கட்டுரைகள்
வெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை? விழித்துக்கொள்ளுமா தமிழகம்?


கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது.
வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை
இப்போது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை மிகவும் விசித்திரமானது.
பொதுவாகத் தனித்தனியாகக் (Solitary Phase) குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கு நிலத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறு பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது அவற்றின் நரம்புமண்டலம் தூண்டப்பட்டு செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் அதன் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்போதுதான் அவை ஆபத்தான அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.
வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தும் படிநிலை
இந்த செரட்டோனின் உடலில் சுரந்த சில மணி நேரங்களில் அவற்றின் குணநலங்களில் பெரும் மாறுதல் ஏற்படுத்துகிறது. தனித்து வாழும் வெட்டுக்கிளிகள் அப்போதுதான் சமூகமாய் ஓத்துழைத்து வாழும் கூட்டு வாழ்வுக்குத் (Gregarious phase) தூண்டப்படுகின்றன. அவற்றின் உணவு உண்ணும் பழக்கம், நடத்தை, வேகம் என அத்தனையும் மாற்றமடைகின்றன. இந்நிலையில் சரியான ஈரப்பதமும் ஈரமண்ணும் வாய்க்கப்பெற்றால் அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவ அமைப்பிலும் நிறத்திலும் ஏன் மூளை அளவிலும்கூட மாறுதல் பெறுகின்றன. இந்த மாற்றங்கள் முட்டைகள் பொரித்தபின் அவற்றின் வளரிளம்
பலநூறு முட்டைகளையிடும் ஒரு வெட்டுக்கிளி தன் வாழ்நாளில் மூன்று முறைகள் வரை முட்டையிடுகிறது. இவை இலைகளில் மட்டுமின்றி மண்ணிற்கு அடியிலும் முட்டையிடுகின்றன. பெரும் கூட்டமாக மிகக்குறைந்த கால அவகாசத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பெருகும் இந்த வெட்டுக்கிளிகள் தம் கண்ணில் படும் பசுமை அத்தனையையும் அழித்து உண்டபடி பெரும்பசியுடன் கூட்டமாய் அடுத்தடுத்த பசுமை நிலங்களை நோக்கி நகர்கின்றன. இவற்றின் கண்ணில்படும் எந்தத் தாவரமும் தப்ப முடியாது. இவை ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர்களுக்கும் மேல்கூட பயணிக்க வல்லவை. தொடர்ந்து பசுமையை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கும் இவை செங்கடலையே தரையிறங்காது தாண்டக்கூடியவை. சில ஆண்டுகள்கூட தொடர்ந்து அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டே தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும் திறன் கொண்டவை. பாலைவன லோகஸ்ட் என்ற வெட்டுக்கிளி இரண்டரை மாதங்கள் முதல் ஐந்து மாதங்கள்வரை வாழக்கூடியது.
ஆச்சரியகரமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அவை தாமாகவே தமது முந்தைய solitary phase ஐ அடைந்து மீண்டும் ஆபத்தற்ற ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்களில் வெறும் 22 இனங்களே இந்த Locust swarm எனப்படும் அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை.
உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன்பெற்றவை என்று National Geographic இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கிறது.
இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது?
அடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர்ந்த வலசை (migration), பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் (!) தாக்கி அழிக்கும் நச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் (Ultra Low Volume) பயன்படுத்தப்படவேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு எச்சம் நீரிலும் நிலத்திலும் கலக்கும் என்பது மறுக்கமுடியாது உண்மை.
இந்த வெட்டுக்கிளிகள் விரைவில் தொடர்ந்து இடப்பெயற்சி அடைந்து விடுவதாலும் பல சதுரகிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்நேரத்தில் இயற்கையிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்துவிட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.
விழிப்புடன் இருக்கிறதா தமிழகம்?
ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் வலசையை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சொல்வதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. மேலும் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பேராசிரியர் அவர்கள் தமிழக அரசும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கிறார்.
கொரோனா விஷயத்தில் முதலில் அரசு மெத்தனமாக இருந்துகொண்டு பின்னர் கைவிரித்தது போன்றில்லாது இப்போதே நம்மிடமிருக்கும் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உரிய தயாரிப்புடன் இருப்பதே விவேகமானது. ஆபத்து நெருங்க வாய்ப்புகள் இருக்கும் நேரத்தில் எவ்வித தாமதமும் இன்றி சில சோதனை முயற்சிகளைச் செய்து முடித்துவிடுவதே விவேகமானது.
தொடரும் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றமும்
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இவ்வுலகத்துக்குப் புதியதல்ல. இஸ்ரயேலர்களிடமிருந்த எகிப்தியர்களைக் காக்க எகிப்தியர்களின் நிலத்தின்மீது கடவுள் வெட்டுக்கிளிகளை ஏவியதான குறிப்புகள் பைபிளில் காணக்கிடக்கின்றன. அக்காலத்திலேயே வெட்டுக்கிளிகள் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே இருந்திருக்கின்றன. எனினும் இன்றைய அதிகரிக்கும் புவி வெப்பமும் காலநிலை மாற்றமும் இந்த அழிவு சக்திக்கு இன்னும் அதிக சாதகமாக இருப்பதை அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆபத்தற்ற solitary phase இல் வாழும் வெட்டுக்கிளிகளை ஆபத்தான Gregarious phase க்கு மாற்றுவது அவற்றின் சுற்றுச்சூழலும் காலநிலையுமே. அதிகரிக்கும் கடல்களின் வெப்பநிலை அதிக ஈரப்பதத்தையும் அபூர்வமான புயல்களையும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தில் ஏற்படுத்தி இந்த வெட்டுக்கிளிகளின் Gregarious phase க்கு மேலும் மேலும் தூண்டக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.
கொரோனா உட்பட உலகெங்கும் நடக்கும் விசித்திரமான தொடர் நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுவது ஒன்றே ஒன்றுதான். காலநிலை மாற்றம். உலக வெப்பமயமாதலின் விளைவுகளை நம் தலைமுறை ஏற்கெனவே சந்திக்கத் தொடங்கிவிட்டது. உலக வெப்பமயமாதல் பூச்சிகளின் பெருக்கத்திலும் நடத்தியிலும் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் ஏற்கனெவே எச்சரித்திருக்கின்றார்கள். மனிதன் பூச்சிக்களை சப்பிட்டு வாழும் காலம் நெருங்கிவிட்டது என்றும் கூறுகின்றனர்.
கட்டுரைகள்
செயல்படுவது முதல் சேமிப்பு வரை.. இந்தியாவில் அனுமதி பெற்ற கோவாக்சின்-கோவிஷீல்டு.. என்ன வித்தியாசம்?
Difference between Covishield and Covaxin. Here all you need to know.


புதுடெல்லி : கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக இந்திய அரசாங்கம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 5 கட்டங்களாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டத்தில் சுகாதார ஊழியர்கள் முன்கள பணியாளர்கள் உட்பட ஒரு கோடி பேருக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே மத்திய அரசு அனுமதித்தால் கோவிஷீல்டு தடுப்பூசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூணவல்லா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்து முறையான பரிசோதனை முடிவுகள் வெளியாகும் முன்பே அதற்கு அனுமதி வழங்கி விட்டதாக சில அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இருப்பினும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் எதை பயன்படுத்தலாம் எதற்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் இந்திய மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் எப்படி செயல்படுகிறது என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி தான் இந்தியாவில் கோவாக்சின் என அழைக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதிலும் இது AZD1222 என்கிற பெயரில் அறியப்படுகிறது. சிம்பன்சி வகை குரங்குகளில் காணப்படும் அடினோ வைரஸ் என்கிற வகை வைரஸை ஜெனிடிக் முறைப்படி மட்டுப்படுத்தி அதற்குள் கொரோனா வைரஸின் சிதைக்கப்பட்ட மரபணுவை செலுத்துவார்கள். இதனால் இந்த அடினோ வைரஸ் கொரோனா வைரஸ் போல கூம்புகள் பெற்று உருமாறும். ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட மரபணுவை செலுத்தியதால் அதற்கு பலம் இருக்காது. இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் லட்சக்கணக்கான கூம்புகளை உருவாக்குகிறது. அதை நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் உடனடியாக தாக்கி அழிக்கும் மேலும் அதை எப்படி அழித்தது என்பதையும் நினைவில் வைத்து உண்மையான கொரோனவைரஸ் பாதிப்பு ஏற்படும் பொழுது அதை தாக்குவதற்கு தயார் செய்யும் பணியையும் இந்த தடுப்பூசி செய்கிறது.
அடுத்தது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி, கொடிய கொரோனா வைரஸின் செயலற்ற வடிவமாக செயல்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளியிடம் இருந்து இந்த ஸ்ட்ரைன் பிரித்தெடுக்கப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியை தயாரிப்பதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அது பின்னர் வழங்கப்பட்டது. வைரஸின் செயலற்ற வடிவத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்தால் அதை தாக்கி அழிக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை தயார்படுத்தும் பணியை இந்த தடுப்பூசி செய்கிறது.
எவ்வளவு பயனுள்ளது ?
இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில், ஆக்ஸ்போர்டு பல்கலைகலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியர்களிடம் 70.4 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் வெவ்வேறு டோஸ் செலுத்தப்பட்டு முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டன, அதில் சராசரியாக 70.4 சதவீத செயல்திறனை இந்த தடுப்பூசி காட்டியதும் கண்டறியப்பட்டது.
பாரத் பயோடெக்கின் தடுப்பூசியான கோவாக்சின், சமீபத்தில் வெளியிடப்பட்ட முதல்கட்ட சோதனை முடிவுகளின்படி, பயனுள்ள மற்றும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி நாட்டின் பல இடங்களில் இன்னும் 3 ஆம் கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது, மேலும் நாடு முழுவதும் 23,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்ட மிகப்பெரிய மூன்றாம் கட்ட சோதனையாகவும் இது திகழ்கிறது.
உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராகவும் செயல்படுமா?
அந்த நிறுவனங்களின் அறிக்கைகளின் படி, இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் பிரிட்டனில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாக்சினின் புரதக் கூறுகள் உருமாற்றங்களையும் கவனிக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதேபோன்று அஸ்ட்ராஜெனெகா தலைமை நிர்வாக அதிகாரியும், தடுப்பூசி கொரோனா வைரஸின் உருமாற்றங்களுக்கும் எதிராக திறம்பட செயல்படும் என்று கூறியுள்ளார். ஆனால் தென் ஆப்ரிக்காவில் பரவி வரும் மற்றொரு வகை கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எத்தனை டோஸ்கள் தேவைப்படும் :
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் வழங்கப்படும். ஆனால் எத்தனை வாரங்கள் இடைவெளியில் அவை செலுத்தப்படும் என்பதை இன்னமும் எந்த நிறுவனங்களும் இன்னமும் உறுதி செய்யவில்லை.
எவ்வளவு வெப்பநிலையில் வைக்க வேண்டும்:
இது முக்கியமான ஒன்று. ஏனெனில் ஃபைசர் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசியை போல -70 டிகிரியில் சேமிப்பு நிலைமைகள் தேவைப்பட்டால் இந்தியா போன்ற நாடுகளுக்கு அந்த குளிர் நிலையில் தடுப்பூசிகளை சேமிப்பது மற்றும் விநியோகம் செய்வதற்கு பெரும் சிக்கல் ஏற்படும். ஆனால், நல்வாய்ப்பாக இந்த இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் சாதாரண குளிர்பதன நிலையில் சேமித்து வைக்க முடியும்.
கட்டுரைகள்
முண்டாசு கவிஞனுக்குப் பிறந்தநாள்! யாருக்கும் தெரியாத ஒரு சம்பவம்!!


இன்று டிசம்பர் 11 ஆம் தேதி. பாரதம் போற்றும் பாரதியாரின் பிறந்தநாள். முண்டாசு கவிஞன் என்று அழைக்கப்படும் பாரதியார், தமிழுக்கும் தமிழகத்திற்கும் புத்துயிர் அளித்தவர். தமிழ் மொழியை உலகறியச் செய்தவர். யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றவர். தமிழுக்கு உயிரூட்டியவர்.
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என குழந்தைகளைக் கொஞ்சுவதிலும், உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொடுதடி என மனைவியிடம் உயிர்கலப்பானதிலும் பாரதியை மிஞ்சி எவரும் இல்லை. தன் வீடு, தன் குடும்பம் என்று இல்லாமல் அனைத்து தரப்பு மனிதர்களும் இறையருளின் வடிவமே என்று ஆன்மீகத்திலும் சுடர்விட்டவர் பாரதியார். இதையே தான் காக்கை சிறகினிலே நந்தலாலா என்ற பாடலில் உட்பொருளாக விவரித்திருப்பார். அந்தப் பாடல்,
காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா –
நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
பாரதியார் இவ்வளவு சித்தி பெற்றவர் என்பது அவருடைய நெருங்கியவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல், மொழி, இனம், மதம், நாடு, உலகம் என அனைத்திலும் உயிர்கலப்பு செய்தவர்.
கட்டுரைகள்
அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன? வெடிக்க என்ன காரணம்?


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில், 70 பேர் பலியானதுடன், 4000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது குறித்த பல காணொளிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
எத்தனை டன் வெடிப்பு?
லெபனான் வெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 2750 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் வெடித்ததாக அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன், டிவீட் செய்துள்ளார். அதாவது இது 27,50,000 கிலோ அளவாகும்!
இந்த அம்மோனியம் நைட்ரேட் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பாதுகாப்பற்ற சூழலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன?
வேதியியல் பெயரில் NH4NO3 என்று அழைக்கப்படும் அம்மோனியம் நைட்ரேட் இயற்கையாக கிடைக்கக் கூடியதாகும். இது அம்மோனியம் நேர்மின் அயனின் நைட்ரேட் உப்பாகி ஒரு வேதி சேர்மத்தில் உருவாகிறது. இது நீரில் எளிதில் கரையக் கூடிய தன்மைக் கொண்டுள்ளது.
சிலியில் உள்ள அடகாமா பாலைவனத்தில் இது அதிகம் கிடைக்கிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரசாயனங்கள் அமோனியம் நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரிந்தவையாகும்.
அம்மோனியம் நைட்ரேட் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது பொதுவாக உரங்களில் பயன்படுத்தப்படுகிறது. குவாரி மற்றும் சுரங்கத்திற்கு ஒரு வெடிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.
அம்மோனியம் நைட்ரேட் வெடிக்க காரணம்?
எந்தவொரு எரிபொருளும் வெடிக்க குறிப்பிட்ட சில காரணங்கள் தேவை. அதேபோல் தான் அமோனியம் நைட்ரேட்டுக்கும். அமோனியம் நைட்ரேட் மிகவும் ஆற்றல் கொண்டது. இது அதிக அளவு வெப்பத்தை வெளியிடுகிறது.
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அம்மோனியம் நைட்ரேட் இருந்தால் அது தீப்பிழம்பு போன்று வெளிப்புற வினைகள் பயன்படாமல் நெருப்பை வெளியிடுகிறது. இவ்வாறு அமோனியம் நைட்ரேட் எளிதில் வெடிக்கிறது. இவ்வாறு வெடிப்பதால் காற்று மாசுபடுவதோடு, பக்கவிளைவுகளையும் அதிகம் ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள் இதுவாகும்.
எரிபொருளுடன் கலந்தால் அல்லது பாதுகாப்பற்ற முறையில் சேமிக்கப்பட்டால் அமோனியம் நைட்ரேட் வெடிக்கும் தன்மை கொண்டிருப்பதால் பேராபத்தை விளைவிக்கக்கூடும்.
தீவிரவாதிகளின் ஆயுதம்
குறைந்த விலையில் தயாரிக்கப்படும் ஆயுதம் அமோனியம் நைட்ரேட். இதை வெடிக்க வைக்க டெட்டனேட்டர் மற்றும் எரிபொருள் மட்டும் தேவைப்படுகிறது.
ஒரு உரக் குண்டு வெடிக்க டெட்டனேட்டர் காரணமாக அமைகிறது. வெடிக்கும் அலையின் ஆற்றல் அம்மோனியம் நைட்ரேட்டை ஆவியாக்குகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதலில், பால்டிக் எக்ஸ்சேன்ஜ் கட்டிட வெடிப்பு, பிஷப்ஸ்கேட், ஓக்லஹோமா நகரம் வெடிப்பு, டாக்லேண்ட்ஸ், மான்செஸ்டர் வெடிப்பு ஆகியவை அமோனியம் நைட்ரேட் குண்டால் நிகழ்த்தப்பட்டவை.
இது போன்று உலகம் முழுவதும் பல சம்பவங்களில், அமோனியம் நைட்ரேட் காரணமாக அமைந்துள்ளது.
This Post Was Originally Published in www.neotamil.com and first appeared as ‘அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன? ஏன்? எப்படி வெடிக்கிறது? முழு விவரம்