இந்தியா
கொரோனா வைரஸ் எப்போ முடியும்.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ப்ளூம்பெர்க்!


கொரோனா வைரஸ் பெருந்தொற்று எப்ப சார் முடிவுக்கு வரும்? இதுதான் இப்போது உலகின் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கடந்துவிட்டாலும் இன்னமும் எல்லாருடைய வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. பல நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணியும் தொடங்கிவிட்டது. புதிய தொடக்கத்திற்கு இது ஒரு அறிவுகுறியாக இருந்தாலும் இப்போது தான் சில நாடுகளில் இரண்டாம் அலையும் பரவ தொடங்கியுள்ளது.ஆனாலும் தடுப்பூசி போடப்படும் அளவை வைத்து ஒரு கணிப்பிற்கு வர முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உலகம் முழுவதிலும் கொரோனா தடுப்பூசி குறித்த மிகப்பெரிய தரவுத்தளத்தை ப்ளூம்பெர்க் உருவாக்கியுள்ளது, இதுவரை ஒட்டுமொத்தமாக 119 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் அந்தோனி ஃபியுசி போன்ற அறிவியல் ஆய்வாளர்கள், விஷயங்கள் எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது 70 முதல் 85 சதவிகிதம் வரை மக்களுக்கு செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். ப்ளூம்பெர்க்கின் தடுப்பூசி டிராக்கரின் படி, சில நாடுகள் மற்ற நாடுகளை விட மிக வேகமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் இறங்கியுள்ளன. ஒரு நபருக்கு 2 டோஸ்கள் என்கிற ரீதியில் 75% அளவை எட்டுவதற்கு முயற்சிக்கின்றன.
உலகிலேயே அதிக தடுப்பூசி விகிதத்தை கொண்ட நாடான இஸ்ரேல், வெறும் இரண்டு மாதங்களில் 75%என்கிற அளவை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. அமெரிக்கா அந்த இலக்கை அடைய 2022 புத்தாண்டு வரை ஆகிவிடும். அங்கும் கூட வடக்கு டகோட்டா டெக்சாஸை விட ஆறு மாதங்கள் முன்பாகவே இந்த எண்ணிக்கையை எட்டிவிடும். உலகின் மற்ற நாடுகளை விட மேற்கத்திய பணக்கார நாடுகளில் மட்டும் விரைவாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுக்கொண்டு இருப்பதால் உலகம் முழுவதும் இந்த இலக்கை அடைய குறைந்தது 7 ஆண்டுகள் கூட ஆகலாம்.
ப்ளூம்பெர்க்கின் கால்குலேட்டர் இப்போது தடுப்பூசி போடப்படும் விகிதத்தை பொறுத்து ஒரு குறிப்பிட்ட கால அளவை வழங்குகிறது. இனி வரும் காலங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் அதிகரித்தால் 75% அளவை எட்டுவதற்கான கால அளவு குறையும். அதேநேரம் தற்காலிக இடையூறுகளினாலும் இந்த கணக்கீட்டில் மாற்றம் ஏற்படக்கூடும். உதாரணமாக குளிர்கால பனிப்புயல் காரணமாக நியூயார்க்கில் தடுப்பூசி போடும் பணி தாமதம் அடைந்தது இதனால் இலக்கை எட்டுவதற்கு 17 மாதங்கள் என கணிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 13 மாதங்களாக குறைக்கப்பட்டது. அதே போல கனடாவுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அங்கு தடுப்பூசி செலுத்தும் விகிதம் பாதியாக குறைந்தது.இப்படியே தொடர்ந்தால் அங்கு 75% இலக்கை அடைய 10 ஆண்டுகள் எடுக்கலாம். ஆனால் கனடா அதிக அளவில் தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளதால் வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகம் எடுக்கலாம்.
தடுப்பூசிகள் அதிகம் உற்பத்தி செய்யப்படும் போது இதன் வேகம் மேலும் அதிகரிக்கலாம். இந்தியா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இருக்கும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையங்கள் இப்போது தான் பெருமளவிலான உற்பத்தியை தொடங்கி இருக்கின்றன. இதுவரை உலகம் முழுவதிலும் சுமார் 8.5 பில்லியன் தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு நாடு மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணியையும் தொடங்கியுள்ளது.
ஹெர்ட் இம்மியூனிட்டியை பெறுதல் :
தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக சில மாதங்கள் உடலை பாதுகாக்கிறது. ஆனால் மக்களில் சிலருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டால் வைரஸ் தடையில்லாமல் பெரும்பான்மையினோருக்கு பரவிக்கொண்டே இருக்கும். அதேசமயம் அதிகமான மக்கள் தடுப்பூசி பெறுவதால் வைரஸுக்கு எதிராக ஒரு கூட்டு பாதுகாப்பை உருவாக்க முடியும். இதனால் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். அதற்காக தான் மக்களில் 75% சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என கூறுகின்றனர். இதை தான் ஹெர்ட் இம்மியூனிட்டி என அழைப்பர்.
முன்னேறிய ஒரு சமூகத்தில் ஹெர்ட் இம்மியூனிட்டி என அழைக்கப்படும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெரும் பொழுது, பெரும்பான்மை மக்கள் பாதுகாக்கப்படுவர். அப்படி அவர்களிடம் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்கும் போது வைரஸ் பரவும் வேகத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு மாற்றத்தை கொடுக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு சமூகத்தில் தட்டம்மை வழக்குகள் இருந்தாலும், மக்களிடம் இருக்கும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஒரு நாடு முழுவதும் பரவாமல் அது தடுக்கிறது.
தடுப்பூசி இல்லாமல் இயற்கையாகவே ஹெர்ட் இம்மியூனிட்டி கிடைக்க பெறுவது சமூகத்தில் பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த பின்னர் ஏற்படுவது. ஆனால் இப்படி ஏற்படுவது எவ்வளவு காலம் நீடிக்கும் மீண்டும் வைரஸ் பரவாமல் தடுக்குமா என்பதற்கான உறுதியான தகவல்கள் இல்லை. மேலும் அதற்காக பெருமளவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட வைப்பதும் ஆபத்தானது என்கிறார்கள். மொத்தத்தில் 75% என்கிற இலக்கை அடையும் போது கொரோனா அச்சத்தில் இருந்து நிச்சயம் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.
இந்தியா
‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..?’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்


கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் எதிர்பாராத பாதிப்புகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் உயர் காக்கும் ஆக்ஸிஜன் சப்ளை தீர்ந்து போயுள்ளன. இதனால் பலர் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் இந்திய பல மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஏற்றுமதி செய்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த அதிர்ச்சிகர தகவலைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது கறார் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
‘நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பதும்” பேரதிர்ச்சியளிக்கிறது.
இதுபோதாது எனத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுள்ள நேரத்தில் – மாநிலத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு டிரான்ஸ்பர் செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
அண்டை மாநில சகோதரர்களும் நம் சகோதரர்களே என்றாலும் – தமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம் எப்படியிருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட இங்குள்ள தலைமைச் செயலாளரிடமோ அல்லது காபந்து சர்க்காரிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ள மத்திய அரசுக்கு மனமில்லை. கொரோனா நோய்த்தொற்று மேலாண்மையில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மத்திய பா.ஜ.க. அரசு திணறுவது மட்டுமின்றி – மாநில அரசுகளை “கிள்ளுக்கீரைகளாக” நினைக்கும் போக்குடன் நடந்து கொள்வது கெடுவாய்ப்பானதாகும்.
நேற்றுவரை ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது என்று கூறி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாக வரும் செய்திகளுக்குக் காரணம் – மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாக அலட்சியமா அல்லது நிர்வாக தோல்வியா? தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்களுக்குத் தெரிந்ததா – கொரோனாவில் செத்துமடியும் மக்களின் உயிர் – கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்படும் மக்கள் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. நிர்வாகத்தில் “உலக மகா நிபுணர்” என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்?’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்தியா
’என் கடைசி குட்மார்னிங் இதுதான்’: இறப்பதற்கு முன்பே ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பெண் டாக்டர்!


இதுதான் எனது கடைசி குட்மார்னிங் என பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவு செய்த பெண் டாக்டர் ஒருவரின் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த மனிஷா யாதவ் என்ற பெண் டாக்டர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மோசமான மோசமாக நடந்ததை அடுத்து அவர் தனது ஃபேஸ்புக்கில் இதுதான் என்னுடைய கடைசி குட்மார்னிங் ஆக இருக்கும் எனக்கே தெரிகிறது, என்னுடைய மரணம் அருகில் வந்துவிட்டது என்று இருப்பினும் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். என்னுடைய உடலுக்குத் தான் அழிவே தவிர ஆத்மாவுக்கு அழிவில்லை, ஆத்மா என்றும் அழிவில்லாதது என்று பதிவு செய்துள்ளார்.
டாக்டர் மனிஷா ஜாதவ்வின் இந்த பேஸ்புக் பதிவு செய்த 36 மணி நேரத்தில் அவர் மரணமடைந்து விட்டார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாக அவரது மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் தனது மரணத்தை முன்கூட்டியே கணித்து பேஸ்புக்கில் பதிவு செய்து அவரது பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
இந்தியாவில் கொரோனாவின் Triple Mutation வகை; வருகிறது அடுத்த ஆபத்து


நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2,000 பேர் இறந்துள்ளார்கள். கொரோனா தொற்று ஆரம்பித்தது முதல் இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை பேர் இத்தொற்று காரணமாக மரணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில் ‘டிரிபிள் மியூடேஷன்’ என்னும் புதிய வகை கொரோனா பரவல் நாட்டில் சில இடங்களில் உருவாகியுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இந்தப் புதிய வகை கொரோனா மூலம், மூன்று வகை கோவிட் வைரஸ்கள் இணைந்து புதிய வகை தொற்றாக உருவெடுத்துள்ளதாக தகவல். இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மேலும் கடுமையானதாக மாற்றும் என்று அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இந்தப் புதிய வகை கொரோனா தொற்று ஏற்கெனவே தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இந்திய அளவிலும், உலக அளவிலும் கொரோனாவில் அதிவேகப் பரவலுக்கு காரணம் இப்படி தொற்று உருமாறி பரவுவது தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தப் புதிய வகை கொரோனா தொற்றை, தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் சமாளிக்குமா என்கிற முக்கியமான கேள்வி எழுப்பப்படுகிறது. பொதுவாக வைரஸ் தொற்றானது, அதிகமாக பரவும் போது, புதிய உரு கொண்டு இன்னும் வீரியமாக பரவப் பார்க்கும். அந்த நிலையில் தான் தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளது. எனவே, டிரிபிள் மியூடேஷன் கொரோனா தொற்றும் அதிவேகமாக பரவ வாய்ப்புள்ளது. இந்தப் புதிய கொரோனா, தடுப்பு மருந்துகளைத் தாண்டியும் உடலில் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அதன் தாக்கம் மற்றும் வீரியம் எந்தளவுக்கு இருகுகம் என்பதை இப்போது கணித்து சொல்லி விட முடியாது என்று விஞ்ஞஞானிகள் கூறுகின்றனர்.
-
கிரிக்கெட்2 days ago
மொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே!!
-
வணிகம்2 days ago
நகை வாங்க சரியான நேரம் (20/04/2021)!
-
சினிமா செய்திகள்2 days ago
படப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி!
-
சினிமா செய்திகள்2 days ago
பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா?