கிரிக்கெட்
ரோஹித் ஷர்மாவுக்கு பதில் ஷூப்மன் கில்!


காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா வெளியேறினார்.
எனவே ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இளம் வீரர் ஷூப்மன் கில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவார் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஷூப்மன் கில் 204 ரன்களை குவித்திருந்தார்.
எனவே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஷூப்மன் கில், அடுத்து நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ள 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் அட்டவணை!
கிரிக்கெட்
“அவரு சும்மா தெறிக்க விட்டாப்ல”- Pantக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் புகழாரம்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கெத்து காட்டியுள்ளது இந்தியா. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட். கடைசி வரை அவர் களத்தில் இருந்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் டெலிவரிகளை மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிதறடித்தார். கடைசியில் வெற்றிக்கான ரன்களையும் அவரே அடித்து, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் அவருக்கு எதிராக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித், பன்ட்டை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
ஸ்மித், ‘இந்தப் போட்டியை வென்றதற்கு இந்தியாவுக்கு நீங்கள் முழு பாராட்டுகளை கொடுத்தே ஆக வேண்டும். மிக அதிகமான அழுத்தம் அவர்கள் மீது இருந்தது. இருப்பினும் அவர்கள் களத்தில் அதை எல்லாம் சமாளித்து அற்புதமான கிரிக்கெட் ஆடினர். புஜாரா, வெகு நேரம் களத்தில் இருந்து எங்கள் அணியின் பவுலர்களை சோர்வடையச் செய்தார். அவருக்கு முன்னர் சுப்மன் கில்லும் நன்றாக விளையாடி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.
இவர்கள் எல்லோரையும் விட ரிஷப் பன்ட், இன்று ஆடிய விதம் மெச்சத் தகுந்தது. அவர் ஒரு அசாத்திய திறமை படைத்த விளையாட்டு வீரர். அதைப் பல முறை நாம் பார்த்துள்ளோம். குறிப்பாக டி20 போட்டிகளில் அதை அவர் அடிக்கடி செய்து காண்பித்து இருக்கிறார். ஆனால், இன்று டெஸ்ட் போட்டியிலும் அவரால் என்ன செய்ய முடியும் என்பதை எல்லோருக்கும் காட்டி விட்டார்.
குறிப்பாக அவர் அதிரடியாக ஆடியதால், கேம் எங்கள் கைகளில் இருந்து நழுவி விட்டது. இந்திய அணி, இந்த தொடரை இப்படி விளையாடியதற்கு பாராட்டுகள்’ என்று மிக வெளிப்படையாக பேசியுள்ளார்.
Steve Smith reflects on the final day at the Gabba and THAT knock from Rishabh Pant… #AUSvIND | @alintaenergy pic.twitter.com/XnKL7wnO9a
— cricket.com.au (@cricketcomau) January 19, 2021
எதிரணியினரே வியக்கும் அளவுக்கு இந்திய அணியினரின் ஆட்டம் இருந்துள்ளது. இந்த தொடரில் முன்னணி மற்றும் முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும், கேப்டன் விராட் கோலியே இல்லாத நிலையிலும் இந்தியா, வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த வெற்றி வரலாற்றில் பதிக்கப்படும்.
கிரிக்கெட்
INDvAUS – 32 ஆண்டுகளுக்குப் பின் ஆஸி., மண்ணில் இந்தியா நிகழ்த்திய சாதனை; வெற்றி பெற்ற அந்த கணம்..! #Video


இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. தொடரின் கடைசி போட்டியில் த்ரில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது இந்தியா.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 328 ரன்கள் இலக்கை இந்திய அணி, போராடி அடைந்தது. டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸை பொறுத்தவரை இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில், புஜாரா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் அரைசதம் அடித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
குறிப்பாக 5வதாக களமிறங்கிய ரிஷப் பன்ட், 138 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை விக்கெட் இழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கே இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.
4வது டெஸ்ட் போட்டி நடந்த காபாவில், ஆஸ்திரேலிய அணி கடந்த 32 ஆண்டுகளாக வீழ்த்தப்பட்டதில்லை. அதை முறியடித்துள்ளது இந்திய அணி. மேலும் ஆஸ்திரேலிய மண்ணிலேயே அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்று கெத்து காட்டியுள்ளது.
A moment to savour for India! #AUSvIND pic.twitter.com/vSogSJdqIw
— cricket.com.au (@cricketcomau) January 19, 2021
என்னதான் இந்தியா, தொடரை வென்றிருந்தாலும், தொடர் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்.
அவர், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 20.04 என்கிற சராசரியில் அவர் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
The best bowler in the world somehow went to another level this summer.
Well played Pat Cummins – the Player of the Series! #AUSvIND pic.twitter.com/z27tvBMpLQ
— cricket.com.au (@cricketcomau) January 19, 2021
அனுபவமற்ற, முன்னணி வீரர்கள் பெரும்பான்மையானவர்கள் இல்லாத நிலையில், இந்தியா, வலுவான ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியுள்ளது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
கிரிக்கெட்
INDvAUS – வெறித்தனமான வேகத்தில் வந்த பவுன்சர்கள்… மலையென அசராமல் நின்ற புஜாரா – இது தைரியத்தின் உச்சம்!


இந்திய கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு, ‘தி வால்’ என்று பெயரெடுத்தவர் செத்தேஷ்வர் புஜாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் கடினமான தடுப்பாட்டத்தில் வல்லவர் புஜாரா. அதை நான்காவது டெஸ்டின் 5வது நாள் ஆட்டத்தில் திறம்பட வெளிக்காட்டி வருகிறார் புஜாரா.
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. கடைசி இன்னிங்ஸில் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இந்தியாவுக்கு, இலக்கு வைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. நேற்று ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மீண்டும் வெற்றி பெறும் கனவோடு தனது இன்னிங்ஸை ஆரம்பித்தது இந்தியா.
இதுவரை ரோகித் சர்மா 4 ரன்களுக்கும், சுப்மன் கில் 91 ரன்களுக்கும், கேப்டன் அஜிங்கியே ரஹானே 24 ரன்களுக்கும் அவுட்டாகி பெவிலியன் திரும்பியுள்ளார்கள். களத்தில் தற்போது அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பன்ட் மற்றும் தடுப்பாட்ட கிங் புஜாரா ஆகியோர் உள்ளனர். பன்ட் 46 பந்துகளுக்கு 16 ரன்னிலும், புஜாரா 187 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர். இந்த இருவர் களத்தில் வெகு நேரம் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றி வசப்படும்.
இன்றைய நாளில் இன்னும் 29 ஓவர்கள் பாக்கியிருக்கின்றன. அதில் இந்தியா 134 ரன்கள் எடுத்தாக வேண்டும். எப்படியும் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் இந்தியா, வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
இன்றைய ஆட்டத்தில் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்த, ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கையிலெடுத்த ஆயுதம் பவுன்சர். விடாமல் புஜாராவுக்கு பவுன்சர்களைப் போட்டு அவரை நோகடித்தனர். பவுன்சராக வீசப்பட்ட பல பந்துகள் புஜாராவின் உடலிலும், ஹெல்மட்டிலும் தான் பட்டன. ஒரு முறை ஹெல்மெட் டேமேஜ் ஆகும் அளவுக்கு இருந்தது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் மூர்க்கமான பவுன்சர்கள். புஜாராவின் தடுப்பாட்டம் இந்தப் போட்டியில் அதிக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
புஜாரா பவுன்சர்களை சமாளித்த விதம் குறித்தான வீடியோ:
Pujara cops another ball on the arm.
Live #AUSvIND: https://t.co/qvYTMSiZsl pic.twitter.com/u27A9LT5KM
— cricket.com.au (@cricketcomau) January 19, 2021
Ouch! Pujara rips his glove off after copping one flush on the glove!
Live #AUSvIND: https://t.co/qvYTMSiZsl pic.twitter.com/xXLuC0jcEa
— cricket.com.au (@cricketcomau) January 19, 2021
This is well directed short bowling 🎯
Live #AUSvIND: https://t.co/qvYTMSiZsl pic.twitter.com/J28v3Rhvj6
— cricket.com.au (@cricketcomau) January 19, 2021