இந்தியா
30 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி43 ராக்கெட்!


பூமியை மிகவும் துல்லியமாக கண்காணிக்கவும், வானிலை குறித்த துல்லிய தகவல்களை பெறவும் உதவும் பிஎஸ்எல்விசி-43 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.58 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் வெளிநாடுகளை சேர்ந்த 30 நானோ செயற்கைகோள்களையும் தாங்கி விண்ணில் பாய்ந்தது.
44.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த சி43 ராக்கெட்டில் புவி கண்காணிப்புக்கான ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. மேலும் அமெரிக்காவை சேர்ந்த 23 செயற்கைக்கோள்களும், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், மலேசியா, கொலம்பியா, ஃபின்லாந்து, நெதெர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளும் இந்த ராக்கெட்டில் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரோ தயாரித்த ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைகோளை புவி வட்டப்பாதையில் 630 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்ற 30 செயற்கைகோள்களை 504 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டு இதனை வடிவமைத்து இன்று விண்னில் செலுத்தியுள்ளது.
இஸ்ரோ தயாரித்த இந்த 380 கிலோ எடைகொண்ட ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் இந்தியாவின் மேலாண்மை வனப்பகுதி, கடலோரப் பகுதி, உள்நாட்டு நீர் நீலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப்பணிக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தியா
காலில் விழக்கூட தயார், ஆக்சிஜன் கொடுங்கள்: மத்திய அரசிடம் கெஞ்சும் மாநில அமைச்சர்!


கொரோனா நோயாளிகள் ஒரு பக்கம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதற்கு ஆக்சிஜன் இல்லாத நிலை பல மருத்துவமனைகளில் உள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் ஆக்சிஜன் சிலிண்டருக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மத்திய அரசின் காலில் விழுவதற்கு தயாராக இருக்கிறேன், தயவுசெய்து ஆக்சிஜனை கொடுங்கள் என்று கூறியுள்ளது பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகளின் உயிரைக் காக்க எங்கள் அரசு தீவிரமாக போராடி வருகிறது. இந்த நேரத்தில் தாழ்மையான முறையில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஆக்சிஜன் பெறுவதற்காக மத்திய அரசின் காலில் விழுவதற்கு கூட தயார் என்று கூறியுள்ளார்.
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் உரிமை மத்திய அரசின் கையில் உள்ளதால் மத்திய அரசை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மாநிலத்தில் போதுமான ஆட்சியை வழங்க மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா
திருடி சென்ற தடுப்பூசி மருந்துகளை மன்னிப்பு கடித்ததோடு திருப்பி கொண்டு வந்து வைத்த திருடர்கள்!


நேற்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 1710 கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த தடுப்பூசி மருந்துகள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்தது.
கொரோனா தடுப்பூசி மருந்துகள் திருடு போனதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்குக்கூட கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மருந்துகள் இல்லாத நிலை இருந்தது. இது குறித்த செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனது தவறை உணர்ந்த திருடர்கள் மீண்டும் திருடிய மருந்துகளை திரும்ப மருத்துவமனையிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அதுமட்டுமின்றி மன்னிப்புக் கடிதமும் எழுதி வைத்துள்ளனர். பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி மருந்துகளை திருடியதற்காக வருந்துகிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்தியா
கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 12 நோயாளிகள் பரிதாப பலி!


கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருபக்கம் கொத்துக்கொத்தாக உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கொரோனா வைரசால் பாதித்தவர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தினால் பலரும் ஆண்டு வருகின்றனர். இந்த நிலையில் சமயத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 12 நோயாளிகள் பலியாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்ற மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 12 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவமனையில் ஏற்படும் விபத்துக்களால் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?