தமிழ்நாடு
சிறையில் சசிகலாவிடம் 8 மணி நேரம் விசாரணை!


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இன்றும் விசாரணை தொடர்கிறது.
கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம் தேதி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு, அலுவலகம் என சுமார் 189 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனை என கூறப்பட்ட இந்த சோதனை ஐந்து நாட்கள் நீடித்தது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறை நிர்வாகத்தினரிடம் அனுமதி கேட்டு வருமான வரித்துறையினர் கடிதம் எழுதினர்.
இதனையடுத்து டிசம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்திக்கொள்ள வருமான வரித் துறைக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. மேலும் இந்த விசாரணைக்கு 5 அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது சிறை நிர்வாகம்.
இதனையடுத்து நேற்று காலை வீரராகராவ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணையைத் தொடங்கினர். சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஐந்து பைகளில் எடுத்து வந்து அவர்கள் விசாரித்தனர்.
காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணையானது 8.30 மணி நேரம் நடைபெற்று மாலை 7.30 மணியளவில் நிறைவுற்றது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சசிகலாவிடம் பல்வேறு கேள்விகளை வருமான வரி அதிகாரிகள் எழுப்பியுள்ளனர். இந்த விசாரணை இன்றும் தொடர்கிறது. தேவைப்பட்டால் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு
80 கோடி மக்களுக்கு ரூ.26,000 கோடி மதிப்பில் உணவு தானியங்கள்: பிரதமர் அறிவிப்புக்கு எல்.முருகன் நன்றி


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளது. முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக பலர் வேலை இழந்துள்ளதாகவும் வருமானம் இன்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சற்று முன்னர் பிரதமர் மோடி அவர்கள் நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு மே, ஜூன் மாதம் ஆகிய இரண்டு மாதங்களும் இலவசமாக 5 கிலோ தானியங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவையடுத்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: 80 கோடி மக்களுக்கு ரூ.26,000 கோடி மதிப்பில் இலவசமாக உணவு தானியங்கள். கொரோனா இரண்டாவது அலை மக்களிடம் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தினால் 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடுதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படா வண்ணம் தேசிய அளவில் திட்டமிடல் போன்ற பணிகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
மே&ஜூன் மாதங்களில் இவ்வுதவியை மக்கள் பெறமுடியும். உடனடி நிவாரணமாக இந்த உதவியை அறிவித்த மத்திய அரசுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். மத்திய மாநில அரசுகள் அறிவிக்கின்ற கொரோனா பாதுகாப்புமுறைகளை பொதுமக்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு
முதல்வரை திடீரென சந்தித்த தலைமை செயலாளர்: என்ன காரணம்?


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை திடீரென சற்று முன்னதாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. நேற்றும் நேற்று முன்தினமும் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் முதல்வரின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் நடந்த கூட்டம் குறித்து முதல்வரிடம் தலைமைச் செயலாளர் விளக்கம் அளிப்பார் என்றும் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழகத்தில் விதிப்பது குறித்து ஆலோசனை செய்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு
ரூ.3408 கோடி மதிப்பில் இப்போது கட்டிடங்கள் கட்டும் பணி தேவையா? ராகுல்காந்தி சாட்டையடி கேள்வி


கொரோனா வைரஸால் இந்தியாவே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 3408 கோடி ரூபாய் மதிப்பில் 3 செயலகங்கள் கட்டும் பணி தேவையா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஏற்பாடு செய்தால், ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்குதல், கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாட்டை சரிசெய்தல் உள்பட பல்வேறு மக்கள் உயிரை காக்கும் பணிகள் இருக்கும் நிலையில் ரூபாய் 3408 கோடி மதிப்பில் மத்திய அரசு மூன்று தலைமை செயலகங்களை கட்டும் பணியில் தீவிரமாக உள்ளன.
-
தமிழ்நாடு2 days ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)
-
வணிகம்2 days ago
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!
-
கிரிக்கெட்2 days ago
220 ரன்கள் அடித்தும் டென்ஷனான மேட்ச்: சிஎஸ்கே த்ரில் வெற்றி!