இந்தியா
‘அது வேற வாய்… இது இப்ப என்ன வாய்..?’- பெட்ரோல் விலை உயர்வு; பல்டியடித்த நிர்மலா #ViralVideo


பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்தியில் பாஜக ஆட்சி வருவதற்கு முன்னரும், இப்போது அவர் பேசியுள்ள பேச்சும் வைரலாகி வருகிறது.
2013 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் பேசிய காணொலியில், ‘நாட்டில் உள்ள எளிய மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்று மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால், இப்படி 7 ரூபாய் வரை பெட்ரோல் விலையை உயர்த்தி இருக்காது’ என்று பேசுகிறார்.
#NirmalaTai Then & Now. Lies & Hypocrisy personified! pic.twitter.com/LUrxOrbGFM
— Prashant Bhushan (@pbhushan1) February 22, 2021
அதே நேரத்தில் அவர் சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்குவது குறித்துப் பேசுகையில், ‘இந்தியாவில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் தான், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
காரணம், மத்திய அரசு எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அரசுக்கு அதில் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை.
पेट्रोल-डीज़ल के दाम सरकार के हाथ में नहीं है, ऑइल मार्केटिंग कंपनिया तय करती है दाम
: @nsitharaman#PetrolPrice #PetrolDieselPriceHike pic.twitter.com/vjgtnuHurM
— News24 (@news24tvchannel) February 20, 2021
பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதில் எதாவது வழிகள் இருக்கிறதா என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டாக அமர்ந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அதன் மூலம் எரிபொருட்களுக்கு ஒரு நியாயமான விலையை நிர்ணயிக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இந்த இரு சம்பவங்களின் காணொலிகள் தான் தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ அமைப்பு வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளை ctet.nic.in என்ற இணையதள முகவரியில் அறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 12.47 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் 4.14 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டாம் தாளில் 11.04 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் 2.39 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா
முகேஷ் அம்பானி வீட்டின் முன் வெடிபொருட்களுடன் கார்: கொலை செய்ய திட்டமா?


இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவராகிய முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் வெடிபொருட்களுடன் கூடிய கார் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு இருந்துவரும் நிலையில் அவருடைய வீட்டின் அருகே இன்று காலை மர்மமான முறையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த காரை பாதுகாப்பு படையினர் சோதனை செய்ததில் பயங்கர வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி வீட்டின் முன் பயங்கர வெடி பொருட்களுடன் இருந்த கார் அவரை கொலை செய்ய வந்ததா? என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
‘வெற்றிவேல்…வீரவேல்…’- கோவையில் முழங்கிய பிரதமர் மோடி!


கோவையில் பாஜக பரப்புரையின் போது பிரதமர் மோடி ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழங்கி உள்ளார்.
கோவையில் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னிலையில் இன்று மோடி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவையில் நடந்த பாஜக பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். வெற்றி வேல்… வீர வேல்… என கூறி பரப்புரையை தொடங்கிய மோடி, “மத்திய அரசின் திட்டத்தால் கோவையில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் பயனடைந்துள்ளன. சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ். தமிழர் திருவிழாக்கள் உலகளவில் புகழ்பெற்றவை. பொறியியல், மருத்துவம் போன்ற துறை படிப்புகளை உள்ளூர் மொழிகளிலேயே பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் உள்ளூர் இளைஞர்கள் அதிகப் பயன் பெறுவர். தமிழகத்தில் சிறு, குறு தொழில்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
கோவையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் திட்டம் மூலம் பயன்பெற்றுள்ளன. ஜவுளித்துறையை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது” என்றார்.
-
கிரிக்கெட்2 days ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!
-
டிவி2 days ago
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?