இந்தியா
பாஜக எம்எல்ஏக்கு எதிராக இளம்பெண் எழுதிய கடிதம் ஏன் எனது பார்வைக்கு வரவில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி!


உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த 17 வயது சிறுமிக்கும் அவரது குடும்பத்துக்கும் எம்எல்ஏ தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக தலைமை நீதிபதிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அந்த கடிதம் அவரது பார்வைக்கு வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது கடந்த ஆண்டு உன்னோவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் அந்த எம்எல்ஏ அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆனால் இளம்பெண்ணின் தந்தை காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தார். இதற்கு சாட்சியாக இருந்த நபரும் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாய், அத்தை மற்றும் வழக்கறிஞருடன் அந்த பெண் காரில் சென்றுகொண்டிருந்த போது லாரி ஒன்று மோதியுள்ளது. அதில் அந்த பெண்ணின் தாய் மற்றும் அத்தை உயிரிழந்துள்ளனர். வழக்கறிஞரும், அந்த பெண்ணும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை ஜூலை 12-ஆம் தேதி எழுதியுள்ளார். அதில் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் கொலை முயற்சி நடத்த வாய்ப்பு இருக்கிறது. எம்எல்ஏ எங்களை மிரட்டி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது வரை இந்த கடிதம் தலைமை நீதிபதியின் பார்வைக்குச் சென்று சேரவில்லை. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் எழுதிய கடிதம் ஏன் என் பார்வைக்கு வரவில்லை? எனக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இதுதொடர்பாக ஒருவாரத்திற்குள் விரிவான பதிலளிக்க உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா
கொரோனா தடுப்பூசி விலையைக் கட்டுக்குள் வைப்பது எப்படி..?- ப.சிதம்பரம் சொல்லும் யோசனை


மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசி கோவிஷீல்ட் வழங்கப்படலாம் என அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசி தயார் செய்துள்ள சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியை விற்பனை செய்வதற்கென விலைப் பட்டியலையும் அறிவித்துவிட்டது. இதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஒரு தடுப்பூசி 150 ரூபாய்க்கும் மாநில அரசுகளுக்கு ஒரு ஊசி 400 ரூபாய்க்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு ஊசி 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாநில அரசு மக்களுக்குத் தருவதை விட மத்திய அரசின் மருத்துவமனைகளிலும் மையங்களிலும் மக்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி குறைந்த விலைக்குக் கிடைக்கும். வெளிநாடுகளில் கொடுக்கப்படும் தடுப்பூசிகளை விட மிகவும் குறைந்த விலையில் இந்தியாவுக்கான தடுப்பூசி உள்ளது என சீரம் நிறுவனம் கூறுகிறது.
அரசு விதிமுறைகளின் அடிப்படையில் சீரம் நிறுவனம் வழங்கும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் 50 சதவிகிதம் மத்திய அரசுக்காக ஒதுக்கப்படும். மீதம் இருக்கும் 50 சதவிகிதம் மாநில அரசுகளுக்கும் தனியார் மையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி விலைகளை குறைவாக மற்றும் சீராக வைத்திருக்க முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ‘மத்திய அரசின் தடுப்பூசிக்குப் பல விலைகளை வைத்துக்கொள்ள அனுமதி அளித்திருப்பது பாகுபாடானது, பிற்போக்குத்தனமானது. மாநில அரசுகள் ஒன்றுசேர்ந்து இந்த முடிவைப் புறக்கணிக்க வேண்டும்.
மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து விலை பேச்சுவார்த்தைக் குழுவை ஏற்படுத்தி முன்னெடுப்பதுதான் சிறந்த வழி. இந்தப் பேச்சுவார்த்தைக் குழு 2 மருந்து நிறுவனங்களுடன் பேசி நாடு முழுவதும் தடுப்பூசிக்கு ஒரே மாதிரியான விலை வைக்கப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரே மாதிரியான விலை வைக்க மருந்து உற்பத்தியாளர்களுக்கு மாநில அரசுகள் சேர்ந்து வலியுறுத்த வேண்டும்.
மாநில அரசுகள் அனைத்தும் இதற்கு உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசு தனது பொறுப்புகளில் இருந்து தவறி, கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்ட சரணடைந்துவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா
ஆக்சிஜன் சிலிண்டர்களை கூகுளில் தேடும் நெட்டிசன்கள்!


இதுவரை ஆக்சிஜன் சிலிண்டர் என்பதையே பலரும் கேள்விப்பட்டிராத நிலையில் தற்போது திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல நெட்டிசன்கள் ஆக்சிஜன் சிலிண்டர் என்றால் என்ன? என்பது குறித்து கூகுளில் தேடி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.30 லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கு செலுத்துவதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கூகுள் தேடுபொறியில் ஆக்சிஜன் தொடர்பான தகவல்களை இந்தியர்கள் தேடி வருவதாக கூகுள் நிறுவனத்தின் ஹிஸ்டரி தெரிகிறது. வரலாறு காணாத ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதை மத்திய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
இந்தியா
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பொது எதிரியை அழிக்க உதவ தயார்: சீனா அறிவிப்பு


கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பொது எதிரியை வீழ்த்த இந்தியாவுக்கு உதவ தயார் என சீனா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்தியா சீனாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் மனித இனத்திற்கே எதிரியாக இருப்பது கொரோனா வைரஸ். மனித குலத்தின் இந்த பொது எதிரியான கொரோனா வைரஸை ஒழிக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏராளமான உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து ஆக்சிஜன் வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளதாகவும் சீனாவின் இந்த அறிவிப்பு குறித்து இந்தியா பரிசீலனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ்நாடு2 days ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)
-
வணிகம்1 day ago
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!
-
கிரிக்கெட்2 days ago
220 ரன்கள் அடித்தும் டென்ஷனான மேட்ச்: சிஎஸ்கே த்ரில் வெற்றி!