இந்தியா
மர்மமான முறையில் சடலமாகக் கிடந்த மக்களவை எம்.பி..!- தற்கொலை செய்து கொண்டாரா?


மக்களவை எம்.பி மோகன் என்பவர் மர்மமான முறையில் ஹோட்டல் அறை ஒன்றில் சடலமாகக் கிடந்தது பல வித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மஹாராஷ்டிராவில் உள்ள தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி மக்களவை எம்.பி ஆக மோகன் தெல்கர் இருந்தார். இவர் ஒரு சுயேச்சை எம்.பி ஆவார். மும்பையில் உள்ள மரைன் ட்ரைவ் ஹோட்டலில் இவர் சடலமாக இருந்துள்ளார். காவல் துறையினர் இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 9 முறையாக தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி தொகுதி எம்.பி ஆகப் பதவி வகித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு வரையில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் அதன் பின்னர் சுயேச்சையாகிவிட்டார். ஒரே தொகுதியில் 9 முறை வெற்றிப் பெற்று வந்த எம்.பி ஒருவர் திடீரென மும்பையில் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்துள்ளார்.
போலீஸார் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவரது மரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்தியா
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ அமைப்பு வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளை ctet.nic.in என்ற இணையதள முகவரியில் அறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 12.47 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் 4.14 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டாம் தாளில் 11.04 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் 2.39 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா
முகேஷ் அம்பானி வீட்டின் முன் வெடிபொருட்களுடன் கார்: கொலை செய்ய திட்டமா?


இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவராகிய முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் வெடிபொருட்களுடன் கூடிய கார் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு இருந்துவரும் நிலையில் அவருடைய வீட்டின் அருகே இன்று காலை மர்மமான முறையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த காரை பாதுகாப்பு படையினர் சோதனை செய்ததில் பயங்கர வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி வீட்டின் முன் பயங்கர வெடி பொருட்களுடன் இருந்த கார் அவரை கொலை செய்ய வந்ததா? என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
‘வெற்றிவேல்…வீரவேல்…’- கோவையில் முழங்கிய பிரதமர் மோடி!


கோவையில் பாஜக பரப்புரையின் போது பிரதமர் மோடி ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழங்கி உள்ளார்.
கோவையில் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னிலையில் இன்று மோடி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவையில் நடந்த பாஜக பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். வெற்றி வேல்… வீர வேல்… என கூறி பரப்புரையை தொடங்கிய மோடி, “மத்திய அரசின் திட்டத்தால் கோவையில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் பயனடைந்துள்ளன. சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ். தமிழர் திருவிழாக்கள் உலகளவில் புகழ்பெற்றவை. பொறியியல், மருத்துவம் போன்ற துறை படிப்புகளை உள்ளூர் மொழிகளிலேயே பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் உள்ளூர் இளைஞர்கள் அதிகப் பயன் பெறுவர். தமிழகத்தில் சிறு, குறு தொழில்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
கோவையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் திட்டம் மூலம் பயன்பெற்றுள்ளன. ஜவுளித்துறையை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது” என்றார்.
-
கிரிக்கெட்2 days ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!
-
டிவி2 days ago
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?