தமிழ்நாடு
“அதிமுகவைக் காப்பாற்றுவேன் என ஜெ., பிறந்தநாளன்று தீபம் ஏற்றுங்கள்!”- ஈபிஎஸ் – ஓபிஎஸ் எழுதிய வினோத கடிதம்!


அதிமுகவினர் அனைவரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியன்று, தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையை சந்திக்க உள்ளோம். இதில் நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருந்தாலும், எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்துக் கொண்டு எப்படியாவது நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்களை யெல்லாம் நம் உழைப்பாலும், உத்வேகத்தாலும், ஒற்றுமை உணர்வாலும், மக்கள் மீதுள்ள நேசத்தாலும், திசை மாறா விசுவாசத்தாலும் தோற்கடித்து, மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கடிதம். pic.twitter.com/lq9h3wXFm2
— AIADMK (@AIADMKOfficial) February 22, 2021
இந்த குறிக்கோளோடு கழகக் கண்மணிகள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோளை விடுக்கிறோம். பிப்ரவரி 24 – மக்களை கண் இமைபோல காத்த கடவுள் அம்மாவின் பிறந்த நாள்! இந்த பொன்னாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் ‘என் இல்லம் அம்மாவின் இல்லம்’ என்று உளமார நினைத்துக் கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு உள்நோக்கிப் பார்த்து, நம் ஒப்பற்ற தலைவியின் புனித ஆன்மாவிடம் பிரார்த்தனை செய்து, கீழ்க்கண்ட உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உறுதிமொழி:
‘உயிர்மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அண்ணா – திமுக இயக்கத்தையும் காப்பேன்! இது அம்மா மீது ஆணை!’
வரும் தேர்தலிலும் ஜெயித்து எதிரிகளை வீழ்த்தி, வரும் நூறாண்டுகளுக்கும் அன்பை மட்டுமே வளர்த்து, கோட்டையில் நம் கொடியை உயர பறக்கச் செய்வோம். இது உறுதி’ என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்த மதிமுக, விசிக: திமுக கூட்டணியில் சிக்கலா?


ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி தரப்பில் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த இரண்டு கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து விலக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இரட்டை இலக்கங்களில் தொகுதிகள் கேட்பதாகவும் தனி சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்ததாகவும், ஆனால் திமுக அதனை ஏற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு
அதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு!


நாம் அதிமுகவை தேடிச் செல்லவில்லை என்றும் அதிமுகதான் நம்மை தேடி பின்னால் வந்து கொண்டிருக்கிறது என்றும் தேமுதிகவின் சுதீஷ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? இடம்பெறாதா? என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியபோது தேமுதிக கேட்ட தொகுதிகளில் இருந்து பாதிக்கும் குறைவாகவே அதிமுக தருவதாக கூறியது. அதுமட்டுமின்றி தேமுதிகவின் கோரிக்கையான ராஜ்யசபா தொகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்திருந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காத நிலையில் தேமுதிக இவ்வாறு பேசியிருப்பது அந்த கட்சியின் அழிவை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
தமிழ்நாடு
4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்?


தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்தல் விதிமுறைகளை ஐந்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதுமட்டுமின்றி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளின் பறக்கும் படை சோதனையிட்டு வருகின்றனர்
இந்த நிலையில் இந்த பறக்கும் படையினர் 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்ததாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் அருகே ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 25 கோழி குஞ்சுகளை இலவசமாக அதிமுகவினர் வழங்கி வருவதாகவும் இதனை வாங்கிக் கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டதாகவும் ஒரு தகவல் மிக வேகமாக பரவியது.
இந்த தகவல் தேர்தல் பறக்கும் படையினர்களுக்கும் வந்ததை அடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற பறக்கும் படையினர் அதிமுகவினர் வைத்திருந்த 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர்.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருள்கள் கொடுப்பதுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது கோழிக்குஞ்சுகளை கொடுத்து வாக்கு கேட்கும் நிலைக்கு வந்து விட்டதே என்ற வருத்தம் தான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
-
இந்தியா1 day ago
தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்!
-
தமிழ்நாடு1 day ago
எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா?
-
இந்தியா1 day ago
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா?
-
இந்தியா2 days ago
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்!