பல்சுவை
உலகின் பல இடங்களில் திடீரென உதித்த ‘மர்ம உலோகம்’; இந்தியாவிலும் தோன்றியுள்ளது!


உலகின் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக ‘மர்ம உலோகம்’ ஒன்று பூமியின் அடியிலிருந்து எழுந்து வருகிறது. அந்த பலபலப்பான மாய உலோகம் ஏன் தோன்றியது என்பது குறித்து இதுவரை அறிவியல் பூர்வமாக எவ்வித விளக்கங்களும் அளிக்கப்படவில்லை. மிகுந்த அச்சத்தையும், மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது இந்த திடீர் உலோகம். இந்நிலையில் இந்தியாவிலும் அப்படியொரு மோனோலித் உலோகம் தோன்றியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில்தான் அந்த உலோகம் தலை காட்டியுள்ளது. இது குறித்தான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதுவரை சுமார் 30 நாடுகளில் இந்த மோனோலித் மர்ம உலோகங்கள், திடீரென்று பூமிக்கு அடியிலிருந்து எழுந்துள்ளன. அமெரிக்காவின் உட்டா மாகாணத்திலும் அது தோன்றியுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் அகமதாபாத்தின் அரசுக்குச் சொந்தமான பூங்கா ஒன்றில் தோன்றிய மர்ம உலோகம், குறித்து, ‘மக்களைக் கவரும் நோக்கில் நாங்கள்தான் அதை நிறுவியுள்ளோம்’ என்று அரசுத் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. மக்கள் பீதியடையக் கூடாது என்னும் நோக்கில் அரசு இப்படி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் இந்த திடீர் மானோலித்துகள் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று புரியாமல் பலரும் திணறி வருகின்றனர்.
ஆரோக்கியம்
கோடைக் காலத்தில் நாம் அறியாமல் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்!


கோடைக் காலத்தில் அதிகரிக்கும் சூட்டால், தலைவலி குமட்டல், வெப்ப பக்கவாதம், de-hydration, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே தான் கோடைக்காலம் வந்த உடன் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை என்று கூறுகிறார்கள்.
கோடைக் காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். ஒவ்வொரு பருவ காலத்திற்கும் உடலின் தேவைகள் மாறும். இந்த கோடைக் காலத்தில் நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளைத் திருத்தி, சரியான ஆரோக்கியத்தை பேணுவது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
வெயிலில் சென்று வந்த உடன் குளிர் நீர் குடிப்பது
கோடைக் காலத்தில் வெளியில் சென்று வந்த உடன், பிரிட்ஜில் உள்ள குளிர்ச்சியான நீரை குடிப்பது, ஜூஸ் குடிப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் இப்படி வெயில் சூட்டில் சென்று வந்த உடன் குளிர் நீர், ஜீஸ் குடிப்பது உங்கள் உடலை அதிகளவில் பாதிக்கும். தொண்டை வலி, செரிமான தொல்லைகள் ஏற்படும். எனவே வெளியில் சென்று வந்த உடன் சாதாரண நீரைப் பருகுவதே நல்லது. பிரிட்ஜில் உள்ள நீரைக் குடிப்பதை தவிர்க்கவும்.
காபி குடித்தல்
தலை வலி ஏற்படும் போது காபி குடிப்பதை வழக்கமாகப் பலர் வைத்துள்ளார்கள். காப்பியில் உள்ள காஃபின் தலைவலியைப் போக்கும். ஆனால் காஃபின் உடலில் உள்ள அதிக நேரை உரிஞ்சும். எனவே கோடையில் டீ, காபி குடிப்பது உங்கள் தலைவலியை அதிகரிக்கும்.
குளிர்பானங்கள் குடித்தல்
மிகவும் குளிரூட்டப்பட்ட, பேக் செய்யப்பட்ட குளிர்பானங்களில் அதிக சர்க்கரை இருக்கும். இது உங்களுக்குத் தற்காலிகமாக அதிக ஆற்றலை அளிக்கும். ஆனால் ஒரு சில நாட்களில் ஆற்றலைக் குறைத்துவிடும். எனவே பழ ஜூஸ், நாட்டு சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ் போன்றவற்றைக் குடிப்பதே சிறந்தது.
டையட்
பலர் கோடைக்காலத்தில் உணவுக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியும் என்று திட்டமிடுவார்கள். ஆனால் மந்தநிலை, தலைவலி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். இது போன்ற டையட்களை தவிர்த்து ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது தான் ஆற்றலுடனும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும்.
முட்டை, மீன் மற்றும் சிக்கனை தவிர்த்தல்
முட்டை, மீன் மற்றும் சிக்கன் போன்றவற்றைக் கோடைக் காலத்தில் சாப்பிட்டால் உடல் சூட்டை ஏற்படுத்தும் என்று பலரும் தவிர்ப்பார்கள். ஆனால் அது தவறு. இந்த மூன்றிலும் அதிக புரதம் உள்ளது. இவை கோடைக்காலத்திலும் சரியான உடல் எடையுடன் உங்கள் உடல் எடையை வைத்துக்கொள்ள உதவும். ஆனால் ஆட்டுக் கறி, பீப் மற்றும் பன்றிக்கறியை தவிர்க வேண்டும்.
இந்த கோடைக் காலத்தில் என்ன செய்யலாம் என்று திட்டமிடுவதை விட, ஆரோக்கியத்தை எப்படி பேணிக் காப்பது என்று திட்டமிடுவதே முக்கியம்.
ஆரோக்கியம்
Weight Loss: டயட் இல்லாமலேயே எடை குறைப்பது எப்படி?- டிப்ஸ்


மாறி வரும் உணவுப் பழக்க முறையால் உடல் பருமன் என்பது பெரும்பான்மையான மனிதர்களுக்கு மிகப் பெரும் பிர்ச்சனையாக உள்ளது. இதற்கு தீவிர உடற்பயிற்சி, கடுமையான உணவுக் கட்டுப்பாடு என இருந்தாலும், சில நாட்களில் அனைத்தும் காற்றில் பறந்துவிடும். எனவே எடை குறைப்பில் தொடர்ந்து செய்தலும், வெகு நாட்களுக்கு செய்தலும் மிக முக்கியமான விஷயங்களாகும்.
அப்படி டயட் இல்லாமலேயே உணவில் சில மாற்றங்களைச் செய்தால் எடை குறைப்புக்கு உதவும் சில டிப்ஸ்,
1.காலை உணவு
பலரும் வேலை அவசரத்தில் தவிர்க்கும் ஒரு விஷயம் காலை உணவு. இரவு முழுவதும் பட்டினியாக இருக்கும் வயிறு காலையில் ஊட்டச்சத்துள்ள உணவுக்கு ஏங்கும். அப்படியான நேரத்தில் பட்டினியாக இருப்பது உடலுக்குப் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வரும். காலை உணவைத் தவிர்த்து மதிய உணவைச் சாப்பிட்டால் உடல் எடையும் கூடும்.
2.அதிக புரதம்
புரதச் சத்து என்பது வெறுமனே தசை வளர்ப்புக்கு மட்டுமானது அல்ல, அது எடை குறைப்பிலும் பெரும் பங்காற்றுகிறது. சைவ மற்றும் அசைவ புரதச் சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளப் பழகுங்கள்.
3.ஃப்ரெஷ்ஷாக சாப்பிடுங்கள்
முன்னரே சமைத்த உணவு, பாக்கெட் உணவு மற்றும் உடனடியாக தயார் செய்யக்கூடிய உணவுகளில் அதிக கொழுப்புச் சத்து இருக்கும். அதே நேரத்தில் ஃப்ரெஷ்ஷாக சமைத்தோ, அல்லது பச்சையாக சாப்பிடும் உணவில் அதிக ஊட்டச்சத்துகள் இருக்கும். அதை சாப்பிட பழக வேண்டும்.
4.தண்ணீர்
அதிகம் தண்ணீர் பருகுவது எடை குறைப்பில் மட்டுமல்ல மொத்த ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். விஞ்ஞான ஆய்வுகளிலும் அதிக நீர் பருகுதல் எடை குறைப்புக்கு வித்திடுவது கண்டறியப்பட்டு உள்ளது.
ஆரோக்கியம்
மிக சுவையான சத்துள்ள தேழ்வரகு குலுக்கு ரொட்டி செய்வது எப்படி!


தேவையானவை:
கேழ்வரகு மாவு – அரை கப்
பச்சரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பொடித்த வெல்லம் – கால் கப்
பொடித்த வேர்க்கடலை – 1டேபிள்ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
உப்பு, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
செய்முறை:
கேழ்வரகு மாவை லேசாக வறுத்து அதனுடன் பச்சரிசி மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் நெய் தடவி கனமான தோசைகளாக வார்க்கவும். பின்னர் அதனை சிறு துண்டுகளான ரோட்டி போல் வெட்டிக்கொள்ளவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பாகு ஆக்கி வடிகட்டிக்கொள்ளவும். பின்னர் அதனை மீண்டும் கொதிக்க வைத்து ஓரளவு கட்டி பதம் வந்ததும் வேர்க்கடலை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். இந்த கலவையுடன் ரொட்டி துண்டுகளை கலந்து பரிமாறவும்.
-
தமிழ்நாடு1 day ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?