன்னியர் இட ஒதுக்கீடு மசோதா: இன்னும் சற்று நேரத்தில் தாக்கல்!


சட்டப்பேரவையில் இன்னும் சில நிமிடத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்ற நிலையில் அதற்கு முன்னரே தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இன்று காலை முதல் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அடுத்ததாக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை இன்று பிற்பகலில் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்தால்தான் அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்ற நிபந்தனை விதித்து இருந்ததாகவும் அந்த நிபந்தனையின் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது
தமிழ்நாடு
“நான் கருணாநிதியை கிண்டல் செய்யலைங்க!” – கமல் சொல்லும் புது விளக்கம்!


அரசியல் வாழ்க்கையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு மக்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் கமல் பேசியது, தமிழக முன்னாள் முதல்வரான கருணாநிதியைப் பற்றித் தான் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு புறம், அவர் மாற்றத் திறனாளிகளை கேலி செய்யும் வகையில் பேசியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘நான் சர்க்கர நாற்காலியில் அமரும் நேரம் வரும் போது மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’ எனப் பேசினார்.
உசுரோட இருக்கற வர ஒரு வார்த்தை பேச வக்கில்ல. நாட்ட விட்டு போறேன்னு மூக்க சிந்த வேண்டியது.
இப்ப இப்படி பேசறது @ikamalhaasan இந்த மானங்கெட்ட பொழப்பு தேவையா?
— நிதன் பொற்கொடி (@SriniLeaks) February 25, 2021
இந்நிலையில் இன்று தாம்பரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல், ‘முதுமையை கேலி செய்ய முடியாது. அது உங்களுக்கும் வரும் எனக்கும் வரும். அந்த வயதில் எதுவும் செய்ய முடியாது என்பது தான் என்னுடைய கணிப்பு. அதே நேரத்தில் என்னுடைய முதுமை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.
கருணாநிதியின் மேல் எனக்கு அதிக மரியாதை உண்டு. நான் என்னுடைய சக்கர நாற்காலியைப் பற்றியும், என்னுடைய முதுமையைப் பற்றியும் தான் மேடையில் பேசினேன்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு
ஆளுனர் தமிழிசை எடுத்த அதிரடி நடவடிக்கை: புதுவையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையும் உயர்ந்துள்ளதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ தொட்டுவிட்ட பெட்ரோல் டீசல் விலை விரைவில் தமிழகத்தில் 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வாட் வரி குறைப்பால் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.40 குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று தமிழகத்திலும் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!
-
டிவி2 days ago
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?
-
சினிமா செய்திகள்2 days ago
கே.ஜி.எஃப் படத்தை எல்லாம் மறந்துவிடுவீர்கள்… தளபதி 65 அப்டேட் கொடுத்த நெல்சன்!