கிரிக்கெட்
INDvAUS – சதமடித்து அசத்திய ஸ்மித்; அவரைப் போலவே கத்தி கேலி செய்த பும்ரா


இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இரு அணிகளும் இதுவரை நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. இதனால் இந்தப் போட்டியில் வெற்றி பெற தங்களது முழுத் திறனையும் இரு அணிகளும் வெளிக்காட்டி வருகின்றன.
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்தது. அந்த அணி 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 61 ரன்களுக்கு விக்கெட் எதுவும் இழக்காமல் விளையாடி வருகிறது. ரோகித் மற்றும் கில் இந்திய அணி சார்பில் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்காக அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், சதமடித்து கெத்து காட்டினார்.
ஸ்மித், பேட்டிங் செய்யும் போது, பந்தை டிஃபண்டு செய்து ரன் ஏதும் எடுக்க முடியவில்லை என்றால், ‘நோ ரன்’ என்று கத்துவார். இதைப் போலவே இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் செய்து காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
Hahaha @Jaspritbumrah93 reaction on Smith #AUSvIND 🤣🤣 pic.twitter.com/vjgOMokAMn
— Jasprit Bumrah FC (@JBFC93) January 7, 2021
கிரிக்கெட்
INDvENG – “எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்!”- சர்ச்சையைக் கிளப்பும் ஜாக் கிராலி


இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நேற்று அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்குத் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடி இந்திய அணி, 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் அதன் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜாக் கிராலி, அதிகபட்சமாக அரைசதம் விளாசினார். இந்தியாவுக்காக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா அரசைதம் விளாசி தொடர்ந்து களத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் தங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டும் வகையில் மூன்றாவது அம்பயர் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ஜாக் கிராலி.
இந்திய அணி பேட்டிங் செய்த போது, ரோகித் சர்மாவை ஸ்டம்பிங் செய்து அப்பீல் செய்தது இங்கிலாந்து. அது குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மூன்றாவது அம்பயரிடம் சென்றது. அவர் ஒரு சில ஆங்கில்களில் இருந்து மட்டும் ஸ்டம்பிங்கை பார்த்து விட்டு, நாட்-அவுட் கொடுத்து விட்டார். இது சரியில்லை என்பது தான் இங்கிலாந்து அணியின் வாதம்.
இது பற்றி ஜாக் கிராலி, ‘இப்படியான முடிவுகள் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகின்றன. நாங்கள் ஆட்டத்தில் தற்போது பின் தங்கியுள்ளோம். இதைப் போன்ற சமயங்களில் சில முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக மாற வேண்டும் என்று கருதுகிறோம். நான் ஸ்டம்பிங்கில் அவுட், நாட்-அவுட் என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. ஏன் இந்திய அணிக்கான அப்பீல் மட்டும் பல ஆங்கில்களில் இருந்து பார்க்கப்படவில்லை. அது தான் எனது கேள்வி’ என்று கேட்டுள்ளார். இது மிகப் பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது.
காரணம், இந்தப் போட்டியில் மைதானத்தில் இருக்கும் நடுவர்களும், மூன்றாவது அம்பயரும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இந்தியர்களுக்கும் இந்திய அணிக்கும் சாதகமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தான் சர்ச்சையாகி உள்ளது.
கிரிக்கெட்
#INDvsENG | பந்தின் மீது எச்சில் தடவிய ஸ்டோக்ஸ்.. எச்சரித்த நடுவர்!


இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது பந்தின் மீது பென் ஸ்டோக்ஸ் எச்சில் தடவியதைப் பார்த்த நடுவர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
பொதுவாக கிரிக்கெட்டில் பந்து வீசும் போது, நன்கு சுழன்று செல்ல வேண்டும் என்பதற்காக அதை ஈரம் ஆக்க எச்சில் தடவ அனுமதிப்பார்கள். ஆனால் இது கொரோனா காலம் என்பதால் இவ்வாறு பந்தின் மீது எச்சில் தடவ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் நேற்று இந்திய அணியின் முதல் இன்னிக்ஸ் பேட்டிங்கின் 12வது ஓவரை வீசிய பென் ஸ்டோக், பந்தின் மீது எச்சில் தடவினார். இதை கண்ட நடுவர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Cricket in the #COVID19 era! Umpire sanitising the ball after Ben Stokes used saliva. The next time someone does so, the batting team gets five runs.#INDvsENG pic.twitter.com/cuwPxPoxK8
— Samanway Banerjee (@qriosam) February 24, 2021
பென் ஸ்டோக்ஸ்க்கு எச்சரிக்கை விடுத்தது மட்டுமல்லாமல் பந்தின் மீது சானிடைசர் போட்டு துடைத்தனர்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எச்சில் துப்பியதற்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீண்டும் இந்த தவறு நேர்ந்தால், இங்கிலாந்து அணியின் 5 ரன்கள் அபராதமாகக் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 112 ரன்களுக்கு ஆட்டத்தை இழந்தது. அடுத்து விளையாடத் தொடங்கிய இந்திய அணி 33 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் ஷர்மா 57 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னுடனும் ஆட்டாம் இழக்காமல் ஆடி வருகின்றனர்.
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்


அகமதாபாத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதனை அடுத்து தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் 25 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் இந்தியாவின் அக்ஷர் பட்டேல் மிக அருமையாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று நடைபெற்று வரும் மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதும், நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் எண்ட் என்றும் மைதானத்தின் மற்றொரு முனை அதானி எண்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
சினிமா செய்திகள்2 days ago
13 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவுக்கு வரும் இயக்குநர்… வடிவேலுவுக்கு அழைப்பு..!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி… வெறித்தனமாக பயிற்சி செய்யும் ‘தல’ அஜித்!