இந்தியா
கேரள பிஷப் பிராங்கோ கைது.. போலீஸ் அதிரடி!


கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள கேரளா பிஷப் பிராங்கோ தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் இவர் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, இவர் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
கொச்சியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். நேற்றுதான் இவரை தற்காலிகமாக நீக்குவதாக வாடிகன் சர்ச் அறிவித்தது.
இந்த பிஷப் விவகாரம் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா பிஷப் பிராங்கோதான் கைது செய்யப்படும் முதல் கத்தோலிக் பிஷப் ஆவார்.
இந்தியா
கொரோனா எதிரொலி.. விமான பயணங்களில் இனி உணவு வழங்கல் கட்..!


கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 2 மணி நேரத்துக்குட்பட்ட விமான பயணங்களின் போது உணவு விநியோகிப்பதைத் தடை செய்வதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
2020-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இப்போது கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அடிக்க தொடங்கியுள்ளது.
எனவே பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய அரசு, 2 மணி நேரத்துக்கு உட்பட்ட விமான போக்குவரத்தின் போது உணவு விநியோகிப்பதைத் தடை செய்துள்ளது. விமான பயணத்தின் போதான இந்த உணவு தடையானது ஏப்ரல் 15, வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.68 லட்சம் நபர்கள் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சர்வதேச விமான பயணம் மார்ச் 2020 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 30 நாடுகளுடன் மட்டும் போடப்பட்டுள்ள ஏர் பபுள் ஒப்பந்தத்தின் படி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச விமான பயணங்களில் போது தொடர்ந்து உணவு வழங்கப்படும்.
இந்தியா
‘மம்தாவின் ஆட்டம் க்ளோஸ்…’- சொடுக்குப் போட்டு சவால்விட்ட மோடி


மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ளது.
இந்த முறை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவும் இடையில் தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க போராடி வருகிறது. பாஜக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ‘நந்திகிராமில் மம்தா பானர்ஜி கிளீன் போல்டாகிவிட்டார். மம்தாவின் ஒட்டுமொத்த குழுவினரும் களத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் கூறிவிட்டனர். வங்க மக்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடித்துவிட்டனர். இதனால் நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் பாஜக செஞ்சூரி அடித்துள்ளது.
மம்தாவின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார். திரிணாமுல் கட்சியினர் தலித்களை பிச்சைக்காரர்கள் என கொச்சைப்படுகின்றனர். மம்தாவுக்கு தெரியாமல் அவரது கட்சியினர் இதுபோன்று பேச முடியாது.
மம்தா அவர்களே, உங்கள் கோபத்தை யார் மீதாவது காட்ட விரும்பினால், நான் இங்கே இருக்கிறேன். உங்களது முழு கோபத்தையும் என் மீது காட்டுங்கள். ஆனால் மேற்குவங்கத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம். மம்தா பானர்ஜியின் ஏதேச்சதிகாரத்தை வங்க மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்’ என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்தியா
10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படும் என்று செய்திகள் வெளியானது என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமான மகாராஷ்டிராவில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா அதிகரிப்பு காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வுகள் நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று மாநில கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்களில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் தான் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் மாணவர்களின் நலன் கருதி மகாராஷ்டிரா அரசு எடுத்த இந்த முடிவு சரியானது என்று அம்மாநில கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
தமிழ்நாடு18 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
விமர்சனம்2 days ago
அழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்!
-
கிரிக்கெட்2 days ago
ஷிகர் தவான் அபார ஆட்டம்: சென்னை அணி தோல்வி!