சினிமா
பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!


நடிகர் கமல் ஹாசன் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிக்ழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட வனிதா பொதுமக்களுக்கு தெரியாத ரகசிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வனிதா பிக்பாஸ் வீட்டிற்கு இருக்கும் போது அங்கு அவரது ராஜ்ஜியம் தான். சக போட்டியாளர்களுடன் சண்டை போடுவது, கத்துவது என போட்டியை விருவிருப்பாக கொண்டு சென்றார். அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. சொல்லப்போனால் பிக்பாஸே வனிதாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார். வனிதாவின் அதிரடிகளை தாங்க முடியாமல் அவருக்கு முன்னால் மற்ற போட்டியாளர்கள் சத்தம்போட்டுக்கூட பேச மாட்டார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா தற்போது யூ டியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அதில் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ஒரு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆஃப் செய்வது போல் தொலைக்காட்சியில் தான் காட்டுவார்கள். ஆனால், ஒரு சில நிமிடங்களில் லைட் போட்டு விடுவார்கள். அந்த வெளிச்சத்திலேயே தான் உறங்க வேண்டும் என்ற ரகசியத்தை கூறியுள்ளார் அவர்.
சினிமா செய்திகள்
சூர்யா-வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் குறித்து அதிரடி அப்டேட்!


வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் ஆனால் அதன்பின் அந்த படம் குறித்த எந்த தகவலையும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படம் ட்ராப் செய்யப்பட்டதாக கூட வதந்தி கிளம்பியது.
ஆனால் ‘வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கண்டிப்பாக ‘வாடிவாசல்’ திரைப்படம் உருவாகும் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்திருந்தார்.
The music work for #VaadiVaasal starts today …. 🔥 @Suriya_offl @VetriMaaran @theVcreations
— G.V.Prakash Kumar (@gvprakash) April 13, 2021
வெற்றிமாறன் தற்போது சூரி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு சூர்யா மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் ‘வாடிவாசல்’ படத்திற்காக இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
நடிகர் செந்தில் குடும்பத்தினர்களுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி


தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
#Vijay65 – வெளியான மாஸ் அப்டேட்!


தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், ‘விஜய் 65’ படத்தை இயக்குகிறார். அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கி முடித்துள்ள ‘டாக்டர்’ படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில வாரங்களில் டாக்டர் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு ரூபாய் 3 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கு அங்கேயே ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் மார்க்கெட்டே இல்லாத பூஜாவிற்கு ரூபாய் மூன்று கோடி சம்பளமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு வரை பூஜாவின் கால்சீட் நிரம்பி இருந்ததாகவும், அவற்றை மாற்றி அமைப்பதற்காக அதிக தொகையை பூஜா கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்ஜியா நாட்டில் விஜய்65 படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த மாத இறுதியில் பூஜா, படக்குழுவினருடன் கலந்து கொள்கிறாராம்.
-
தமிழ்நாடு1 day ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?