தமிழ்நாடு
நடுரோட்டில் நிறுத்தப்பட்ட துணை கண்காணிப்பாளரின் வாகனத்திற்கு அபராதம்!


மதுரையில் நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த துணை கண்காணிப்பாளரின் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் கீழ ஆவணி மூல வீதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாக அரசு வாகனம் நின்று கொண்டிருந்தது. இதனால் வாகனத்திற்கு பின்னே அடுத்தடுத்து வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க முடியாமல் தவித்தனர். நீண்ட நேரம் ஹாரன் அடித்தும் யாரும் அரசு வாகனத்தை எடுக்காததால், அதை அப்படியே போட்டோ எடுத்து காவல்துறைக்கு அனுப்பப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அது தேனி மாவட்ட தீண்டாமை தடுப்புப் பிரிவின் துணை கண்காணிப்பாளருடைய வாகனம் என்பதை உணர்ந்தனர். பின்பு, அரசு உயர்அதிகாரி என்றாலும், இப்படி பொறுப்பில்லாமல் இருக்கலாமா என்று அந்த வாகனத்திற்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வாகனம் பழுது சரிபார்ப்புக்காக கலெக்டர் வாகனங்கள் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும், பழுது நீக்கிய பின்பு, அதனை ஓட்டி வந்த காவலர் நடுரோட்டில் நிறுத்தி விட்டு சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
இப்படி நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திய காவலர் குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. இருப்பினும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதற்கு இணங்க துணை கண்காணிப்பாளரின் வாகனத்திற்கே அபராதம் விதித்த போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.
தமிழ்நாடு
பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட அனுபவம்: நர்ஸ் நெகிழ்ச்சி


இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் முதலில் சுகாதார பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் போடப்பட்டு வரும் இந்த தடுப்பூசி அடுத்த கட்டமாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் போடுவதற்காக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் பொதுமக்களுக்கு அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த தடுப்பூசியை போடுவதற்கு யாரும் எந்தவித அச்சமும் பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு
பெண் ஐபிஎஸ் பாலியல் தொல்லை விவகாரம்: விசாரணை அதிகாரி நியமனம்!


பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டிஎஸ்பி ராஜேஷ் தாஸ் என்பச்வர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் விசாரணை அதிகாரி தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
சமீபத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ராஜேஷ் தாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின,
மேலும் பாலியல் புகார் வெளிவந்ததை அடுத்து ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் என்பதும் சமீபத்தில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது என்பதும் முன்னாள் சிறப்பு டிஎஸ்பி ராஜேஷ் மீது 2 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை: 23 தொகுதிகள் கேட்பதாக தகவல்!


அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்ட நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளிவரும் என தெரிகிறது. இந்த நிலையில் பாமகவுக்கு இணையாக தேமுதிகவும் தங்களுக்கு 23 தொகுதிகள் வேண்டும் என்று கேட்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால் அதிமுக தரப்பில் இருந்து 10 முதல் 15 தொகுதிகள் மட்டுமே கொடுப்பதாக கூறப்பட்டு வருகிறது. அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.