இந்தியா
கொரோனா பாதிப்பால் மாணவியை உள்ளே விடாத கிராமத்தினர்!


கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை கிராமத்தினர் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாநிலங்களைப் போலவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவரது சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்த சிறுமியை கிராமத்திற்குள் நுழைய அனுமதி மறுத்துவிட்டனர்.
இதனை அடுத்து வேறு வழியில்லாமல் வயல்வெளியில் ஒரு சின்ன குடிசையை அவரது பெற்றோர்கள் போட்டுக் கொடுக்க அதில் தான் அந்த சிறுமி 13 நாட்களாக இருந்ததாக தெரிகிறது.
As we get ready to survive another day in #COVID19 world, Sona Devi from Adilabad #Telangana was banished from her village. Sona who is studying intermediate at a gurukul tested positive. She was sent home but village leaders objected. She lives in a shed on village outskirts now pic.twitter.com/KNYjew2enl
— Revathi (@revathitweets) March 31, 2021
இது குறித்து தகவல் அறிந்த தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த கிராமத்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் என்றாலும் கிராமத்திற்குள் உள்ளே நுழைய விடக்கூடாது என்பது தவறானது என்றும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா
மே 1-லிருந்தது அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – இதுதான் விலை!


வரும் மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் மாநில அரசுகள், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
இதையடுத்து நாட்டின் மிகப் பெரிய மருந்து உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம், தங்களின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி என்ன விலைக்கு விற்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து சீரம் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதைப் பரவலாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கிறோம். இந்த அறிவிப்பின் மூலம் நிறைய பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். மேலும், கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியையும் பெருக்கும்.
அரசின் புதிய அறிவிப்பின்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாங்கள் உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பு மருந்தின் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும் 50 சதவீதத்தை மாநில அரசுக்கும் கொடுக்க இருக்கிறோம்.
மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கொரோனா மருந்தின் விலையை 400 ரூபாய்க்கு விற்க உள்ளோம். அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்து 600 ரூபாய்க்கு விற்கப்படும்.
உலகளவில் அமெரிக்காவில், கொரோனா தடுப்பு மருந்தின் விலை 1,500 ரூபாய்க்கு மேல் இருக்கிறது. ரஷ்ய தடுப்பு மருந்தின் விலை 750 ரூபாய்க்கு மேல் உள்ளது. சீன தடுப்பு மருந்தின் விலை 750 ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எங்களின் தடுப்பு மருந்தின் விலை குறைவு என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
இந்தியா
தோனியின் அம்மா அப்பாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல விஐபிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெற்றோருக்கு ஒரு கொரோனா செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தோனி பெற்றோர்கள் ராஞ்சியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர்களது உடலில் ஆக்சிஜன் லெவல் சரியாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிக்காக மும்பையில் இருக்கும் தல தோனி விரைவில் அவரது பெற்றோரை நேரில் சென்று சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தியா
உஷார்.. புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு ஊரடங்கு..!


கொரோனா தொற்று பரவல் காரணமாகப் புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் இரவு நேர ஊடரங்கு மட்டும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட அதிகம் ஆகும்.
சென்ற ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தொடங்கப்பட்டது. பின்னர் சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கு அளிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
-
சினிமா செய்திகள்2 days ago
ஏப்ரல் 23ல் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகிறதா எம்ஜிஆர் மகன்?
-
சினிமா செய்திகள்2 days ago
காரக்குழம்பு சாப்பிட கனியின் வீடுதேடி சென்ற சிம்பு: வைரல் புகைப்படங்கள்!
-
இந்தியா2 days ago
பார்வையற்ற தாய்.. ரயில் தண்டாவாளத்தில் தவறி விழுந்த சிறுவன்.. காப்பற்றிய ரயில்வே ஊழியர்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!