தமிழ்நாடு
எதிர்க்கட்சிகளின் வாக்கு சீட்டு தேர்தல் கோரிக்கைக்கு ஆதரவு அளித்த அதிமுக!


2019-க்கான பொதுத் தேர்தல் குறித்த பரபரப்பு தற்போதே தொடங்கியுள்ள நிலையில் 17 அரசியல் கட்சிகள் இந்த முறை மின்னணு இயந்திரத்தினைத் தவிர்த்து வாக்கு சீட்டு முறையில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணத்திடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அதற்கு அதிமுகவும் ஆதரவு அளித்துள்ளது.
மக்களவையின் துணை சபாநாயகரான அதிமுகவின மூத்த தலைவரான தம்பிதுரை அதிமுக வாக்கு சீட்டு முறையில் தேர்தலை சந்திக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார். பல மேற்கத்திய நாடுகளில் மின்னணு வாக்கு முறையினைத் தவிர்த்து இன்று வரை வாக்களிக்கப் பேப்பர் முறையைத் தான் பின்பற்றி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டுத் தேர்தலில் பல இடங்களில் மின்னணு வாக்கு முறையில் மோசடி நடைபெற்றதாகச் சர்ச்சை எழுந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் இந்தப் பேப்பர் வாக்கு சீட்டு முறையினைக் கோரிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு இயந்திரங்களில் எந்த மோசடியும் செய்ய முடியாது. வேண்டும் என்றால் வாக்காளர்களுக்குக் கூடுதலாக உறுதி அள்ளிக்கும் முறையினை அளிப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்த போது எதிர்க்கட்சிகள் அதனை ஏற்கவில்லை.
திருநாமுல் காங்கிரன்ஸ், காங்கிரஸ், ஷிவ் ஷேனா, தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திங்கட்கிழமை பாரராளுமன்றத்தில் இது குறித்து அழுத்தம் அளிக்க உள்ளனர்.
தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவும் 2001-ம் ஆண்டு மின்னணு வாக்கு ம் நுறையில் சந்தேகங்கள் உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையும் தம்பிதுறை சுட்டி காட்டியுள்ளார்.
எனவே 2019-ம் ஆண்டின் பொதுத் தேர்தல் மின்னணு வாக்கு முறையில் நடுக்குமா என்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு
ரூ.4 கோடி மதிப்புள்ள செல்லாத ரூ.1000 நோட்டு பறிமுதல்: சிவகெங்கையில் பரபரப்பு!


கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நோட்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது 1,000 ரூபாய் நோட்டுகள் ரூபாய் 4.5 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் ஐந்து ஆண்டுகள் கழித்து ரூ.4.5 கோடி அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சிவகெங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு
புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு


இந்திய தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்டுவந்த சுனில் அரோரா அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுசில் சந்திரா என்பவரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் முடிவடைந்த நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்றுடன் தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக யார் நியமன செய்யப்படுவார் என்ற பரபரப்பு இருந்தது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் சுசில் சந்திரா அவர்கள் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி வரை பதவியில் இருப்பார். இந்த காலகட்டத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் அதிரடி!


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் தீவிரமாக கடந்த சில வாரங்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அவரது காலில் காயம் ஏற்பட்ட போதிலும் சக்கர நாற்காலியில் இருந்து அவர் பிரசாரம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திடீரென மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை அவர் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு19 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
விமர்சனம்2 days ago
அழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்!
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!