தமிழ்நாடு
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? 11 எண் வரையிலான கூண்டுகளுக்குமான விளக்கம் என்ன?


புயல் வரும் போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைக் கணித்துத் தெரிவிக்கும் முறையே புயல் எச்சரிக்கை கூண்டு. இவை கடலில் உள்ள கப்பல்களுக்கு வானிலை குறித்த தகவல்களைத் தெரிவிக்க முக்கியமாகப் பயன்படுத்துகிறது. இதை வைத்து எந்த அளவிற்குப் புயலின் தாக்கம் இருக்கும் என்பதை மக்களும் அறிந்துள்ள முடியும்.
சில நாடுகளில் புயல் எச்சரிக்கைக்காகக் கொடி ஏற்றப்படும். அப்படி இந்தியாவில் சிலிண்டர் மற்றும் கோன்கள் பயன்படுத்துகின்றன. எனவேதான் புயல் எச்சரிக்கை கூண்டு என்று கூறப்படுகிறது. இதுவே இரவு நேரம் என்றால் சிவப்பு மற்றும் வெள்ளை மின் விளக்குகள் பயன்படுத்தி புயல் எச்சரிக்கை விவரங்கள் தெரிவிக்கப்படும்.
பொதுவாக இந்த புயல் எச்சரிக்கை கூண்டுகள் 1 முதல் 11 வரை ஏற்றப்படுகிறது.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பெரிய பாதிப்புகள் இருக்காது. பலமான காற்று வீசும். 60 கிலோ மீட்டர் காற்றின் வேகம்.
இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகங்களில் உள்ள வீட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும். பலமாக காற்று வீசும் போது கப்பல்கள் அருகருகில் இருந்தால் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இது ஒரு கப்பல்களுக்கான எச்சரிக்கையாக உள்ளது. 60 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகம்.
மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், பலத்த காற்றோடு திடீர் மழை பெய்யும். இந்த வானிலையால் துறைமுகத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டும். கப்பல்களும் பாதிப்பிற்குள்ளாகும். 40 முதல் 50 கிலோ மீட்டர் காற்றின் வேகம்.
நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
துறைமுகத்தில் மற்றும் கடலோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதைக் குறிக்கிறது. 50 முதல் 60 கிலோ மீட்டர் வரையிலான காற்றின் வேகம்.
ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகி இருப்பதைக் குறிக்கிறது. மேலும் புயல் இடது பக்கமாக கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை குறியாகவும் இது உள்ளது.
ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஐந்து போன்றுதான். ஆனால் இது புயல் வலது புறமாகக் கடக்கும் என்பதைக் குறிக்கும்.
ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகம் வழியாக அல்லது அருகில் புயல் கரையைக் கடக்கும் என்பதை குறிப்பதாகும். இதனால் துறைமுகத்திற்குப் பெரிய பாதிப்பு ஏற்படும்.
எட்டம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
எட்டம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு மிகவும் அபாயம் என்பதைக் குறிக்கும். காற்றின் வேகம் 90 முதல் 120 கிலோ மீட்டர் வரையில் இருக்கும். புயல் துறைமுகத்தின் இடது பக்கம் கடக்கும்.
ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
தீவிர புயல் அல்லது அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ளது என்ற பொருள். மேலும் புயல் வலது புறமாகக் கடக்கும் வாய்ப்புகள் உண்டு.
பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
காற்றின் வேகம் 120 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். மிகவும் அபாயகரமான எச்சரிக்கை இது. புயல் கடக்கும் போது துறைமுகத்தைப் பலமாகச் சேதப்படுத்தும் அளவுக்கு மோசமாக இருக்கும்.
பதினொன்றாம் எண் புயல் எச்சரிக்கை:
வானிலை மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்படும். மிகவும் உச்சபட்சமான புயல் எச்சரிக்கையைக் குறிக்கும்.
தமிழ்நாடு
வருங்காலத்தில் 200 தொகுதிகளில் போட்டியிடுவோம்: ஒப்பந்தத்திற்கு பின் கே.எஸ்.அழகிரி பேட்டி!


திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே செய்தி வந்த நிலையில் சற்று முன் இது குறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Uncategorized
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றிய கேள்வி; பதில் சொல்ல தெரியாமல் திணறிய எல்.முருகன்!


பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகளும், பல தரப்பினரும் மத்திய அரசைக் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான காரணம் பற்றி விளக்க தெரியாமல் திணறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக எரிபொருட்களின் விலையேற்றம் குறித்து முருகன், ‘பெட்ரோல், டீசல், கேஸ் ஆகிய விலைகளை 2013 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதையும், அப்போதிலிருந்து இப்போது வரை அதன் விலை எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நீங்கள் உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் அனைத்தின் விலையும் தொடர்ந்து குறைந்து கொண்டே தான் இருக்கின்றது.
ROFL 😂😂😂👌#BJPfails pic.twitter.com/sKPr1ccLrs
— #BJPfails (@BJPFails_) March 6, 2021
2013 ஆம் ஆண்டு கேஸ் விலை 1000 ரூபாய்க்கு மேல் இருந்தது. தற்போது 700 ரூபாய் தான் உள்ளது. உலகின் எல்லா பகுதிகளிலும் எண்ணெய் விலை என்பது சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து தான் இருக்கிறது. அதைப் போலவே இந்தியாவிலும் சர்வதேச சூழல்களைப் பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் பொருளாதார மந்த நிலை நிலவியது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு உள்ளது.
அதேபோல இன்றைக்கு இந்தியாவுக்கு எண்ணெய் வர வேண்டும் என்றால் கப்பல் மூலமாகத் தான் வர வேண்டும். அப்படி வருவதற்கு லேட்டாவதும் ஒரு காரணமாகத் தான் இருக்கிறது’ என்று வினோதமான விளக்கத்தைக் கொடுத்தார்.
தமிழ்நாடு
தேர்தலில் போட்டியிடுவது உறுதி- அறிவித்தார் வேல்முருகன்!


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. களத்தில் மோதிக் கொள்ளும் இரண்டு பிரதான கட்சிகளான திமுக – அதிமுக இடையேயான கூட்டணி காய் நகர்த்தல்களும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
குறிப்பாக இன்னும் ஓரிரு நாட்களில் இரு கட்சிகளும் தங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு இந்த முறை, 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட உள்ளார். இது குறித்து அவர், ‘தொகுதிகளை கொடுக்கும் இடத்தில் பெரிய கட்சியாக இருப்பது திமுக. எனவே அந்தக் கட்சி எங்களுக்கு எவ்வளவு தொகுதி கொடுக்கும் என்பது குறித்து விரைவில் தெரிவிப்பேன். நான் இந்த தேர்தலில் களமிறங்குவது உறுதி’ என்று கூறியுள்ளார்.
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – “இந்தியா ரொம்ப டஃப்புங்க..!”- புலம்பும் பென் ஸ்டோக்ஸ்
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்!
-
Uncategorized2 days ago
ஓட்டுநர் உரிமம் பெற இனி RTOஅலுவலகம் செல்லத் தேவையில்லை!
-
கிரிக்கெட்2 days ago
4 விக்கெட்டுக்களை இழந்து திணறி வரும் இந்திய அணி: தனியாளாக போராடும் ரோஹித்!