இந்தியா
டெல்லி போராட்டத்தில் உள்ளவர்கள் போலி விவசாயிகள்.. பாஜக எம்பி கண்டுபிடிப்பு


டெல்லி விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலும் போலி விவசாயிகள் என்று கர்நாடக பாஜக எம்பி முனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக அசாம், பஞ்சாப், உத்திரப்பிரதேச உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் டெல்லி எல்லைக்குள் அனுமதிக்கப்படாததால், அங்கேயே தங்கியிருந்து போராடி வருகின்றனர். மேலும், மூன்று வேளை உணவுகள் சமைத்தும், ஜிம் பயிற்சி மேற்கொண்டும் போராட்டத்தில் உள்ளனர். மற்ற மாநிலங்களிலும் அம்மாநிலங்களுக்குள்ளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உள்ளவர்கள் போலியானவர்களே என்று கர்நாடக பாஜக எம்பி முனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘டெல்லியில் போராடும் விவசாயிகள் பீட்சா, பர்கர் சாப்பிடுகிறார்கள், ஜிம் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இவர்கள் யாவரும் விவசாயிகள் இல்லை. காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட போராட்டக்காரர்கள் தான். சமூக விரோதிகள் பணம் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர்’ இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இதில் விவசாயிகள் மட்டும் இல்லாமல் தன்னார்வலர், தொண்டு நிறுவன ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் பங்கேற்று உள்ளனர்.
இந்தியா
கொரோனா தடுப்பூசி பற்றி தவறாக வதந்தி பரப்பினால் குற்றவியல் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை


கொரோனா தடுப்பூசி குறித்து தவறாக வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கோவாக்ஷின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இருப்பினும் தடுப்பூசி போட்டதால் வெகு சிலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டன. இதற்கிடையே கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு இல்லாதவை என்றும் சமூகவலைதளங்களில் சிலர் பதவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றி தவறான தகவலோ, வதந்தியோ பரப்பினால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளது.
ஏற்கெனவே மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்ன் தடுப்பூசி குறித்து பேசுகையில்,’உலக நாடுகள் எல்லாம் நம்மிடம் தடுப்பூசி வாங்குகின்றன. ஆனால் நம் நாட்டு மக்கள் அதைப் போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள்’ என்று வேதனை தெரிவித்திருந்தார்.
இந்தியா
ரூ.100, ரூ.10, ரூ.5 பழைய ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது? – ரிசர்வ் வங்கி விளக்கம்


இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, புதிய 200 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்தாண்டு புதிய 100 ரூபாய் நோட்டுகள் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், பழைய 5,10, 100 ரூபாய் நோட்டுகள் மார்ச், ஏப்ரல் மாதத்திலிருந்து செல்லாது என்றும் அதன்பிறகு அந்த ரூபாய் நோட்டுகள் இருக்காது என்றும் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இது செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரிசர்வ் வங்கி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது. அதில், பழைய வரிசை கொண்ட ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் செல்லத்தக்கது என்று என்று கூறியுள்ளது.
ஏற்கெனவே 10 ரூபாய் நாணயம் செல்லத்தக்கது என்று கூறி வந்தாலும், இன்னும் சில கிராமப் பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்கிக் கொள்ளால், பயன்படுத்தாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
ராமர் கோவிலுக்கு சோனியா, ராகுல் நிதியுதவி அளித்தார்களா? கோவில் அறக்கட்டளை பதில்


அயோத்தியில் புதிதாக கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் நிதியுதவி அளிப்பார்களா என்பது குறித்து அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் விளக்கமளித்துள்ளார்.
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயிலுக்கு நிதியுதவி திரட்டப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் வாரி வழங்கும் இந்நிதியை, ராம ஜென்மபூமி தீரத் ஷேத்ரா நியாஸ் அறக்கட்டளை பெற்று வருகிறது. கடந்த வாரம் குடியரசுத் தலைவர் தனது பங்கிற்கு 5 லட்சத்து 100 ரூபாய் நன்கொடை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், ராம ஜென்மபூமி தீரத் ஷேத்ரா நியாஸ் அறக்கட்டளையின் பொருளாளர் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கோயிலின் கட்டுமானப் பணிகள், நிதித் திரட்டும் திட்டத்தின் நிலை உள்ளிட்ட பல விஷயங்களைப் பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் கட்சியினரிடம், சோனியா, ராகுலிடம் நிதியுதவி கேட்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அறக்கட்டளைப் பொருளாளர், ‘சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் வீட்டிற்குச் சென்று நிதியுதவி கேட்டால், எந்த அவமரியாதையும் ஏற்படாது என்று யாராவது உத்தரவாதம் அளித்தால் நிச்சயமாக நிதியுதவி கேட்போம்’ என்றார்.
-
சினிமா செய்திகள்2 days ago
பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலின் வீடியோ ரிலீஸ்; அடிச்சுத்தூக்கும் வைரல்!
-
கிரிக்கெட்1 day ago
INDvENG – “பைத்தியக்கார உலகம்…”- இங்கி., – இந்தியா தொடர் குறித்து மைக்கெல் வாகன் கடும் விமர்சனம்!
-
சினிமா செய்திகள்1 day ago
மது போதையில் தகராறு..? சண்டையிடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சிசிடிவி வீடியோ – உண்மை என்ன??
-
டிவி1 day ago
உச்ச கட்ட கோபத்தில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்கள்… விஜய் டிவி-க்குக் குவியும் கண்டனங்கள்!