தமிழ்நாடு
சொந்த கட்சியிலேயே சூனியம்! உதயநிதிக்கு கெடுபிடி!!


திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதற்கு அவரது தரப்பு ஆதரவாளர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில், மற்ற திமுக நிர்வாகிககளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகனின் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. வருகின்ற சட்டமன்ற அன்பழகனின் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை போட்டியிட திமுக இளைஞரணியினர் முடிவு செய்துள்ளனர்.
அன்பழகன் ஏற்கெனவே அந்தத் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனால் அன்பழகனின் வாரிசு தான் திருவல்லிக்கேணி-சேப்பாக்கத்தில் போட்டியிட வேண்டும் என்று ஒரு மாவட்ட நிர்வாகி கிடுக்குபிடி வேலையில் ஈடுபட்டு வருகிறார்.
இதே போன்று திமுகவிற்கு கடுமையாக உழைத்தவன் நான், எனவே நான் தான் அந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று பகுதி நிர்வாகி ஒருவர் இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்த இரு பிரச்சனைகளுக்கு மத்தியில் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது தான் கேள்விக்குறி.
தமிழ்நாடு
பொதுத்தேர்வு ரத்தானாலும் பள்ளிக்கு வரவேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்


9 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து என இன்று காலை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் என்பதும் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒரு சில ஊடகங்களில் 9,10,11 ஆகிய வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ’பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும்’ என்று கூறினார்
மேலும் அடுத்த கல்வியாண்டுக்கு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து உரிய ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
தமிழ்நாடு
ட்யூனில் பின்னிப் பெடலெடுத்த ‘மோடி சாங்’- பாஜக வெளியிட்ட வீடியோவ பாத்துட்டீங்களா?


பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரி வந்துள்ளார். அங்கு அவர் பாஜக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து அவர் கோயம்புத்தூர் வந்து, தமிழ தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். இதையொட்டி பாஜக சார்பில் வெளியிடப்பட்ட ‘வாங்க மோடி, வணக்கங்க மோடி’ கவனம் ஈர்த்து வருகிறது.
‘மோடி பாடல்’ வீடியோ இதோ:
வாங்க மோடி …
வணக்கங்க மோடி …#TNWelcomesModi pic.twitter.com/D7fH4pmxzb— BJP Tamilnadu (@BJP4TamilNadu) February 25, 2021
புதுச்சேரியில் பேசிய மோடி, ‘புதுவை மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.2,426 கோடி மதிப்பிலான விழுப்புரம் – நாகை 4 வழிச்சாலை திட்டத்தால் பொருளாதாரம் மேம்படும். புதுச்சேரியில் தற்போது சாலை, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் கடல் சார் வணிகங்களுக்காக பல்வேறு திட்டங்களைத் துவக்கி உள்ளோம். இதன் மூலம் மிகப் பெரும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இல்லாத காரணத்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை நான் பார்க்கிறேன். புதுச்சேரிக்கு ஒரு நல்ல அரசாங்கம் தேவையானது. அடுத்து புதுச்சேரியில் உருவாகப் போகும் அரசு, மக்களை மையமாகக் கொண்டதாக இருக்கும்’ என்று பேசினார்.
தமிழ்நாடு
“9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்” ஏன்? – முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விளக்கம்


தமிழகத்தில் கல்வி பயின்று வரும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் இந்த கல்வியாண்டில் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இந்த முடிவு எடுத்ததற்கு காரணம் என்னவென்பது குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் தெரிவிக்கையில், ‘கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து, கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் வைட்டமின் மற்றும் புத்துணர்வு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்தக் கல்வியாண்டு முழுவதும் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தார்கள். மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதன் சிரமத்தைக் கருத்தில் கொண்டு பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டன.
மேலும் இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020 – 21 கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் மதிப்பீடுகள் எப்படி கணக்கிடப்படும் என்பது குறித்து அரசு விரைவில் தகவல் வெளியிடும்’ என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
கிரிக்கெட்2 days ago
100வது டெஸ்டில் விளையாடும் இஷாந்த் சர்மா; இந்திய அணியில் அவர் முதன்முறை தேர்வானபோது கோலி செய்த காரியம்
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2021)
-
கிரிக்கெட்1 day ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்