தமிழ்நாடு
பொறியியல் மாணவர்களுக்கு செப்டம்பர் 22 முதல் ஆன்லைனில் தேர்வு… அண்ணா பலகலைக்கழகம் அறிவிப்பு!


அண்ணா பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்குச் செப்டம்பர் 22 முதல் 29-ம் தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கணினி, லேப்டாப். மொபைல், டேப்ளட் போன்ற மின்னணு சாதனங்கள் மூலம் தேர்வுகளை எழுத முடியும்.
தேர்வுக்கு ஒரு வாரம் முன்பாக மாக் டெஸ்ட் எனப்படும் பயிற்சித் தேர்வு நடைபெறும். இதையும் மாணவர்கள் ஆன்லைனிலேயே எழுதலாம். விரைவில் ஆன்லைன் தேர்வு குறித்து மாணவர்களுக்கு விரிவான வழிகாட்டு முறைகளும் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
கொரோனா காரணமாகக் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இறுதி ஆண்டு மானவர்களுக்கான தேர்வுகளை மட்டும் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.
ஏற்கனவே மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு எழுதும் முறையை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முயற்சி எடுத்து வந்த நிலையில், அதற்கான மென்பொருள் தற்போது தாராக உள்ளதால் இறுதி தேர்வு ஆன்லைனில் நடைபெற உள்ளது.
அரியர் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு ஓர் இரு நாட்களில் தீர்வு வரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்நாடு
அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள்: ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகுமா?


அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டாலும் தற்போது இரு தரப்பினரும் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக கிடைக்கும் தொகுதிகள் எவை எவை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பட்டியல் பின்வருமாறு;
மேற்கண்ட பட்டியலில் இருந்து தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென பாஜக கோரிக்கை வைத்துள்ளதாகவும் இதுகுறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ்நாடு
தேமுதிகவுக்கு 15 தொகுதிகள்? இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?


அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக அந்த கூட்டணியில் நீடிக்குமா? அல்லது தனித்து போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இணையுமா? 3வது அணியில் இணையுமா? என்ற கருத்துக்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவி வருகிறது.
அதுமட்டுமின்றி சமீபத்தில் தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அதிமுக குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் தற்போது மீண்டும் அதிமுக-தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால் தமிழகம் முழுவதும் தொண்டர்களை வைத்திருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் தேமுதிக வெறும் 15 தொகுதிகளுக்கு அதிமுக கூட்டணியில் இணையுமா? அல்லது அதிரடி முடிவு எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில் தேமுதிக இல்லை என்றாலும் தேமுதிக இல்லாமல் கூட்டணியை வழி நடத்த அதிமுக தலைவர்கள் முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ்நாடு
கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவது தான் நம் முதல் வேலை: உதயநிதி ஸ்டாலின்


கொள்ளையடித்தயவர்களை சிறையில் தள்ளுவது தான் நமது முதல் வேலை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது ஆவேசமான சமூக கருத்துக்களையும் அரசியல் கருத்துகளையும் ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.
குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக அரசுக்கு எதிராக அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு கருத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக அரசின் ஊழல் குறித்து அவர் சற்று முன் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
மக்கள் பணத்தை சுருட்டி தம் முதலாளிகளுக்கு பங்கு வைப்பதில் எடுபுடிகள் மும்முரமாக உள்ளனர். கழக ஆட்சி அமைந்ததும் அடிமைகள் கொள்ளையடித்த மக்கள் பணத்தை மீட்டு அரசு கஜானாவில் சேர்ப்பதும் – கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவதுமே நம் முதல் வேலை.
மக்கள் பணத்தை சுருட்டி தம் முதலாளிகளுக்கு பங்கு வைப்பதில் எடுபுடிகள் மும்முரமாக உள்ளனர். கழக ஆட்சி அமைந்ததும் அடிமைகள் கொள்ளையடித்த மக்கள் பணத்தை மீட்டு அரசு கஜானாவில் சேர்ப்பதும் – கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவதுமே நம் முதல் வேலை. 2/2
— Udhay (@Udhaystalin) March 5, 2021
-
கிரிக்கெட்1 day ago
பும்ராவுக்கும் இந்த தமிழ் நடிகைக்கும் திருமணமா?
-
சினிமா செய்திகள்2 days ago
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய தமிழ் நடிகை வீட்டில் ஐடி ரெய்டு!
-
கிரிக்கெட்1 day ago
களை கட்டியது ஐபிஎல் 2021: தோனி, அம்பத்தி ராயுடு சென்னை வருகை!
-
கிரிக்கெட்1 day ago
6 பந்தில் 6 சிக்ஸர்கள்: பொளந்து கட்டிய பொல்லார்டு!