டிவி
ஷிவானியால் தான் என் மனைவியைப் பிரிந்தேனா?- முதன்முறையாக நடிகர் அஸீம் விளக்கம்


ஷிவானியால் தான் நடிகர் அசீம் தன் மனைவியை விவாகரத்து செய்தார் என்ற செய்திக்கு முதன்முறையாக நடிகர் அசீம் விளக்கம் கொடுத்துள்ளார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ஷிவானி- அசீம் ஜோடி புகழ் பெற்றனர். அதன் பின்னர் இருவரும் இணைந்து ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடியது பலருக்கும் இவர்கள் காதல் ஜோடிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியது.
அதன் பின்னர் மீண்டும் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் இவர்கள் இணைய நிச்சயமாக இது காதல் தான் என சமுக ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கின. அதன் பின்னர் மனைவியை பிரிவதாக நடிகர் அசீம் அறிவித்தார். ஒரு குழந்தைக்கு தந்தையான அசீம் தற்போது மனைவியை விவகாரத்து செய்திருப்பதே ஷிவானியை திருமணம் செய்யத்தான் என்ற செய்தி வைரலாகப் பரவியது.
இதற்கு முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார் நடிகர் அசீம். அசீம் கூறுகையில், “எனக்கு ஷிவானிக்கும் தொழில்முறை சார்ந்த உறவைத் தவிர வேறு எந்த உறவும் கிடையாது. நான் மனைவியை விவாகரத்து செய்தது எங்கள் இருவர் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம். இதை வைத்து நான் ஷிவானியை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் எனக் கூறும் செய்தியில் உண்மையில்லை. அந்தப் பெண்ணை வேலை பார்க்க விடுங்கள். என் சொந்த வாழ்க்கையில் தலையிடாமல் என்னையும் வேலை பார்க்கவிடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டிவி
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!


சித்தி 2 சீரியலில் தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? என்ற கேள்விக்கு ராதிகாவே பதில் அளித்துள்ளார்.
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே ராதிகா சரத்குமாரின் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உண்டு. அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சித்தி 2 நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது. முழு நேர அரசியலில் கணவர் சரத்குமார் உடன் சேர்ந்து ஈடுபட உள்ளதாக சமீபத்தில் ராதிகா அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சித்தி 2 சீரியலில் மட்டுமிருந்து இல்லாது சின்னத்திரையில் நடிப்பதில் இருந்தே மொத்தமாக விலகிக் கொள்வதாக ராதிகா அறிவித்தார். அடுத்து முன்னணியில் இருக்கும் சித்தி 2 சீரியலில் சித்தி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்வி அதிகப்படியாக எழுந்து காணப்பட்டது.
இதற்கு தற்போது ராதிகாவே பதில் அளித்துள்ளார். ராதிகா கூறுகையில், “நான் சித்தி 2 சீரியல்ல நடிச்சிட்டிருந்த ரோல்-ல யார் யாரோ நடிக்கப் போறாங்கன்னு செய்தி படிச்சேன். அதெல்லாம் பார்த்த போது சிரிப்புதான் வந்துச்சு. நாட்டுல எத்தனையோ விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. சீரியல் தொடர்பா பரப்பப்படுற செய்தியெல்லாம் நான் கண்டுக்கவே மாட்டேன்.
சித்தி 2 சீரியல்ல இனிமே என் கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க மாட்டாங்க. என் கதாபாத்திரம் அப்படியே மறைஞ்சிடும். இளம் நடிகர்களின் கதாபாத்திரங்களின் அடிப்படையில் கதை நகரும். தேர்தல் முடிஞ்சப்பறம் சீரியல் என்னுடைய தேவை இருக்குன்னு சொன்னா அத அப்போ பாத்துக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
டிவி
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?


பிக்பாஸ் தமிழ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 சமீபத்தில் தான் நிறைவு பெற்றது. ஆனால், அதற்குள்ளாகவே சீசன் 5 எப்போது தொடங்கும் என ட்விட்டர்வாசிகள் கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் பிக்பாஸ் தாமதமாகத் தொடங்கப்பட்டது. ஆனால், 2021 பிக்பாஸ் முதல் மூன்று சீசன்களைப் போலவே சரியான காலத்தில் தொடங்கிவிடுமாம்.
ஏறத்தாழ வருகிற ஜூன் மாதம் முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கிவிட்டுள்ளதாம். வழக்கம் போல் சீசன் 5 நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார். ஏப்ரல் அல்லது மே மாதத்துக்குள் தமிழக சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்து விடும் என்பதால் கமலும் ஜூன் மாதம் தயாராகவே இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இப்போது இருந்தே பிக்பாஸ் தமிழ் சீசன் 5-க்கான போட்டியாளர்கள் தேர்வு விஜய் டிவி நிர்வாகத்தில் கலந்து ஆலோசிக்கப்படுகிறதாம். விரைவில் போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
டிவி
இந்த வாரம் ‘குக்கு வித் கோமாளி’-க்கு வரும் பிரபலங்கள் பட்டாளம்… செலிபிரிட்டி ரவுண்ட் புகைப்படம்!


வரும் வாரம் குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டி வாரம் ஆக இல்லாமல் செலிபிரட்டி வாரம் ஆக அமைய உள்ளது.
வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இம்மியூனிட்டி வாரமாக நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த முறை இம்யூனிட்டி வாரம் இல்லை. அதற்கு பதிலாக ஒரு பெரிய பிரபலங்கள் பட்டாளம் கொண்ட செலிபிரிட்டி சுற்றாக குக்கு வித் கோமாளி அமைய உள்ளது.
இதுகுறித்து தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள போஸ்டர் தான் சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்களின் பிடித்தமான நிகழ்ச்சி என்பதால் தொடர்ந்து சீசனை இழுக்க குக்கு வித் கோமாளி டீம் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக செலிபிரேஷன் சுற்று செலிபிரிட்டி சுற்று என விதவிதமாகப் பெயர் வைத்து இழுக்கிறார்கள்.
வரும் வாரம் சீசன் 1 போட்டியாளர்களான வனிதா, உமா ரியாஸ், ரேகா, ரம்யா பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளார்கள். இதுகுறித்த போஸ்டர் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.