சினிமா செய்திகள்
மார்ச் 12ல் ‘தல’ அஜித்தின் படம் ரிலீஸ் – ஃபேன்ஸ் ஹாப்பி அண்ணாச்சி!


தல அஜித்தின் பில்லா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இது தல ரசிகர்களுக்கு குஷியான செய்தியாக வந்துள்ளது. பில்லா, வரும் மார்ச் 13 ஆம் தேதி, பல திரையரங்குகளில் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா, அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்பு முனையாக இருந்தது. பல ஃபிளாப் படங்களைக் கொடுத்து வந்த அஜித், பில்லா மூலம் வெற்றிப் பாதைக்குத் திரும்பினார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் ரீமேக் என்பதாலும், அஜித் ரசிகர்களால் இந்தப் படம் அதிகம் கொண்டாடப்பட்டது.
தற்போது அஜித், வலிமை படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
#Billa to re release on March 12th #ThalaAjith #Nayanthara #Namitha #VishnuVardhan pic.twitter.com/uqg7FfchRe
— Nikil Murukan (@onlynikil) February 21, 2021
கடந்த 2019 ஆம் ஆண்டு போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தப் படம் மெகா ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியின் அடுத்தப் படைப்பாக வலிமை உருவாகி வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் விறுவிறுப்பாக நடந்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதாம். இந்நிலையில் அனைத்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளையும் முடித்து, வரும் ஏப்ரல் மாதம் ‘வலிமை’ திரைப்படத்தை வெள்ளித்திரையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.
அதே நேரத்தில் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆகஸ்ட் இரண்டாவது வாரம் படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
அஜித் ரசிகர்கள், ‘படம் சீக்கிரம் வரலைனாலும் பரவாயில்ல. அப்பப்போ அப்டேட் மட்டுமாவது கொடுங்க’ என்று வினோத், போனி கபூரிடம் கெஞ்சி வருகின்றனர். இந்நிலையில் பில்லா படம் ரிலீஸ், தல ரசிகர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தலாம்.
சினிமா செய்திகள்
’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’: சுல்தான் பட நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!


நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’யாரும் இவ்வளவு அழகா பார்க்கலை’என்று விளம்பரம் செய்து உள்ளது.
இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளிவந்து உள்ளது என்பதும் அதேபோல் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலின் டைட்டில் தான் ’யாரும் இவ்வளவு அழகா பார்க்கலை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ திரைப்படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
Here we go… #Sulthan2ndSingle
“Yaaraiyum ivlo azhaga parkala”
from March 5th Friday 7pm.
A Vivek-Mervin Musical @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k #சுல்தான் #Sulthan2ndSingleFromMarch5th pic.twitter.com/1ZlwrXfkVu
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 3, 2021
சினிமா செய்திகள்
ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரசிகர்கள் மகிழ்ச்சி!


செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று திடீரென நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி ஊடகங்களில் பரவியது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திட்டமிட்டபடி மார்ச் 5ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் இந்த படத்திற்கான அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
#NenjamMarapadhillai 3 days to go paartha udane varathu thaan Kaadhal ; pakka paaka varadhu Gajjuu @selvaraghavan @iam_SJSuryah @ReginaCassandra @Nanditasweta @Arvindkrsna @editor_prasanna @Madan2791 @kbsriram16 @APVMaran @V4umedia_ @teamaimpr pic.twitter.com/UTwr0TxPG5
— RIAZ K AHMED (@RIAZtheboss) March 3, 2021
சினிமா செய்திகள்
மின்னல் வேகத்தில் உருவாகி வரும் சூர்யா – பாண்டிராஜ் படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஃபுல் ஸ்பீடில் நடந்து வருவதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகிவிடும் என்றும் தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் சூர்யாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதற்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து பூரண உடல் நலம் பெற்று விட்டார். இருந்த போதிலும் வீட்டுத் தனிமையில் சூர்யா இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, சூர்யாவின் அடுத்தப் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பித்தது. அவர் பட பூஜையில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து பூரண உடல் நலம் பெற்று படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்க ஆரம்பித்தார்.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். பிரயங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படங்களை மிகக்குறுகியகாலத்தில் எடுத்து முடிப்பதில் இயக்குனர் பாண்டிராஜ் பெயர் போனவர். முன்னதாக சென்னையில் இந்தப் படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை பாண்டிராஜ் முடித்துள்ளார். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 16-ம் தேதியுடன் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து விட பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துரிதமாக முடித்து படத்தை கோடையில் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் மாபெரும் வெற்றி பெற்றது படம். இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 40வது படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை முடித்து விட்டு, அடுத்ததாக இயக்குநர் வெற்றி மாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா.
-
இந்தியா1 day ago
தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்!
-
தமிழ்நாடு1 day ago
எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா?
-
இந்தியா1 day ago
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா?
-
இந்தியா2 days ago
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்!