தமிழ்நாடு
மனைவியை ஜிம்முக்கு அனுப்பிய கணவனுக்கு நேர்ந்த சோகம்!


மதுரையில், காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனை விட்டுப் பிரிந்து, ஜிம் மாஸ்டருடன் மனைவி சென்ற சம்பவம் அந்த குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் பெருங்குடியைச் சேர்ந்தவர் ராஜேஷ். மதுரை விமான நிலையத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கனிமொழி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தார் சம்மதத்துடன் மூன்று ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
இத்தனை நாட்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த போது கனிமொழியின் கர்பப்பையில் நீர் கட்டிகள் உள்ளன. எனவே சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
எனவே தனது வீட்டில் அருகில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது யோகேஷ் கண்ணா என்ற ஜிம் பயிற்சியாளருடன் ஏற்பட்ட நெருக்கத்தில் காதல் வயப்பட்டுள்ளார்.
இவர்களது காதல் செல்போனிலும் தொடர, கணவர் ராஜேஷ் எச்சரித்துள்ளார். ஆனாலும் கணவனை மறந்து காதலன் பக்கமே இருந்துள்ளார் கனிமொழி. ரஜேஷ் மற்றும் யோகேஷ் கண்ணா இருவர் இடையிலும் இதன் காரணமாக அவ்வப்போது சண்டையும் ஏற்பட்டுள்ளது.
பிரிச்னை பெரியதாகக் கனிமொழி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் செல்ல முடிவெடுத்துள்ளார். இதை அறிந்த ராஜேஷ் மனைவிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கனிமொழி நடந்த சம்பவத்தை யோகேஷிடம் தெரிவித்துள்ளார்.
உடனே ஜிம் மாஸ்டர் யோகேஷ், கனிமொழி வீட்டுக்கு 4 பேருடன் வந்து கணவன் முன்பே, காதலியை அழைத்துச் சென்றுள்ளார். தடுக்க சென்ற ராஜேஷை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மனைவியை அழைத்துச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, மனைவியைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், பணம் அளிக்க வேண்டும் என்று ராஜேஷூக்கு போன் செய்துள்ளார் யோகேஷ். அதிர்ச்சியடைந்த ராஜேஷ், பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குழந்தை வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், மனைவியை ஜிம்முக்கு அனுப்பியது ராஜேஷூக்கு இப்போது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு
சென்னை ஈ.வெ.ரா பெரியார் சாலை பெயர் மாற்றப்பட்டதா?


சென்னை ஈவேரா பெரியார் சாலை பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பரவி வரும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பல ஆண்டுகளாக ஈவேரா பெரியார் சாலை அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென தேசிய நெடுஞ்சாலையின் அறிவிப்பு பலகையில் கிராண்ட் டிரங்க் ரோடு என்ற பெயராக ஈவேரா பெரியார் சாலை மாறியுள்ளது. அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் இணையதளத்திலும் டிரங்க் ரோடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மீண்டும் ஈவேரா பெரியார் சாலை என்று தேசிய நெடுஞ்சாலையின் அறிவிப்பு பலகையிலும் இணையதளத்திலும் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு
இன்றும் நாளையும் மெரீனாவில் அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!


இன்றும் நாளையும் சென்னை மெரினா உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறை நாள் என்பதும் நாளை தமிழ் புத்தாண்டு தின விடுமுறை என்பதும் தெரிந்ததே. இதனால் இந்த இரண்டு நாட்களிலும் சென்னை மெரினா உள்பட பல கடற்கரைகளில் பொது மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினால் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாகும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்தனர்.
ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தினமும் 2,000 பேருக்கு மேல் புதிதாக சென்னையில் பரவி வரும் நிலையில் இப்படி ஒரு நடவடிக்கை அவசியமானது என்று ஒரு சிலர் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு
இன்றும் நாளையும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் சூப்பர் சலுகை!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவ்வப்போது மெட்ரோ நிர்வாகம் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை தினங்களில் 50 சதவீத கட்டண சலுகைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ ரயிலை அதிக பயணிகள் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இன்றும் நாளையும் தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தமிழ்வருடப்பிறப்பு வருவதை அடுத்து அதே சலுகையை மீண்டும் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் என்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதும், இதில் பயணம் செய்வதால் பயணக்கட்டணம் குறைவாக உள்ளது என்பது மட்டுமின்றி நேரம் மிச்சமாகிறது என்பதும் குறிப்பாக அலுவலகம் செல்பவர்களுக்கும். விமான நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் செல்பவர்களுக்கும் மிகப்பெரிய வசதியாக இந்த மெட்ரோ ரயில்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடு1 day ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?