இந்தியா
தெலுங்கானாவில் பேருந்து விபத்து.. 52 பேர் பலி


ஹைதராபாத்: தெலுங்கானாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர்.
தெலுங்கானா கொண்டகாட்டு என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 52 பேர் பலியாகி உள்ளனர்.
30க்கும் அதிகமான பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.அங்கு மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனதெரிவிக்கப்படுகிறது.
இந்தியா
14 மணி நேரம் ஆர்.டி.ஜி.எஸ். செயல்படாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பால் பரபரப்பு!


இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் 14 மணி நேரம் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆர்டிஜிஎஸ் என்ற பணம் பரிவர்த்தனை செயல்படாது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கிகளில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கு நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் ஆகிய இரண்டும் பயன்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான வங்கி வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு முறையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த இரண்டிலும் பண பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியா
மாதம் ரூ.6000 கொரோனா நிதியுதவி: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!


இந்தியாவில் கொரனோ வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் நலிவடைந்தவர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கில் கொண்டு அவர்களுக்கு மாதம் ரூபாய் 6 ஆயிரம் நிதி உதவி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரனோ வைரஸ் பரவி வருகிறது. இதனை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் இரவு நேர ஊரடங்குகள், பகல் நேர ஊரடங்குகள் என மத்திய மாநில அரசுகள் பிறப்பித்து வருகின்றன.
கடந்த ஆண்டு கொரோனாவால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு பெரும்பாலான மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் கட்சி இதே கோரிக்கையை மத்திய அரசுக்கு எழுப்பியது. ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நலிவடைந்தவர்களுக்கு பணமாக தரவில்லை என்பது ஏமாற்றத்தைக் உரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
50 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வேண்டும்: மத்திய அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்


தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அங்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கேரளாவுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் உடனடியாக தேவை என்றும் இதனை மத்திய அரசு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள இந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை தீவிரமாக இருப்பதாகவும் உடனடியாக தடுப்பூசியை வழங்க வேண்டும் என்றும் கேரள முதல்வர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் இதனையடுத்து விரைவில் மத்திய அரசு கேரளாவிற்கு தடுப்பூசி அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடு23 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?