தமிழ்நாடு
தேர்தல் நேரத்தில் திடீரென மாற்றப்பட்ட 54 ஐபிஎஸ் அதிகாரிகள்: தமிழகத்தில் பரபரப்பு!


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த பணிகளை தேர்தல் ஆணையமும், தேர்தலை சந்திப்பது குறித்த பணிகளை அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக செய்து வருகின்றன. இம்மாத இறுதியில் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளி வந்து விட்டால் கட்டுப்பாடுகளும் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் திடீரென ஒரே நாளில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிர்வாக வசதிக்காக அவ்வப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐபிஎஸ், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று என்றாலும், நேற்று ஒரே நாளில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட 54 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்கள் அவர்கள் பணிபுரியவுள்ள இடங்கள் குறித்த முழு விபரம் இதோ:
தமிழ்நாடு
திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்: ஒப்பந்தம் கையெழுத்தன பின் கூறிய மமக தலைவர்


பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து செய்தபின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
மேலும் மனித நேய மக்கள் கட்சி எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு
திமுக கூட்டணியில் முஸ்லீம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்து!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இந்தநிலையில் சற்றுமுன் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்
வைகோவின் மதிமுக கட்சிக்கு அதிகபட்சம் 5 அல்லது 7 தொகுதிகள் மட்டுமே தருவதாக திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது.
தமிழ்நாடு
அதிமுக விருப்பமனு தேதி திடீர் மாற்றம்!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், விருப்பமான பெறுதல், நேர்காணல், தேர்தல் பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றை கிட்டதட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுகவில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை மார்ச் 5ஆம் தேதி வரை தரலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது போதிய அவகாசம் இல்லாததால் அந்த தேதி மார்ச் 3ஆம் தேதி என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.