தமிழ்நாடு
மு.க.ஸ்டாலினை தொடர்ந்து கிரண் பேடியை விளாசிய டிடிவி தினகரன்!


தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி சர்ச்சைக்குறிய வார்த்தைகளை பயன்படுத்தியது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் வறட்சிக்குக் காரணம் மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அதிகாரிகளின் அலட்சியம். அத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும்கூட காரணமாக உள்ளது என தமிழக மக்களை கிரண் பேடி கோழைகள் என மோசமாக விமர்சித்திருந்தார்.
இது நேற்று தமிழக சட்டசபையில் நேற்று எதிரொலித்தது. திமுகவினர் கிரண் பேடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதுவை ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்து அறிக்கை வெளியிட்டார். அவரை உடனடியாக ஆளுநர் பதவியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. மேலும் புதுவை திமுகவினர் ஆளுநர் கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது. ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல.
அப்படி ஏதாவது கேட்க நினைத்தால் அவர் பதிவிட்டுள்ளபடிநிர்வாக திறனற்ற இந்த ஆட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வருபவர்களிடம் கேள்வி கேட்கட்டும். அம்மா என்கிற இரும்புப் பெண்மணி ஆண்ட தமிழகத்தை பிறர் கேலி பேசுகிற நிலைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் ஆளாக்கிவிட்டது வேதனை அளிக்கிறது என்றார்.
தமிழ்நாடு
புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு


இந்திய தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்டுவந்த சுனில் அரோரா அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுசில் சந்திரா என்பவரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் முடிவடைந்த நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்றுடன் தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக யார் நியமன செய்யப்படுவார் என்ற பரபரப்பு இருந்தது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் சுசில் சந்திரா அவர்கள் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி வரை பதவியில் இருப்பார். இந்த காலகட்டத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் அதிரடி!


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் தீவிரமாக கடந்த சில வாரங்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அவரது காலில் காயம் ஏற்பட்ட போதிலும் சக்கர நாற்காலியில் இருந்து அவர் பிரசாரம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திடீரென மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை அவர் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு
முதல்வர் கூட்டிய சிறப்பு கூட்டத்திற்கு பின் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது:
-
தமிழ்நாடு16 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
விமர்சனம்2 days ago
அழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்!
-
இந்தியா1 day ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
கிரிக்கெட்2 days ago
ஷிகர் தவான் அபார ஆட்டம்: சென்னை அணி தோல்வி!