இந்தியா
அசாம், மேற்குவங்க மாநிலங்களில் இன்று 2ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!


தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் அசாமில் 39 தொகுதிகளிலும் என மொத்தம் 69 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 30 தொகுதிகளில் 171 பேர்களும் அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 345 பேர்களும் போட்டியிடுகின்றனர்.
சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் ஒருசில தொகுதிகளில் நக்சலைட்டுகள் ஆபத்து இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்பதும் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் மக்கள் அனைவரும் பயமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு


தங்க நகை கடைகளில் ஹால்மார்க் முத்திரை குத்தி விற்பனை செய்துவரும் நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் லீனா நந்தன் அவர்கள் ’தங்க நகைகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்று கூறியுள்ளார். நகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை ஏற்கனவே பலமுறை ஒத்தி போடப்பட்டு உள்ளதாகவும், எனவே ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை இட வேண்டும் என்றும் கூறினார்.
சென்னை உள்பட பல நகரங்களில் இன்னும் ஒரு சில கடைகளில் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் ஆனால் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து அவ்வாறு இனிமேல் விற்பனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் ஹால்மார்க் முத்திரை இடப்பட்டு உள்ளதா என்பதை அறிந்து தங்க நகைகளை வாங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு தங்க நகை கடைக்காரர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா
அதிகரிக்கும் கொரோனா: மேலும் ஒரு மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு!


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்திலும் நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் நாளை முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், இரவு நேர ஊரடங்கின்போது யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்குகள் நீச்சல் குளங்கள் ஆகியவை முற்றிலும் மூடப்பட வேண்டும் என்றும் உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி என்றும் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி என்றும் ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா
இந்தியாவில் இரண்டு லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு!


இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று மட்டும் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இந்த நிலையில் இன்று இரண்டு லட்சத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனால் இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் சுமார் 2 லட்சம் அதாவது 1,98,000 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவில் கொரனோ வைரஸ் இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் முதல் அலையைவிட இரண்டாவது மோசமாக இருப்பதால் மத்திய மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் கொரோனாவால் இதுவரை பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,070,890 எனவும், இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 173,152 எனவும், குணமானோர் எண்ணிக்கை 12,426,146 எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமா செய்திகள்2 days ago
’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்
-
வேலைவாய்ப்பு2 days ago
விருதுநகர் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!
-
கிரிக்கெட்2 days ago
IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!