இந்தியா
பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த 4 மாநிலங்கள்: தமிழக அரசும் குறைக்குமா?


பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் மீதான வரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் குறைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன
இந்த நிலையில் முன்னுதாரணமாக நான்கு மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து உள்ளதால் அந்த மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. இதனை அடுத்து தமிழக அரசும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது
கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த 10 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. ஆனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பை விட மத்திய மாநில அரசுகளின் வரிகள் தான் பெட்ரோல் விலையை மிகப்பெரிய அளவில் உயர்த்தி இருப்பதாகவும் எனவே உடனடியாக மத்திய மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர உள்ளதை அடுத்து வாக்காளர்களின் வாக்குகளை கவர்வதற்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தமிழக அரசு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளில் மட்டும் தமிழக அரசுக்கு 13,000 கோடி ரூபாய் வருவாய் வந்து கொண்டிருக்கும் நிலையில் வரியை குறைக்குமா? தமிழக அரசு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தியா
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!


இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று கிடு கிடுவென பரவி வருகிறது. இந்த புதுவகை தொற்று முன்பை இருந்த கொரோனா தொற்றை விட மிக அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பு சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இந்த புதிய உருமாறிய கொரோனா தொற்று மூலம் நாட்டில் சுமார் 7,000 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று அதிர்ச்சியளிக்கும் தகவலைத் தந்துள்ளது CCMB விஞ்ஞானிகள் அமைப்பு. இப்படி உருமாறிய கொரோனா தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சிகர தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு, இந்த கொரோனா தொற்று இருக்கும் 9 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அந்த வகையில் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மூ – காஷ்மீருக்கு வல்லுநர் குழுவை அனுப்பி, உருமாறிய கொரோனா தொற்றுப் பரவல் குறித்து ஆய்வு நடத்த அறிவுறுத்தியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் விதிமுறைகளை முடுக்கிவிடவும், அதிக சோதனைகளை மேற்ளொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது நாட்டில் இருக்கும் கொரோனா ஆக்டிவ் கேஸ்களில் 75 சதவீதம் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் மட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு மாநிலங்களில் கடந்த சில வாரமாக ஆக்டிவ் கேஸ் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இன்று மட்டும் மகாராஷ்டிராவில் 6,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைப் போலவே கேரளாவில் 4,034 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர்..!


உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ளது. மொடேரா பகுதியில் அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு சர்தார் வல்லபாய் படேல் மைதானம் எனப் பெயர் இருந்தது. இந்த மைதானத்தில் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்த போது உரை ஆற்றினார். அப்போது தான் மைதானம் கட்டி முடிக்கப்பட்டு இருந்தது. தொடக்க விழா கூட நடத்தாமல் ட்ரம்ப்- மோடி உரையாற்ற அந்த மைதானம் திறக்கப்பட்டது.
ஆனால், இன்று தான் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இந்த மைதானத்தை திறந்து வைத்து பூமி பூஜை செய்து இந்த மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மைதானம் எனப் பெயர் சூட்டினார். இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் பிங்க் பால் டெஸ்ட் போட்டி இன்று முதல் இந்த மைதானத்தில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பிசிசிஐ செயலர் ஜே ஷா, விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ஆகியோர் பங்கேற்றனர்.
மாரடைப்பின் காரணமாக இரண்டு முறை ஆஞ்சியோ செய்து கொண்ட பிசிசிஐ தலைவர் கங்குலி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியது. ஆனால், ஓய்வில் இருப்பதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Motera in all readiness 😍
Just a few hours left for the #PinkBallTest #INDvENG @Paytm
ARE YOU READY 😎👌🏻 #TeamIndia pic.twitter.com/EdyGsLlQws
— BCCI (@BCCI) February 24, 2021
இந்தியா
வாட்ஸ் அப்-க்கு பதிலாக மத்திய அரசின் ‘சாண்டீஸ் அப் செயலி: என்னென்ன சிறப்பம்சங்கள்?


சமீபத்தில் வாட்ஸ் அப் செயலி திடீரென தனது கொள்கையை மாற்றியது என்பதும் அதனால் வாட்ஸ்அப் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
இந்த நிலையில் இந்தியர்களுக்காக வாட்ஸ்அப் போன்று தனி செயலி உருவாக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது மத்திய அரசு புதிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது.
சாண்டீஸ் அப் என்ற பெயரைக் கொண்ட புதிய செயலி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உருவாகி உள்ளது. சாண்டீஸ் அப் என்றால் ஹிந்தியில் மெசேஜ் என்ற பொருள். அதன்படி இந்த செயலி மூலம் மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை அனுப்பி அனுப்பி கொள்ளலாம்.
மேலும் இமெயில் மூலமும் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம் என்றாலும் அரசாங்க அனுமதி பெற்ற இமெயில் மூலம் மட்டுமே அக்கவுண்ட் ஒப்பன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் அப் செயலியில் ஒரு அக்கவுண்டில் எப்போது வேண்டுமானாலும் மொபைல் என்னை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இதில் அவ்வாறு மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயலி தற்போது அரசு அதிகாரிகள் தகவல்களை பரிமாறிக்கொள்ள மட்டும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளது
-
சினிமா செய்திகள்2 days ago
’தளபதி 66’ படத்தை அட்லி இயக்குகிறாரா? அப்ப ஷாருக்கான் படம் என்ன ஆச்சு?
-
கிரிக்கெட்2 days ago
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா இருக்கலாம்? ஏன்?
-
தினபலன்2 days ago
உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (23/02/2021)
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகத்தில் வேலைவாய்ப்பு!