இந்தியா
ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்ற யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு ஓவைசி கண்டனம்!


ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்ற யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு, மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக சார்பாக உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது “ஹைதராபாத் பெயரை பாக்யநகராக பெயர் மாற்றம் செய்ய முடியுமா என்று பலரும் கேட்கின்றனர். ஏன் மாற்ற முடியாது?
உத்திரப் பிரதேசத்தில் பாஜக் ஆட்சிக்கு வந்த பிறகு பைசாபாத் பெயரை ஆயோத்யா என்றும் அலகாபாத்தை பிரயகராஜ் என்று நாங்கல் பெயர் மாற்றம் செய்துள்ளோம். அதுபோல ஹைதராபாத் பெயரை ஏன் பாக்யநகர் என்ற மாற்றம் செய்ய முடியாது?” என்று பேசினார்.
யோகி ஆதித்யநாத் கருத்துக்குப் பதிலடி அளிக்கும் வகையில் பேசியுள்ள மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதின் ஓவைஸி, “ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல், புதிய பிரதமரைத் தேர்வு செய்வது போல உள்ளது. பாஜக தலைவர்கள் எல்லாம் ஓடி வந்து பிரசாரம் செய்கிறார்கள். அதிபர் டிரம்ப் மட்டும்தான் இன்னும் வரவில்லை. பாஜக அதிகாரத்துக்கு வந்தால் ஹைதராபாத் பெயரை மாற்றம் செய்வார்களாம். உத்திரப் பிரதேசத்திலிருந்து பிரச்சாரத்துக்கு வந்தவரைப் பெயரை மாற்றிவிடுவோம்.
நீங்கள் என ஹைதராபாத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளீர்களா? உள்நாட்டு உற்பத்தியில் தெலுங்கானா 5வது இடத்தில் உள்ளது. உத்திரப் பிரதேசம் 29வது இடத்தில் உள்ளது, இவர்கள் நம்மை விமர்சிக்கிறார்கள். இவர்களுக்கு எப்படியாவது மதவாத அரசியை நுழைத்து, தெலுங்கானாவில் உள்ள அமைதியைக் கொடுக்க முயல்கிறார்கள். வருங்காலத்தில் நமடு சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை யோசித்துப் பார்த்து வாக்களியுங்கள் என்று கூறினார்.
இந்தியா
கொரோனா தடுப்பூசி குறித்த இந்த 5 வதந்திகளை நம்பாதீர்கள்..!- அரசாங்கம்


கொரோனா தடுப்பூசி குறித்துப் பல விதமான வதந்திகளும் கட்டுக் கதைகளும் மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் சில விளக்கங்களை வெளியிட்டுள்ளார்.
- கொரோனா தடுப்பூசி என்பது மற்ற உலக நாடுகளை விட இந்தியாவில் மிகவும் செயல் திறன் குறைந்ததாகத் தான் உள்ளது எனக் கூறுவது கட்டுக்கதை. உண்மையில் இந்தியாவில் வழங்கப்பட உள்ள கொரோனா தடுப்பூசி மிகவும் வீரியமும் துல்லியமும் நிறைந்தது.
- புதிதாக இரண்டாம் கட்டமாகப் பரவும் கொரோனாவுக்கு கோவிட்-19 க்கு என தயார் செய்த தடுப்பூசி பயன் தராது எனச் சொல்வது கட்டுக்கதை. உண்மையில், கொரோனா தடுப்பூசி புதியதாகப் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்தாது என்பதற்கான எந்த ஆதரமும் கிடையாது.
- கொரோனா தடுப்பூசி ஒரு ஆண் அல்லது பெண்ணின் குழந்தை பிறக்க வைக்கும் திறனைக் குறைக்கும் என்பது கட்டுக்கதை. உண்மையில், அப்படி எதுவும் நடக்காது. கொரோனா தடுப்பூசி கருவுறுதலுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது.
- கொரோனா தடுப்பூசி போட்டால் மீண்டும் காய்ச்சல் வரும் என்பது கட்டுக்கதை. உண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டால் ஊசி போட்ட வலி வரும். பொதுவாக ஊசி போட்டாலே ஒரு சிலருக்கு காய்ச்சல் வரும். அது போன்ற காய்ச்சல் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கும் வரும்.
- கொரோனாவுக்கு எதிராகப் பணியாற்றியவர்களுக்கே முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என்பது இல்லை. உண்மையில் முதல் நிலை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை காட்டலாம் என்றே அரசு சொல்லியது.
இந்தியா
போலியோ சொட்டு மருந்து எப்போது வழங்கப்படும்? வெளியானது புதிய அறிவிப்பு!


நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக ஜனவரி-17-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளதா, போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி 2021, ஜனவரி 31-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக ஜனவரி 30-ம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.
2018-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு முதல் அது ஒரு முறையாகக் குறைக்கப்பட்டது. குறைப்புக்கு இந்தியா போலியா பதிப்பு இல்லாத நாடாக மாறி வருவதாகக் கூறுகின்றன.
இந்தியாவில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசமாகப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. கூடுதலாக வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைகளில் கடனம் செலுத்தி போலியோ சொட்டு மருந்தைக் குழந்தைகளுக்குப் போட்டுக்கொள்ளலாம்.
இந்தியா
‘எம்.ஜி.ஆர் வழியில் ராகுல் காந்தி… மக்களோடு மக்களாக அமர்ந்து லன்ச்’- வைரலாகும் வீடியோ


மதுரையில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பொங்கல் பண்டிகையின் போது ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்ப்பதற்கு என்ற் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரும் கேரள எம்.பி-யுமான ராகுல் காந்தி இன்று மதுரை வந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்டு ரசித்தார்.
Significant gesture by @RahulGandhi.. #PoliticalPongal #Pongal pic.twitter.com/kO9PSWDReM
— Pramod Madhav♠️ (@PramodMadhav6) January 14, 2021
காலை வேளை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு பெற்றவுடன் மதுரையில் உள்ள தென்பலஞ்சி பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அங்கு பொங்கல் விழா முடிந்த உடன் அப்பகுதி மக்கள் உடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டார். மதிய உணவை மக்களுடன் மக்களாக அமர்ந்து உணவு சாப்பிட்ட வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருந்தினராக வந்த ராகுலை தம் வீட்டு பொங்கல் விருந்துக்கு அழைத்திட்ட பெண்கள் கூட்டம்!
கோலாகலம் பூண்ட தென்பலஞ்சி கிராமம் #RahulinTamizhVanakkam #VanakkamRahulGandhi pic.twitter.com/tkZrGUss8r— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) January 14, 2021
-
ஆரோக்கியம்2 days ago
வெந்தய ‘டீ’ நன்மைகள் தெரியுமா?
-
விமர்சனம்2 days ago
நல்ல மார்க் வாங்கி இருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் ஆகியிருக்கிறார்… மாஸ்டர் விமர்சனம்…!
-
ஆரோக்கியம்2 days ago
திராட்சையில் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே?
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/01/2021)