கிரிக்கெட்
தோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!


அபுதாபில் உள்ள ஷேக் ஜயித் மைதானத்தில் முதல் போட்டியில், மும்பை இந்தியன் அணியை எதிர்த்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.
டாஸ் வென்ற தோனி, இரண்டாம் பாதியில் பனியில் பந்து வீசுவது கடினமாக இருக்கும், எனவே பவுளிங் தேர்வு செய்வதாகக் கூறினார். மைதானத்தையும் வானிலையையும் முன்பே கணித்திருந்த தோனியின் முடிவு பலராலும் வரவேற்கப்பட்டது.
முதலில் பேட்டிங் ஆட தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரோகித் ஷர்மா, டீ காக் இருவரும் கலம் இறங்கினர். சாஹர் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரோகித் ஷர்மா அதிரடி காட்டினார்.
ஆனால் 10 பந்துகளுக்கு 12 ரன் அடித்து இருக்கும் போது, 4வது ஓவரில் 4 பந்தை சாவ்லா வீசிய பந்தில் சாம் குர்ரனிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக ரோகித் ஷர்மா விளையாடினர். அவரை தொடர்ந்து டீ காக் அதிரடியாகத் தனது அட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், 20 பந்துகளுக்கு 33 ரண்கள் எடுத்திருந்த டீ காக், சாம் குர்ரன் போட்ட பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளீயேரினார். அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணீயில் சவுரப் திவாரி மட்டும் 31 பந்துகளில் 41 அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 162 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்து இருந்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க அட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். ஷேன் வாட்சன் 5 பந்துகளுக்கு 4 ரன் அடித்து இருக்கும் போது போல் வீசிய பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார். முரளி விஜய் 7 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே அடித்து இருந்த நிலையில் ஜேம்ஸ் பாட்டிசன் பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார்.
பின்னர் ஜோடி செர்ந்த டூபிசிஸ், அம்பத்தி ராயுடு அணி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 48 பந்துகளுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் சாஹர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். டூபிளிசிஸ் 44 பந்துகளுக்கு 58 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
ரவீந்தர ஜடேஜா 5 பந்துகளுக்கு 10 ரன்களும், சாம் குர்ரன் 6 பந்துகளுக்கு 18 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தோனி இரண்டு பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டம் இழக்காமலிருந்தார்.19 ஓவரின் 2வது பந்தில் 166 ரன்கள் அடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐபிஎல் 2020-ன் முதல் போட்டியில் வெற்றியுடன் தங்களது வீர நடையை சென்னை சூப்பர் கிங்ஸ் அடி எடுத்து வைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இரண்டாம் போட்டியில் டெல்லி டேர்டெவில் அணியும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.
கிரிக்கெட்
சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி – மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கொல்கத்தாவில் இருக்கும் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் கங்குலிக்கு முதன்முறையாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதே நேரத்தில் கங்குலிக்கு அடுத்த சில நாட்களில், மேல் சிகிச்சைத் தேவைப்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
சுமார் 5 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பின்னர், கடந்த 7 ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போதில் இருந்து இப்போது வரை கங்குலியின் வீட்டில், அவரை கண்காணித்து வந்தது ஒரு மருத்துவக் குழு. இந்நிலையில் அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட்
ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் எங்கே… எப்போது…?


2021ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டி ஏலத்துக்காக எட்டுஅணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ – யிடம் ஏற்கெனவே ஒப்படைத்துவிட்டன.
இதனை தொடர்ந்து எட்டு அணிகளுக்கான வீரர்களின் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான தொடரை பிசிசிஐ வெற்றிகராம முடித்துவிட்டால் இந்த ஆண்டு ஐபில் தொடரும் இந்தியாவிலேயே நடக்கும் என எதிர்பார்க்கலாம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் துபாயில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
எட்டு அணிகளிலும் உள்ள வீரர்களின் விரவங்கள்… மற்றும் அணியிக்கு தேவையான வீரர்கள் மற்றும் அவர்களிடம் மீதம் உள்ள தொகையின் விவரம்…
சென்னை சூப்பர் கிங்கஸ்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 18
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 7
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.62.10 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.22.90 கோடி
தேவையான வீரர்கள்: 7
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 1
டெல்லி கேப்பிட்டல்ஸ்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 19
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 6
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.72.0982 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.12.90 கோடி
தேவையான வீரர்கள்: 6
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 2
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 16
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 3
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.31.80 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.53.20 கோடி
தேவையான வீரர்கள்: 9
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 5
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 17
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 6
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.74.25 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.10.75 கோடி
தேவையான வீரர்கள்: 8
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 2
மும்பை இந்தியன்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 18
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 4
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.69.65 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.15.35 கோடி
தேவையான வீரர்கள்: 8
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 2
ராஜஸ்தான் ராயல்ஸ்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 17
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 5
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.50.12 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.34.85 கோடி
தேவையான வீரர்கள்: 8
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 3
ராயல் சேலஞ்ஜசர்ஸ் பெங்களூரு
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 12
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 4
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.48.10 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.35.90 கோடி
தேவையான வீரர்கள்: 13
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 4
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 22
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 7
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.74.25 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.10.75 கோடி
தேவையான வீரர்கள்: 3
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 1
கிரிக்கெட்
உல்லாச மோடில் ரிஷப் பன்ட்; தோனி – சாக்ஷியுடன் ஃபன் பார்ட்டி


இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஹாட்-டாப்பிக்காக இருப்பது ரிஷப் பன்ட் தான். சில நாட்களுக்கு முன்னர் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் ஹீரோவாக உருவெடுத்துள்ளது ரிஷப் பன்ட் தான். இரு அணிகளுக்கும் இடையிலான 4வது மற்றும் கடைசி போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று, அணியின் வெற்றியை உறுதி செய்தார் பன்ட். இதனால் இந்திய டெஸ்ட் அணியின் அவரது இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பன்ட், தனக்கு கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தை உல்லாசமாக ரிலாக்ஸ் மோடில் கழித்து வருகிறார்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்ஷி ஆகியோரோடு பன்ட், ஃபன் அவுட்டிங் சென்றுள்ளார். இது குறித்தான போட்டாவை சாக்ஷி, தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அடுத்ததாக இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் டெஸ்ட் ஆரம்பமாகிறது. இந்தப் போட்டியிலும் தொடரிலும் ரிஷப் பன்ட் மீண்டும் அதிரடி பேட்டிங் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.