சினிமா செய்திகள்
சூரிக்காக புதிய கதையை ரெடி செய்த வெற்றிமாறன்!


வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பதாக இருந்த படத்தில் மிகப் பெரிய மாற்றம் ஒன்று நடந்தேறியுள்ளது.
அசுரன் திரைப்படத்தைத் தொடர்ந்து சூரியை வைத்து வெளிநாட்டில் வேலைக்குச் செல்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த நாவல் ஒன்றைப் படமாக எடுக்க இருந்தார் வெற்றிமாறன்.
இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு அனைத்தும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நடத்தத் திட்டமிட்டு இருந்தனர். கோவிட்-19 ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இப்போது வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்த முடியாத சூழலும் உருவாகியுள்ளது.
அதே நேரம் சூரியை நீண்ட காலமாகக் காத்திருப்பில் வைத்துவிட்டு, இதைக் காரணமாகக் காட்டி சூரியின் படத்தைத் தள்ளிப்போட விரும்பாத வெற்றி மாறன், சத்திய மங்களம் காட்டில் நடப்பது போல ஒரு கதையைத் தயார் செய்துள்ளார்.
எனவே இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெற்றி மாறன் படத்திற்காக நீண்ட தாடியைச் சூரி வளர்த்து வந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு என்ன கெட்டப்புக்கு சூரி மாறுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சூரியின் படத்தை முடித்துவிட்டு, சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குவர் என்று கூறப்படுகிறது. சூர்யாவும் பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்துக்குத் திரும்பச் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
எப்படியோ, சூரியை வெற்றிமாறன் ஹீரோவாக்காமல் விடமாட்டார் போல.
சினிமா செய்திகள்
நடிகர் செந்தில் குடும்பத்தினர்களுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி


தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
#Vijay65 – வெளியான மாஸ் அப்டேட்!


தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், ‘விஜய் 65’ படத்தை இயக்குகிறார். அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கி முடித்துள்ள ‘டாக்டர்’ படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில வாரங்களில் டாக்டர் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு ரூபாய் 3 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கு அங்கேயே ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் மார்க்கெட்டே இல்லாத பூஜாவிற்கு ரூபாய் மூன்று கோடி சம்பளமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு வரை பூஜாவின் கால்சீட் நிரம்பி இருந்ததாகவும், அவற்றை மாற்றி அமைப்பதற்காக அதிக தொகையை பூஜா கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்ஜியா நாட்டில் விஜய்65 படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த மாத இறுதியில் பூஜா, படக்குழுவினருடன் கலந்து கொள்கிறாராம்.
சினிமா செய்திகள்
பார்த்திபன் – ஏ.ஆர்.ரகுமான் இணைந்த புதிய படம்!


தமிழ் சினிமாவில் புதுப் புது முயற்சிகளை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைத் தக்க வைத்திருப்பவர் இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன்.
அவர் கடைசியாக ‘ஒத்த செருப்பு’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் மட்டும் தான் நடித்திருப்பார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் அடுத்ததாக, ‘இரவின் நிழல்’ என்னும் படத்தை எடுக்கிறார் பார்த்திபன். இந்தப் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப் பார்த்திபன் முயன்றுள்ளார்.
இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதை ஏ ஆர் ரகுமான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தெரிவித்துள்ளார். இதைக் குறிப்பிட்டு டிவீட் செய்த பார்த்திபன் இரவின் மடியில் படத்தில் 3 பாடல்கள் முடிந்துள்ளதாகவும், இன்னும் ஒரு ப்ரோமோஷன் பாடலுக்கு இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை ரகுமானும் பார்த்திபனும் இணைந்து ஒரு திரைப்படத்தில் வேலை செய்ததே இல்லை. இதுவரை முதல் முறை ஆகும். இதனால் ரசிகர்கள் மத்தியில் ‘இரவின் நிழல்’ குறித்தான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
-
தமிழ்நாடு24 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?