கிரிக்கெட்
IPLல் ஒரு போட்டி கூட சொந்த மைதானத்தில் இல்லை; சாதகமா, பாதகமா?- கோலி கருத்து


ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் நாளை துவங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்ற ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கொரோனா தாக்கத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் முழுவதும் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமலேயே நடத்தப்பட உள்ளது.
மேலும் உள்ளூர் மற்றும் சொந்த மைதானத்தின் சாதகம் அணிகளுக்குக் கிடைத்து விடக் கூடாது என்னும் நோக்கில் ஐபிஎல் நிர்வாகம், இந்த முறை அனைத்துப் போட்டிகளையும் இரு அணிகளுக்கும் பழக்கமில்லாத இடங்களில் நடத்த அட்டவணை போட்டுள்ளது. இப்படி சொந்த மைதானங்களில் ஐபிஎல் அணிகள் விளையாடதது தொடரில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனுமான விராட் கோலி கூறுகையில், ‘உங்கள் சொந்த மைதானத்தில் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவதை விட ஒரு நல்ல உணர்வு இருக்க முடியாது தா். ஆனால், தற்போதைய விதிமுறைகளும் நல்லதுக்கே.
அனைத்து அணிகளும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத மைதானங்களில் தான் விளையாடப் போகின்றன. எனவே இந்த முறை அணியின் பலம் என்பது மிக முக்கியமானதாக இருக்கும். சென்ற ஐபிஎல் தொடர் கூட அந்த காரணத்தினால் தான் கடைசி வரை விறுவிறுக்காபவே சென்றது.
இப்படி போட்டிகள் நடத்தப்படுவது ஐபிஎல் தொடருக்கு நல்லது. ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட்
டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங்: தொடர் வெற்றி பெறுவாரா கோஹ்லி?


இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது
இன்று ஐபிஎல் போட்டியின் பத்தாவது போட்டியின் சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்
இதனை அடுத்து சற்று முன்னர் களமிறங்கிய படிக்கல் மற்றும் விராத் கோலி அதிரடியாக விளையாடி வருகின்றனர். முதல் ஓவரிலேயே அந்த அணி 6 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணி ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றும் தொடர் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
கொல்கத்தா: ரானா, கில், ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், ஷகிப் அல் ஹூசைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரு ரஸல், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன்சிங், பிரதிஷ் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி,
பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், ரஜத் படிதார், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷாபஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், சிராஜ், சாஹல்,
கிரிக்கெட்
நேற்றைய போட்டியில் நடராஜன் களமிறக்கப்படாதது ஏன்? விவிஎஸ் லட்சுமண் விளக்கம்!


நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய அந்த ஹைதராபாத் அணி முதல் 10 ஓவர்கள் வரை ஆட்டத்தை தனது பக்கமே வைத்திருந்தது. ஆனால் அதன் பின் திடீரென ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டு மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன் களமிறக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து ஐதராபாத் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமணன் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:
கிரிக்கெட்
கடைசி நேரத்தில் சொதப்பிய ஐதராபாத்: மும்பை அபார வெற்றி


நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் சொதப்பியதால் தோல்வி அடைந்தது.
நேற்று டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனையடுத்து அந்த அணியின் குவின்டன் டி காக் 40 ரன்களும், பொல்லார்டு 35 ரன்களும் ரோகித் சர்மா 32 ரன்களும் எடுத்ததால், அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால் அதன்பின் மடமடவென விக்கெட்டுகள் விழுந்தன. இதனை அடுத்து இறுதியில் 137 ரன்களுக்கு ஐதராபாத் அணி ஆட்டம் இழந்ததால், மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய பொல்லார்டு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் இதனை அடுத்து மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் பெங்களூர் அணி 4 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும் சென்னை அணி 3வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிரிக்கெட்2 days ago
இன்று தோனிக்கு ஒரு சிறப்பான மேட்ச்: எப்படி தெரியுமா?
-
சினிமா செய்திகள்2 days ago
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!
-
சினிமா செய்திகள்1 day ago
விவேக் மறைவு குறித்து அரசியல் பிரபலங்களின் இரங்கல்கள்!
-
விமர்சனம்2 days ago
ஜோஜி – விமர்சனம்!