தமிழ்நாடு
திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்!


வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என சிவோட்டர் மற்றும் ஏபிபி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணிக்கு 154 முதல் 162 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், 41 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அதிமுக கூட்டணிக்கு 58 முதல் 66 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் அந்த கூட்டணிக்கு 28.6 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அதிமுக என்ற இரு தரப்பிலும் இன்னும் கூட்டணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் இந்த கருத்து கணிப்பு சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாடு
நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? சீமான் விளக்கம்


நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்புக்கும் அவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது
அதுமட்டுமின்றி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ் உள்பட பலரும் விவேக் மரணத்தையும் தடுப்பூசியையும் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்
மேலும் ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்து இருக்கலாமே தவிர தடுப்பூசியே காரணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு
வேலூர் பட்டாசு கடையில் பயங்கர விபத்து: 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி


தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து காரணமாக பெரும் சேதம் உயிர் பலியும் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வேலூர் மாவட்டத்தில் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரில் பட்டாசு கடை உரிமையாளர் ஒருவர் என்பதும், அவரது இரண்டு பேரக்குழந்தைகள் என்பதும் மூவரும் பட்டாசு வெடி விபத்தில் ஏற்பட்ட தீயினால் உடல் கருகி உயிரிழந்தனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு
மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம், விரைவில் வழக்குப்பதிவு: ஆணையர் பிரகாஷ்


மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம் என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தபோது கொரோனா என்ற நோயே இல்லை என்றும் தடுப்பூசி என்பது மக்களுக்கு தேவை இல்லாதது என்றும் தடுப்பூசி என்ற பெயரிலும் கொரோனா என்ற பெயரிலும் மக்களை பயமுறுத்துகிறார்கள் என்றும் தடுப்பூசி போடுவதால் கூடுதலாக நோய் வருமே தவிர எந்த நோயும் குணமாகாது என்று ஆவேசமாக பேசினார்.
இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் பேசியது கிரிமினல் குற்றம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கிரிக்கெட்2 days ago
இன்று தோனிக்கு ஒரு சிறப்பான மேட்ச்: எப்படி தெரியுமா?
-
சினிமா செய்திகள்2 days ago
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!
-
சினிமா செய்திகள்1 day ago
விவேக் மறைவு குறித்து அரசியல் பிரபலங்களின் இரங்கல்கள்!
-
விமர்சனம்2 days ago
ஜோஜி – விமர்சனம்!