இந்தியா
சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்!


மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்துதான் கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தனது உத்தரவில் நீதிமன்றம் மேலும் கூறுகையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டேவுக்கு கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நாங்கள் இந்தச் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம். இது வாழ்வா சாவா என்கிற விஷயமாகும். எனவே இந்த சட்டம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக நாங்கள் கவலையுறுகிறோம். எனவே, இந்தப் பிரச்சனையை எங்களுக்குத் தெரிந்த சிறந்த வழியின் மூலம் தீர்க்கப் பார்க்கிறோம். அதன்படி 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதிக்கிறோம். இந்தப் பிரச்சனயை சரி செய்யும் நோக்கிலேயே நாங்கள் வல்லுநர் குழு அமைக்க உள்ளோம். அதற்கு உரிய வல்லுநர்களின் பெயர்களை எங்களிடம் சமர்ப்பியுங்கள். நாங்கள் அது குறித்து முடிவெடுப்போம்’ என்று கூறினார்.
குடியரசு தினமான வரும் ஜனவரி 26 ஆம் தேதி, டெல்லியில் போராடும் விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளதாக எச்சரித்திருந்தனர். இதை நிறுத்தக் கோரியும் விவசாய சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது நீதிமன்றம்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது மத்திய அரசுத் தரப்பு, ‘உரிய ஆலோசனை மற்றும் ஆய்வுகளுக்குப் பின்னர்தான் விவசாய சட்டங்கள் அமல் செய்யப்பட்டன’ என்று வாதாடியது. அந்த வாதத்தை ஏற்காமல் உச்ச நீதிமன்றம், சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய அரசுக்கும் போராடும் விவசாயிகளுக்கும் இடையிலான பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள மேலும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இரு தரப்புகளுக்கும் இடையில் நடந்த 8 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியையே தழுவியுள்ளன. அதைக் கணக்கில் கொண்டு உச்ச நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு சரிவர செயல்படுவதாக நாங்கள் கருதவில்லை. எதாவது ரத்தக் களறி ஏற்படுகிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்?’ என்ற கறார் கேள்வியைக் கேட்டது.
தற்போதைக்கு வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் தரப்பு நிம்மதி அடையலாம். அதே நேரத்தில், வல்லுநர் குழு, இந்த விவகாரத்தை எப்படி கையாளும் என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. நீதிமன்றத்தால் அமைக்கப்படும் வல்லுநர் குழு, இரு தரப்பையும் ஒரே மாதிரி நடத்துமா என்கிற சந்தேகங்களும் இப்போதே எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தியா
ரூ.100, ரூ.10, ரூ.5 பழைய ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது? – ரிசர்வ் வங்கி விளக்கம்


இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, புதிய 200 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்தாண்டு புதிய 100 ரூபாய் நோட்டுகள் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், பழைய 5,10, 100 ரூபாய் நோட்டுகள் மார்ச், ஏப்ரல் மாதத்திலிருந்து செல்லாது என்றும் அதன்பிறகு அந்த ரூபாய் நோட்டுகள் இருக்காது என்றும் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இது செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரிசர்வ் வங்கி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது. அதில், பழைய வரிசை கொண்ட ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் செல்லத்தக்கது என்று என்று கூறியுள்ளது.
ஏற்கெனவே 10 ரூபாய் நாணயம் செல்லத்தக்கது என்று கூறி வந்தாலும், இன்னும் சில கிராமப் பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்கிக் கொள்ளால், பயன்படுத்தாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
ராமர் கோவிலுக்கு சோனியா, ராகுல் நிதியுதவி அளித்தார்களா? கோவில் அறக்கட்டளை பதில்


அயோத்தியில் புதிதாக கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் நிதியுதவி அளிப்பார்களா என்பது குறித்து அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் விளக்கமளித்துள்ளார்.
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயிலுக்கு நிதியுதவி திரட்டப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் வாரி வழங்கும் இந்நிதியை, ராம ஜென்மபூமி தீரத் ஷேத்ரா நியாஸ் அறக்கட்டளை பெற்று வருகிறது. கடந்த வாரம் குடியரசுத் தலைவர் தனது பங்கிற்கு 5 லட்சத்து 100 ரூபாய் நன்கொடை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், ராம ஜென்மபூமி தீரத் ஷேத்ரா நியாஸ் அறக்கட்டளையின் பொருளாளர் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கோயிலின் கட்டுமானப் பணிகள், நிதித் திரட்டும் திட்டத்தின் நிலை உள்ளிட்ட பல விஷயங்களைப் பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் கட்சியினரிடம், சோனியா, ராகுலிடம் நிதியுதவி கேட்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அறக்கட்டளைப் பொருளாளர், ‘சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் வீட்டிற்குச் சென்று நிதியுதவி கேட்டால், எந்த அவமரியாதையும் ஏற்படாது என்று யாராவது உத்தரவாதம் அளித்தால் நிச்சயமாக நிதியுதவி கேட்போம்’ என்றார்.
இந்தியா
மோடி அரசுக்கு சம்மட்டி அடி: குடியரசு தினத்தன்று டெல்லியில் 100 கிலோ மீட்டர் ‘டிராக்டர் பேரணி’… விவசாயிகள் உறுதி!


மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 60 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் குடியரசு தினமான 26 ஆம் தேதியன்று, டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தி மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க உள்ளது உறுதி என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
புதிய வேளாண் சட்டங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது மட்டும்தான் போராடும் விவசாயிகளின் ஒரேயொரு கோரிக்கையாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் மத்திய அரசு, ‘தேவையென்றால் கொண்டு வந்துள்ள விவசாயச் சட்டங்களில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். ஆனால், சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது’ என்று விடாப்படியாக இருக்கிறது. இதுவரை விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால், எந்தப் பேச்சுவார்த்தையிலும் இரு தரப்புக்கும் இடையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால், தங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக மத்திய அரசு, கடைசி சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது, ‘வேளாண் சட்டங்களை அமல் செய்வதறை ஒன்றரை ஆண்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். போராட்டங்களை கைவிடுங்கள்’ என்றது. ஆனால், ‘நாங்கள் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யச் சொல்கிறோம். தற்காலிக அல்லது இடைக்காலத் தடை எந்த வித நன்மையும் பயக்காது’ என்று நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டனர்.
அந்த வகையில், நாட்டின் குடியரசு தினமான வரும் 26 ஆம் தேதி, லட்சக்கணக்கான டிராக்டர்கள் கொண்டு டெல்லியில் பேரணி சென்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விவசாயிகள் ஆயத்தம் ஆகி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்தப் போராட்டத்துக்கு எதிராக வாதாடிய மத்திய அரசு, ‘இப்படியான பேரணி நம் நாட்டின் குடியரசு தினத்தன்று நடந்தால் அது நாட்டிற்கே மிகப் பெரிய அவமானமாக முடியும்’ என்றது. ஆனால் உச்ச நீதிமன்றம், ‘விவசாயிகளைப் போராடக் கூடாது என்று சொல்லும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அவர்கள் போராட்டத்தை எங்களால் தடுக்க முடியாது’ என்று கூறிவிட்டது.
இப்படியான சூழலில் டெல்லி மாநில போலீஸ், விவசாயிகளின் இந்த மிகப் பெரும் டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்கிறது. அதே நேரத்தில் விவசாயிகள் தரப்பு, ‘பேரணி எப்படியும் நடந்தே தீரும். காவல் துறை எங்களுக்கு கூடிய விரைவில் அனுமதி கொடுக்கும்’ என்கிறது. இந்தப் பேரணி நடந்தால், அசம்பாவித சம்பங்கள் நிகழலாம் என்று அரசுத் தரப்பு எச்சரிக்கை விடுத்தும் விவசாயிகள், ‘நாங்கள் அற வழியில் மட்டும் தான் போராட்டத்தை அரங்கேற்றுவோம். எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாது’ என்று உறுதி அளித்திருக்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிடும் என்று தெரிகிறது.
-
சினிமா செய்திகள்1 day ago
பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலின் வீடியோ ரிலீஸ்; அடிச்சுத்தூக்கும் வைரல்!
-
கிரிக்கெட்1 day ago
INDvENG – “பைத்தியக்கார உலகம்…”- இங்கி., – இந்தியா தொடர் குறித்து மைக்கெல் வாகன் கடும் விமர்சனம்!
-
சினிமா செய்திகள்1 day ago
மது போதையில் தகராறு..? சண்டையிடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சிசிடிவி வீடியோ – உண்மை என்ன??
-
டிவி1 day ago
உச்ச கட்ட கோபத்தில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்கள்… விஜய் டிவி-க்குக் குவியும் கண்டனங்கள்!