கிரிக்கெட்
மனைவி மிரட்டுகிறார் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது உயிருக்கு மனைவியால் அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தனக்கு வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் ஷமி மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபட்டதாக அவரது மனைவி குற்றம் சாட்டினார். இதனையடுத்து இதுகுறித்து விசாரித்த இந்திய கிரிக்கெட் வாரியம் முகமது ஷமி எந்த மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை என உறுதி செய்தது.
இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார் ஷமி, இந்நிலையில் வரும் 4-ஆம் தேதி துவங்க உள்ள மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க தீவிர பயிற்சியில் உள்ள ஷமி, தனது மனைவி மிரட்டுவதால், தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்
ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகலா? அதிர்ச்சி தகவல்


ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பேரர்ச்சியாக உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நடராஜன் விளையாடி வருகிறார். அவர் முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய நிலையில் திடீரென அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காயம் பெரிதாக இருப்பதாகவும் ஒரு வாரம் அவர் எழுந்து நிற்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சேர்ந்த ஐதராபாத் அணியின் அதிகாரி ஒருவர் கூறியபோது நடராஜன் காயம் குறித்து அறிக்கை இன்னும் எங்களுக்கு வரவில்லை என்றும் அந்த அறிக்கை வந்தவுடன் அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து பிசிசிஐயிடம் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் இதுகுறித்து கூறிய போது நடராஜனை நாங்கல் மிகவும் எதிர்பார்க்கின்றோம் என்றும், ஆனால் துரதிஸ்டவசமாக அவரது காயம் அதிகம் இருப்பதால் அவர் அணியில் இணைவது சந்தேகம்தான் என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட்
10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு: படிக்கல் அபார சதம்


நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மிக அபாரமாக விளையாடிய படிக்கல் சதமடித்து அசத்தியதோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அதன்பின் 178 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோஹ்லி மற்றும் படிக்கல் ஆகிய இருவருமே ஆட்டத்தை முடித்து விட்டனர். விராட் கோலி 72 ரன்கள் அடித்தார், படிக்கல் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதனையடுத்து படிக்கல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்
IPL- ராஜஸ்தானுடன் டாஸ் போட்ட போது கோலி செய்த காரியத்தைப் பாருங்க!


ஐபிஎல் தொடரில் இன்று 16 வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் நடக்கிறது. ஆர்.சி.பி அணி கோலி தலைமையில் இன்று களமிறங்கியுள்ளது. இளம் கேப்டனான சஞ்ச சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் கண்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸின் போது இரு அணிகளின் கேப்டன்களும் மைதானத்தின் நடுவில் வந்தனர். அப்போது சாம்சன் டாஸ் தோற்றுவிட்டார். ஆனால் தான் டாஸ் வென்றதைக் கூட அறியாத விராட் கோலி, சற்று தள்ளி நின்றார்.
இதனால் ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கோலியை அழைத்து நீங்கள் தான் டாஸ் வென்றுள்ளீர்களர் என்றனர். அதற்கு அவர், ‘மன்னிக்கவும்… நான் டாஸ் வென்று பழக்கம் இல்லை’ என்று கூறி சிரித்தார்.
“I’m not used to winning tosses” 😅 @imVkohli #RCB have the toss and they will bowl first against #RR #VIVOIPL pic.twitter.com/a0bX6JNGak
— IndianPremierLeague (@IPL) April 22, 2021
கோலி இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளிலும் இந்தியாவுக்குத் தலைமை தாங்கிய போதும் மிக அரிதாகவே டாஸ் வெல்வார். இதனால் தான் அவர் அப்படியான ஒரு கருத்தைக் கூறினார். இந்நிலையில் இது குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரைப் பொறுத்த வரையில், ஆர்.சி.பி நல்ல ஃபார்மில் உள்ளது. அதே நேரத்தில் ராயல்ஸ் வெற்றிக்காக திணறி வருகிறது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?