இந்தியா
நாசாவின் திட்டத்திற்கு தலைமை தங்கிய இந்திய வம்சாவளி பெண்.. சாதனை படைத்த ஸ்வாதி மோகன்


செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வு மேற்கொள்ள நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் இன்று அதிகாலை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் வழிநடத்துக் குழுவிற்கு தலைமை தாங்கியவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வாதி மோகன் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் ரோவர்களை அனுப்பி வருகிறது. இதுவரை 5 ரோவர் வரை நாசாவால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு முறையும் புதிய கண்டுபிடிப்புகள் கிடைக்கப்பெற்றவுடன் அதன் அடுத்த வடிவத்திலான ரோவர்களை நாசா அனுப்பும்
அந்தவகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு கியூரியாசிட்டி என்கிற அதிநவீன ரோவரை நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. அதன் மூலம் அங்கு பல ஆண்டு காலத்திற்கு முன்பு ஆறுகள் ஓடியதற்கான தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கியூரியாசிட்டியை விட மேம்படுத்தப்பட்ட அதிநவீன பெர்சிவரன்ஸ் எனும் ரோவரை கடந்தாண்டு ஜூலை 30 அன்று நாசா அனுப்பியது.
இது செவ்வாயில் ஒரு மார்ஸ் ஆண்டுகளை அங்கு செலவழிக்கும், பூமியில் அது இரண்டு வருடமாகும். ரோவர் பண்டைய நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகளைத் தேடும், இது செவ்வாய் கிரகத்தின் வாழ்விட வரலாற்றை ஆராய நாசாவின் பணியை முன்னேற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: செவ்வாய் கிரகத்தில் நாசாவின் விண்கலம்: இந்திய பெண் விஞ்ஞானிக்கு குவியும் பாராட்டு
ஒரு சிறிய கார் அளவில் இருக்கும் இந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதுவரை அனுப்பிய ரோவர்களில் மிக அதிக வேகத்தில் செல்லக்கூடியது இந்த பெர்சிவரன்ஸ் ரோவர். மேலும் செவ்வாயின் மேற்பரப்பில் துளையிட்டு ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்ட பிறகு அந்த துகள்களை மேற்பரப்பில் முத்திரையிடப்பட்ட குழாய்களில் சேமித்து வைக்கும்.
இது நாசா அடுத்து 2026 அல்லது 2028 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து திட்டமிட்டுள்ள செவ்வாயில் இருந்து மாதிரிகளை கொண்டுவருவதற்கான திட்டத்திற்கு பெரிதும் பயன்படும் என தெரிகிறது. இந்த நிலையில் தான் இந்த பெர்சிவரன்ஸ் திட்டத்தின் வழிநடத்துக் குழுவிற்கு தலைமை தாங்கியவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது.
யார் இந்த ஸ்வாதி மோகன் ?
நாசாவின் இணையத்தில் இருக்கும் தகவல்களின் படி, ஸ்வாதி மோகன் தன்னுடைய ஒரு வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று குடிபெயர்ந்தார். அவர் வடக்கு வர்ஜீனியா-வாஷிங்டன் டிசி மெட்ரோ பகுதியில் வளர்ந்தார், பின்னர் மெக்கானிக்கல் & ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பி.எஸ். பட்டம் பெற்றார்.
அதன் பின்னர் ஏரோநாட்டிக்ஸ் / ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பிரிவுகளில் எம்.எஸ் மற்றும் பி.எச்.டி பட்டங்களை எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பெற்றார். அதை தொடர்ந்து, சனி கிரகத்திற்கு விண்கலன் அனுப்பும் காசினி மற்றும் நிலவுக்கு இரண்டு விண்கலங்களை அனுப்பிய கிரெயில் என பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.
ஸ்வாதி மோகன் பெர்சிவரன்ஸ் திட்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்தே 2013 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். 2020 மார்ஸ் திட்டத்தின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பட்டு குழுவுக்கு தலைமை தாங்கினார். இந்த திட்டத்தின் வளர்ச்சி பணிகளின் போது இவர் சிஸ்டம் இன்ஜினியராக செயல்பட்டார். வழிகாட்டுதல், ஊடுருவல் மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் திட்டத்தின் மற்ற அணிகளுக்கு இடையேயான முக்கிய தொடர்பாளராக ஸ்வாதி செயல்பட்டார். தற்போது, பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் பணிபுரிகிறார்.
இந்தியா
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் பிரதமர் மோடி நர்ஸிடம் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?



பிரதமர் நரேந்திர மோடி, இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது குறித்தான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஊசி போட்டுக் கொண்ட பின்னர் பிரதமர் மோடி, தனக்கு தடுப்பூசி செலுத்திய நர்ஸிடம் என்ன பேசினார் என்பது குறித்தான தகவல் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில், கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நிறைவுசெய்யாத நிலையில் உள்ளதால், அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த ஐயம் மருத்துவர்களாலும், அறிவியல் அறிஞர்களாலும் எழுப்பப்படுகின்றன.
முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு, இலவசமாக செலுத்தி வருகின்றது. இந்நிலையில் கூடிய விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்று தகவல் வந்துள்ளது. அப்படி விற்பனைக்கு வரும் தடுப்பூசியை எவ்வளவு ரூபாய்க்குள் விற்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, 250 ரூபாய்க்குள்ளாகவே கொரோனா தடுப்பூசி விற்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Took my first dose of the COVID-19 vaccine at AIIMS.
Remarkable how our doctors and scientists have worked in quick time to strengthen the global fight against COVID-19.
I appeal to all those who are eligible to take the vaccine. Together, let us make India COVID-19 free! pic.twitter.com/5z5cvAoMrv
— Narendra Modi (@narendramodi) March 1, 2021
இன்று முதல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதைத் தாண்டி நோயுற்று இருப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிடுகிறது மத்திய அரசு. இப்படியான சூழலில் தான், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள விருப்பப்படும் மக்கள், தாங்கள் விரும்பும் தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அரசு வழிகாட்டியுள்ளது. இதுவரை அரசு மருத்துவமனைகளைத் தவிர, நாட்டில் உள்ள 10,000 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல், நாட்டில் உள்ள 1.15 கோடி முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் உள்ள 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைப் போட இலக்கு வைத்துள்ளது இந்திய அரசு. ஆனால், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் முதற்கட்டத்திலேயே பல முன்களப் பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக முறையான சோதனைகளை நிறைவு செய்யாத பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள சுகாதார ஊழியர்களே பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் வெறும் 11 சதவீதம் பேரே கோவாக்ஸின் மருந்துக்கு ஆர்வம் காட்டியுள்ளனர்.
மக்கள் மனதில் இருக்கும் ஐயத்தைப் போக்கும் வகையில் இன்று டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மோடி. அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸான நிவேதா என்பவர் தடுப்பூசி செலுத்தினார்.
அவர், ‘பிரதமர் இன்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகிறார் என்கிற விஷயம் கடைசி நேரத்தில் தான் எங்களுக்குச் சொல்லப்பட்டது. தடுப்பூசி போட்டு முடித்தப் பின்னர், ‘முடிச்சாச்சா? எனக்கு எதுவுமே தெரியல’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பிரதமர்.
தடுப்பூசி போடும் நேரத்தில் நாங்கள் எல்லாம் எங்கிருந்து வந்து பணி செய்கிறோம் என்று கேற்று பேசிக் கொண்டிருந்தார். அவர் அப்படிப் பேசியது நன்றாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் பிரதமர் மோடி: வைரல் புகைப்படம்



இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பூசி பொதுமக்களுக்கு போட்டு வரும் நிலையில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது
இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் டோஸை பிரதமர் மோடி செலுத்திக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியா
பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் ராகுல்; நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்!


தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று திருநெல்வேலி மாவட்டம் சென்று, பல்வேறு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். தன் பிரச்சாரத்தின் போது அவர், நெல்லை நகரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அது குறித்தான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் வீற்றிருக்கும் திரு நெல்லையப்பர் சுவாமி திருக்கோயிலுக்கு சென்று அவரை வழிப்பட்டார். அங்கு நம் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை அளிக்கப்பட்டது.#TNwithRahulGandhi#VaangaOruKaiPaappom pic.twitter.com/1kKOZyQQcl
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) February 28, 2021
கூட்டங்களில் ராகுல் காந்தி பேசியதாவது:-
தமிழகம் சிரித்தால் நானும் சிரிப்பேன், மகிழ்வேன். தமிழக முதல்வரை ஊழல் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்ததைப் போல,தமிழக மக்களையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கின்றார். தமிழக முதல்வர் தமிழ் மக்களுக்கு தான் அடிபணிய வேண்டுமே தவிர மோடிக்கு அல்ல. தமிழக முதல்வர் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டை ஆள வேண்டும். அவர் மோடிக்கு அடிபணிந்திருக்கக் கூடாது. தமிழக மக்களை மதிக்கும்படியான அரசு உருவாக நாங்கள் உங்களுக்கு உதவியாக இருப்போம்.
கல்வியானது எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். அது பணக்காரர்களுக்கு மட்டுமானது அல்ல. நாம் ஒன்றாக சேர்ந்து ஒரு புதிய திசையை, ஒரு புதிய பாதையை தமிழகத்திற்கு காண்பிப்போம். மேலும் தமிழக இளைஞர்களின் முழு திறனையும் பயன்படுத்தி நாட்டின் பிற பகுதிகளுக்கும் நல்வழி காட்டுவோம்.
அனைத்து மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை மதிக்கக் கூடிய தேசத் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள்.#TNWithRahulAnna#VaangaOruKaiPaappom pic.twitter.com/fjeA5jvx4z
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) February 27, 2021
சீன உற்பத்தியின் சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அது சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை பெருக்குவதன் மூலம் தான் நடைபெறும். இந்த நாட்டில் வேர்வையும், உழைப்பையும் மனதையும் செலுத்தி வேலை செய்பவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை. மாறாக தூங்கி கொண்டு இருப்பவனுக்கு எல்லாம் கிடைக்கின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.