இந்தியா
ஒழியட்டும் இந்தி ஆதிக்கம் ஒழியட்டும்: மாநிலங்களவையில் கெத்து காட்டிய வைகோ!


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதிலிருந்து தனது செயல்பாடுகளால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். குறிப்பாக தமிழக நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வைகோ தற்போது ஊடகங்களில் அடிக்கடி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இந்திய மருத்துவ ஆணைய மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது பல மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து பேசுகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இந்தியில் பேச தொடங்கினார்.
அப்போது குறுக்கிட்ட வைகோ, இது மருத்துவம் குறித்த விவாதம். இதில் நுணுக்கமான சொற்களை ஆங்கிலத்தில் தான் சொல்ல முடியும். எனவே நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள் என வலியுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வடமாநில உறுப்பினர்கள் இந்தியில் தான் பேச வேண்டும் என கூச்சல் போட்டனர். இதற்கு பதில் அளித்த வைகோ, இந்தியில் பேசக்கூடாது. உங்களுக்கு இந்தி வேண்டுமா? இந்தியா வேண்டுமா? உங்களுடைய வெறிப்போக்கு இந்தியாவை உடைத்துவிடும் என்றார்.
இதனையடுத்தும் வடமாநில உறுப்பினர்கள் இந்தியில் தான் பேச வேண்டும் என கோஷம் போட்டனர். அதனைதொடர்ந்து வைகோவும் ஒழியட்டும் இந்தி ஆதிக்கம் ஒழியட்டும் என கோஷமிட்டார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தலையிட்டு, மொழிப் பிரச்சனையால் இங்கே மோதல் ஏற்பட்டது. இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் இங்கே பேசலாம். இனிமேல் திணிப்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்றார்.
இந்தியா
கொரோனா எதிரொலி.. விமான பயணங்களில் இனி உணவு வழங்கல் கட்..!


கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 2 மணி நேரத்துக்குட்பட்ட விமான பயணங்களின் போது உணவு விநியோகிப்பதைத் தடை செய்வதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
2020-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இப்போது கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அடிக்க தொடங்கியுள்ளது.
எனவே பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய அரசு, 2 மணி நேரத்துக்கு உட்பட்ட விமான போக்குவரத்தின் போது உணவு விநியோகிப்பதைத் தடை செய்துள்ளது. விமான பயணத்தின் போதான இந்த உணவு தடையானது ஏப்ரல் 15, வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.68 லட்சம் நபர்கள் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சர்வதேச விமான பயணம் மார்ச் 2020 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 30 நாடுகளுடன் மட்டும் போடப்பட்டுள்ள ஏர் பபுள் ஒப்பந்தத்தின் படி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச விமான பயணங்களில் போது தொடர்ந்து உணவு வழங்கப்படும்.
இந்தியா
‘மம்தாவின் ஆட்டம் க்ளோஸ்…’- சொடுக்குப் போட்டு சவால்விட்ட மோடி


மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ளது.
இந்த முறை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவும் இடையில் தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க போராடி வருகிறது. பாஜக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ‘நந்திகிராமில் மம்தா பானர்ஜி கிளீன் போல்டாகிவிட்டார். மம்தாவின் ஒட்டுமொத்த குழுவினரும் களத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் கூறிவிட்டனர். வங்க மக்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடித்துவிட்டனர். இதனால் நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் பாஜக செஞ்சூரி அடித்துள்ளது.
மம்தாவின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார். திரிணாமுல் கட்சியினர் தலித்களை பிச்சைக்காரர்கள் என கொச்சைப்படுகின்றனர். மம்தாவுக்கு தெரியாமல் அவரது கட்சியினர் இதுபோன்று பேச முடியாது.
மம்தா அவர்களே, உங்கள் கோபத்தை யார் மீதாவது காட்ட விரும்பினால், நான் இங்கே இருக்கிறேன். உங்களது முழு கோபத்தையும் என் மீது காட்டுங்கள். ஆனால் மேற்குவங்கத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம். மம்தா பானர்ஜியின் ஏதேச்சதிகாரத்தை வங்க மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்’ என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்தியா
10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படும் என்று செய்திகள் வெளியானது என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமான மகாராஷ்டிராவில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா அதிகரிப்பு காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வுகள் நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று மாநில கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்களில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் தான் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் மாணவர்களின் நலன் கருதி மகாராஷ்டிரா அரசு எடுத்த இந்த முடிவு சரியானது என்று அம்மாநில கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
தமிழ்நாடு18 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
விமர்சனம்2 days ago
அழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்!
-
கிரிக்கெட்2 days ago
ஷிகர் தவான் அபார ஆட்டம்: சென்னை அணி தோல்வி!